இது பூக்களின் காலம் . . .பள்ளிகள் செய்வோம்

விலைகொடுத்தும்
கல்வியை வாங்கலாம்
இலவசமாய்க் கிடைக்குமா வேலை?
- ஆசுரா
மதம் போதித்ததைவிட
உலகமெங்கும் கல்வியைப் போதித்தது
கிறிஸ்தவம்

சோழ நாட்டு
அந்தப்புரங்கள் அனைத்தும்
பள்ளிகளாயின
‘கோவில்கள் அனைத்தையும்
பள்ளிகள் செய்வோம்’
என்றான் முண்டாசுக் கவி

மூன்று மைல்களுக்கு
ஒரு பள்ளியயன்றார்
பெருந்தலைவர்

திண்ணையில் இருந்து
மரத்தடிக்கு வந்தது கல்வி - பின்
மரத்தடிகள்தானே
பள்ளிகள் ஆயின!

சரஸ்வதியின்
கண்கள் திறந்திருந்தும்
கல்வி காசாகிப்போனது
நீதித் தேவதையின் கண்கள்
கட்டப்பட்டது போல்
எல்லாம் இலவசம்
என்கிறார்கள்

வேலை?
மாவட்டங்கள் தோறும்
வேலை வாய்ப்பு அலுவலகம்
வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது

தமிழ் நாட்டில்
1.5 காலி இடங்கள்
நிரப்பப்படுமா?
இதில் வேடிக்கை என்ன தெரியுமா?

70 லட்சம் பேர் வேலைக்காகக் காத்திருக்கிறார்கள்
கிடைக்குமா?  பட்டதாரிகளே
கனவு காணுங்கள்  2020-ல்
இந்தியா வல்லரசு!

ஜே. தமிழ்ச்செல்வன்

0 comments:

Post a Comment