இறைபதமே ஞானத்தின் ஊற்று

புனித ஜான் மரிய வியான்னி (1786 - 1859) ஆர்ஸ் கிராமத்தின் பங்குத் தந்தையாக இருந்தபோது அவரிடம் பாவசங்கீர்த் தனம் செய்யவும் அவரின் மறையுரைகளில் வெளிப்படும் ஞானத்தைப் பெறவும் அநேக மக்கள் ஆர்ஸ் நகருக்குப் பெருங்கூட்டமாய் வந்தார்கள்.
சாதாரண மக்கள் மட்டுமல்ல குருவானவர்கள், ஆயர்கள், கர்தினால்கள், துறவுமடப் பெரியோர்கள் வந்து அவரிடம் மறையுரைகளில் வெளிப்பட்ட தெய்வீக ஞானத்தைக் கண்டு அதிசயமடைந்தார்கள்.  குருத்துவப் பயிற்சியின் போது ஞானம் இல்லை, அறிவு இல்லை, பேச்சுத் திறமை யில்லை, சிந்தனை ஆற்றல் இல்லை எனக் கருதி குருப்பட்டம் இவருக்குக் கொடுக்கவே தயங்கியவர்கள் இவரில் வெளிப்பட்ட ஞானத்தைக் கண்டு வியந்தார்கள்.
19ஆம் நூற்றாண்டில் மிகவும் புகழ் வாய்ந்த மறையுரையாளர், பெயர் பெற்ற ஞான வல்லுனர், குருமடப் பேராசிரியர் லக்கோர்தேர் என்பவர் புனித ஜான் மரிய வியான்னியிடம் பேசி, உரையாடி, ஆலோசனைகளைப் பெற்றபின் மிகவும் மகிழ்வுடன் திரும்பிச் சென்றார்.
அவரின் வருகையைக் குறித்து ஜான் மரிய வியான்னி குறிப்பிடும்போது “ஒரு மலை மடுவைத் தேடி வந்திருக்கிறது.  ஞானமுள்ளவர் ஞானமற்ற என்னைக் காண வந்தார்.  அறிவிற்சிறந்தவர் அறிவற்ற என்னிடம் வந்து ஆலோசனை பெற  வந்தார்” என்றார்.
ஜான் மரிய  வியான்னியிடம் அபூர்வ சிந்தனைகளும் ஞானக் கருத்துக் களும் வெளிப்பட்டன.  அவர் எந்த ஞானியிடம் போக வில்லை.  அறிவாளியை நாடவில்லை.  கருத்துக் குவியலைக் கொண்டிருக்கும் புத்தகங்களைப் படிக்கவில்லை.  அவர் ஞானத்தைத் தேடி திவ்விய நற்கருணை நாதரின் பாதத்தண்டை வந்தார்.  வேதாகமத்தை இதயத்தில் பதித்தார்.  இறைவனின் மெல்லிய ஆலோசனைகளை ஜெபத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமை யால் உய்த்து உணர்ந்தார்.  அங்கு பெற்ற ஞானத்தையே மக்களுக்குப் போதித்தார்.
வேதாகமத்தில் “உங்களில் எவருக் காவது ஞானம் குறைவாயிருந்தால் அவர் கடவுளிடம் கேட்கட்டும்.  அவருக்குக் கொடுக்கப்படும்.  முகம் கோணாமல் தாராளமாய்க் கொடுப்பவர் அவர்” என்கிறார் புனித யாக்கோபு (1:5).
பாலன் இயேசுவைத் தேடி கீழ்த்திசை ஞானிகள் ஒட்டகத்தின்மீது ஏறி பாலைவனப் பயணம் செய்து எருசலேம் நகர் வருகிறார்கள்.  அவர்கள் ஞானத்தைக் கொண்டிருப் பவரும் அதிசய ஆலோசனையின் கர்த்தராகிய தேவ பாலன் இயேசுவை ஆராதனை செய்ய அதிசய விண்மீனைப் பின்பற்றி எருசலேம் நகர் வருகிறார்கள்.
விண்மீன் மறைவினால் யூதாவின் சிற்றரசன் ஏரோதிடம் “யூதாவின் அரசர் பிறந்திருக்கிறாரே அவர் எங்கே?  அவருடைய விண்மீன் எழுதலைக் கண்டு அவரை வணங்க வந்தோம்” என்கிறார்கள்.
மூன்று ஞானிகள் கீழ்த்திசை நாடுகளில் ஒன்றான அசிரியா, பாபிலோன் அல்லது பெர்சியா நாடுகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.  மெடஸ் (னிedeவி) என்ற குருகுலத்தைச் சேர்ந்தவர்.  சொராஸ்டர் மதக் கொள்கை உடையவர்கள்.  அரசியலிலும் மக்கள் மதிப்பிலும் உயர்ந்து காணப்பட்டவர்கள்.  நாட்டின் ஆளுமையில் பங்கு பெற்ற அறிஞர்கள்.
மேலும் அவர்கள் வானசாஸ்திரி களாய் இருந்தார்கள்.  வானத்தின் நட்சத்திரங் களையும் ஆராயும் ஞானத்தைக் கொண்ட வர்களாயும் இருந்தார்கள்.  ஆராய்ச்சியின் வல்லுனர்களாய் இருந்ததால் அதிசய விண்மீனின் வெளிப்பாட்டை  அறிந்து ஞானத்தின் கர்த்தரை வணங்கக் கீழ்த்திசை நாட்டிலிருந்து பல மாதங்கள் பாலை வனத்தில் பயணம் செய்து பாலன் இயேசுவை மாட்டுக் கொட்டத்தில் கண்டு நெடுஞ்சான்கிடையாக விழுந்து ஆராதிக்கிறார்கள்.
உலக ஞானத்தில் சிறந்தவர்கள் ஞானத்தின் கர்த்தரைத் தேடி மாட்டுக் கொட்டிலில் கிடத்தப் பட்டிருக்கும் பாலன் இயேசுவை ஆராதிக்கிறார்கள்.  தெண்டனிடுகிறார்கள்.  மூன்று காணிக்கைகளை அர்ப்பணித்து இயேசுவை இரட்சகராகவும் குருவாகவும் அரசராகவும் ஏற்றுக் கொள்கிறார்கள்.  ஞானத்தில் சிறந்தவரும், மறை வல்லுனரும், நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதி இறை ஞானத்தை வெளிப்படுத்திய வருமான பேராயர் புல்டன் சீன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“நான் எவ்விடத்தில் இருப்பினும், என் அறைக்கு அடுத்த அறை திவ்விய நற்ளகருணை ஸ்தாபகம் உள்ள சிற்றாலயமாகத்தான் இருக்கும்.  குறைந்தது ஒரு மணி நேர திவ்விய நற்கருணை சந்திப்பில் பெற்ற ஞானக் கருத்துக்கள்தான் என்னிடமிருந்து வெளிப்பட்டன” என்கிறார்.
இன்று நாம் ஞானமுள்ளவர்களாய் வாழ, நடந்து கொள்ள இயேசுவின் பாதப் படியில் மணிக்கணக்காய் அமர்வோம்.  அவரின் ஆலோசனைக்குச் செவிமடுப்போம். ஆமென்.
Fr. ச. ஜெகநாதன், அருப்புக்கோட்டை

இது பூக்களின் காலம் . . . இயல்பே நிரந்தரம்

தம்பதி ஒன்று
தவம் கிடக்கிறது குழந்தைக்கு
பனிக்குடம் உடைய
பத்தியம் இருக்கிறது
ஒரு குடும்பம்


கண்டதைத் தின்று
வாந்தி எடுப்பதாகிப் போனது
இன்றைய கல்வி!
பொதி சுமக்கிறது
சீருடை அணிந்த
ஒரு கும்பல்


மம்மி என்று சொல்லும்
தாய் மொழி மறந்த குழந்தைக்கு
ஐந்து முத்தம் கொடுக்கிறாள்
அம்மா!


சீட்டெடுக்கும்
கிளியைப் பார்த்து
சிரிக்கிறது குழந்தை
அது சிறகு இழந்திருப்பது
அறியாமல்
சொன்னதைச் சொல்லும்
கிளிப்பிள்ளை என்கிறார்கள்
அது தாய்மொழி
மறந்த தென்கிறேன்
நான்


குழந்தையும் தெய்வமும்
ஒன்றென்கிறார்கள்


தவம் கிடந்து பெற்றாலும்
சில பொழுதில்
சனியனே என்று -  குழந்தை
திட்டத்தான் வேண்டியிருக்கிறது
என்கிறாள் தாய்


பொய் சொல்லாது
குழந்தையயன்கிறான்
ஞானி


குழந்தையாய் இரு
என்கிறான்
துறவி


குழந்தை குழந்தையாய்
இருப்பது
அதன் உரிமை
குற்றம் சொல்லாமல்
இருப்பது
நம் கடமை.

அரிய வாழ்க்கை

குருத்துவ ஆண்டு நிறைவடையும் காலக் கட்டமிது.  குருத்துவத்திற்கு எத்தகைய வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கிறது என்பதை நடந்து முடிந்த கொண்டாட்டங்கள் அத்தனையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.  இறை மக்கள் சமுதாயத்தில் மட்டுமல்ல, பொதுவான மக்கள் சமுதாயத்திலும் குருக்கள் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்.  குருக்கள் சிலரை விமரிசிக்கின்ற மக்கள்கூட குருத்துவத்தைப் பற்றி உயர்வான எண்ணங்களைத்தான் கொண்டிருக்கின்றனர்.  இத்தகைய வாழ்க்கை முறை முழுமையாக வாழப்படவில்லையே என்ற ஆதங்கம் தான் விமரிசனமாக வெளிப்படுகிறது.


இந்த வாழ்க்கை முறையை நடை முறைப்படுத்துவதில் எழக்கூடிய சிக்கல்கள் ஏராளம்.  பணி வாழ்க்கையை மிகச் சிறப்பாகத் துவங்கிய குருக்கள் சில ஆண்டுகளில் தளர்ந்து போய் விடுவதைக் காணமுடிகிறது.  காரணங்கள் பலவகை.  முதல் காரணமாக நான் சொல்ல விழைவது ‘இறை மக்கள் சமுதாயத்தில் அவர்களுக்கு ஏற்படுகின்ற உறவுச் சிக்கல்கள்’.  மறுகிறிஸ்துவாக மதித்து ஏற்றுக்கொண்ட இறைமக்கள் கிறிஸ்துவுக்குத் தந்த அதே சிலுவைத் துன்பங்களைக் குருக்களுக்குத் தருகின்றனர்.  தாங்கள் எத்தகைய வாழ்க்கையையும் வாழலாம், ஆனால் தங்களுடைய குருக்கள் சம்மனசுக்களைப்போல் வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது;  அவர்களின் மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைச் சமுதாய வாழ்விலிருந்து ஒதுக்கிவைப்பது;  அவர்கள் புரியும் சிறு தவறுகளையும் பெரிதுபடுத்தி தங்களின் வாழ்க்கைக்கு நியாயங்கள் கற்பிப்பது போன்றவை 
இன்றைய நடைமுறை யதார்த்தங்கள்.


இரண்டாவது சிக்கலாக நான் கருதுவது ‘சாதியம்’;  குரு என்பவர் குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தவர்தான்.  இந்திய கலாச்சாரப் பின்னணியில் பார்க்கின்ற நேரத்தில், குறிப்பிட்ட சாதியால் உருவானவர்தான்.  அவரது குருத்துவத் திருநிலைப்பாடு அவரை சாதியத்திலிருந்து பிரித்துக் காட்டுகிறது.  இறைமக்கள் அனைவருக்கும் பொதுவானவராக அவர் அபிஷேகம் செய்யப்படுகிறார்.  அதன் பின்னும் அவரைக் குறிப்பிட்ட சாதியைச் சாரந்தவராகப் பார்ப்பது மிகப் பெரிய குற்றமாகும்.  தூய ஆவிக்கு எதிராகச் சிந்திக்கின்ற நிலையாகும்.  குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவராகவே அவரைப் பார்த்து அவரின் அத்தனை அருங்கொடை களையும் முடக்கிப் போடுவது இன்று குருத்துவத்திற்கு நாம் இழைக்கும் பெரிய களங்கம்.


மூன்றாவது சிக்கலாக நான் கருதுவது ‘பொருளாதாரப் புதைமணல்’. சாதாரண வாழ்க்கையில் பொருளாதாரம் மிக அவசியமான ஒன்று.  அதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், ஈடுபடும் கடினமான உழைப்பு போன்றவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.  ஆனால்; குருத்துவ வாழ்க்கையில் இத்தகைய பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் தேவையற்றவை;  அர்த்தமற்றவை. குருக்களை இத்தகைய பொருளாதார முனைப்புகளில் சிக்கவைத்து அவர்களின் அருள்வாழ்வைப் பாழடிக்கும் முயற்சிகள் ஏராளமாக நடக்கின்றன.  பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், வெளிநாட்டு முதலீடுகள் போன்ற பல்வேறு சக்திகள் குருக்களைச் சிதறடிக்கின்றன.  இவற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்ற திருச்சபை முன் வருவது மிகக் குறைவாகவே உள்ளது.  குருக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து அவர்களின் அருள் வாழ்வு சிறக்க வழிவகைகள் செய்வதை விட்டுவிட்டு, பணம் கொடுக்கின்ற குருக்கள், வசதி வாய்ப்பு செய்து கொடுக்கின்ற குருக்கள், சமூக நிலையை உயர்த்தப் பயன்படுகின்ற  குருக்கள் என்று பொருளாதார நோக்கில் குருக்களை அணுகுகின்ற நிலைகள் உள்ளன.  இவை மாறுகின்ற நேரத்தில் தான் குருத்துவம் தழைக்க முடியும்.


சரித்திரம் படைக்க


இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு இன்று எத்தனையோ குருக்கள் அரிய முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.  பொது மக்களுக்குப் பணிபுரியும் பணியாளராகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களின் நன்மதிப்பு பெறுகின்ற நிலையை தியாகம்  செய்யும் குருக்கள் உண்டு.  யாரையும் சார்ந்து வாழாமல், யாருக்கும் அடிபணிந்து வாழாமல், யாருடைய பாராட்டிற்கும் பலியாகாமல் தெளிந்த நீரோடையைப் போல பணியாற்றிக் கொண்டே செல்லும் குருக்கள் பலர் உண்டு.  இவர்களின் ஆழமான பற்றுறுதி இவர்களுக்கு இந்த சக்தியைத் தருகின்றது.  சிலுவை என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை இவர்கள் தெளிவாக உணர்ந்து சிலுவை வழியாக உயிர்ப்பைத் தேடுகின்றனர்.
பாராட்டு, புகழ், சமூக மதிப்பு என்ற சிக்கல்களில் அகப்பட்டுக் கொள்ளாமல் இறைமகனின் சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடக்கும் இத்தகைய குருக்கள் பலருக்குத் தெரியாமல் போகலாம்.  பணியே வாழ்வு என்ற அவர்களின் உறுதிப்பாடு குருத்துவத்தை குன்றின் மேல் இட்ட தீபமாக உயர்த்திக் கொண்டிருக்கிறது.


சாதியம் கடக்க


சாதியச் சக்திகளை வெல்ல இவர்கள் எடுக்கும் முதல் ஆயுதம் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையால் தங்களை இணைத்துக் கொள்வதுதான். சாதிய உணர்வுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று அனுபவிக்கும் உணர்வுப் பூர்வமான ஊனங்கள் ஆயிரமாயிரம்.  இந்த ஊனங்களிலிருந்து மக்களை விடுவிக்க முழுத் திருச்சபையையும் ஒன்றித்துச் செயல்பட அழைப்பது குருக்களின் கடமை.  அதில் பல சமயங்களில் தோல்வியையே தழுவுகின்றனர் குருக்கள்,  சொந்த குடும்பங்களைச் சார்ந்தவர்களே அவர்களுக்கு எதிரிகளாக மாறும் நிலையும் ஏற்படுகிறது.  எனினும் சாதியத்தால் காயப்பட்ட மக்களுக்கு புரிந்து கொள்ளும் நபர்களாக, தோழமையின் துணையாளர்களாக மாறி வரும் குருக்களைப் பார்த்து உண்மையில் கைகூப்பி நிற்கிறோம்.


பொருளாதாரப் புதைமணல்


இன்று குருத்துவ வாழ்க்கையை நன்கு புரிந்து கொண்ட இறைமக்கள் குருக்களுக்குப் பல்வேறு பொருளாதார உதவிகள் செய்து அவர்களின் அருள் வாழ்வு மங்கிவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.  குருக்களின் ஆடம்பர வாழ்வுக்கு எந்தவொரு கிறிஸ்தவரும் உடன்போக மாட்டார் என்பது நடை முறையில் காணும் உண்மை.  அதே சமயத்தில், குருக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னரே இறைமக்கள் தங்களது தேவைகளை நிறைவுசெய்து கொள்கிறார்கள் என்பது வரலாறு தரும் பாடம்.  ஒரு சிறு ரொட்டித் துண்டு மட்டுமே கையில் இருக்கும் ஒரு பஞ்ச சூழலில்கூட, பாதித்துண்டைக் குருக்களுக்குத் தந்துவிட்டு மீதியைச் சாப்பிடுவதுதான் கத்தோலிக்க கிறிஸ்த வர்களின் இயல்பு.
பொருளாதாரப் புதைமணலில் சிக்கிக் கொள்ளாமல் குருக்களைக் காக்க வேண்டிய பொறுப்பைத் திருச்சபை மிக நன்கு உணர்ந்து செயல்படுவதற்கு இந்தக் குருக்கள் ஆண்டு திட்டமிடும் என்பது எனது நம்பிக்கை.


அரிய வாழ்வு


குருத்துவம் என்பது அரிய வாழ்வு.  உலகில் மிகச் சிலருக்கே ஆண்டவன் தருகின்ற மகத்துவமிக்க கொடை.  இந்த அரிய வாழ்வின் அத்தனை நிமிடங்களும் ஆண்டவன் அருள்தரும் நேரங்கள்.  ஒவ்வொரு நிமிடமும் பணி வாழ்வின் நேரமே!
மிகப் பெரிய முத்தைக் கண்டு கொண்டவன் தனக்குள்ளதெல்லாம் விற்று அந்த முத்தைத் தன்னகப்படுத்திக் கொள்வது போன்று குருத்துவத்தைப் பெற்றவர்கள் அதனை அருள் வாழ்வின் ஊற்றாக, அணையாத விளக்காக, அருட் செல்வமாகக் காப்பாற்றி வளர்க்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இதைக் காப்பாற்ற இறைமகன் இயேசு தந்த மிகப் பெரிய உத்தி ‘தன்னையே வெறுமையாக்குதல்’ ஒன்றே.  எந்தவொரு சூழலிலும் குரு தன்னையே வெறுமையாக்கி இறையருள் தன்னில் தங்க இடமளிக்கின்றார்.  தான் மறைந்து தன்னை ஆட்கொண்ட இறைவனின் ஒளி தன்னில் பிரகாசிக்கச் செய்கின்றார்.
அத்தகைய அருள்நிலையில் அவர் அடையும் ஆனந்தம் அலாதியானது, அதிசயமானது.  விண்ணரசின் வெளிச்சங்களை இந்த பூமியில் கண்டு மகிழும் அதிசய வாழ்வு குருத்துவம்.  மண்ணகத்தை விண்ணகத்தோடு இணைக்கும் மாட்சிமையின் வாழ்வு குருத்துவம்.  என்றும் இந்த உலகத்தின் உண்மையான தேவைகளை எடுத்துச் சொல்லி, வழிகளை வாழ்ந்துகாட்டி, வண்ணமயமான வாழ்வுக்கு இந்த பிரபஞ்சத்தை அழைத்துச் செல்லும் விண்மீன் குருத்துவம்.
    (தொடரும்)    - அருள்பணி. க. வலன்டின் ஜோசப்

தேவை - மதிப்பீடுகளை மையப்படுத்தும் கல்வி

கடவுளது படைப்புகளிலேயே மனிதப்பண்பு தனித்தன்மை மிக்க அறிவார்ந்த உயிரியாகும்.  மனிதன் குழந்தையாகப் பிறக்கும் போதே பிறரைச் சார்ந்த நிலையில் உள்ளான்.  பின்னர் கல்வியின் மூலம் அறிவு, செயல்திறன்கள், பழக்கவழக்கங்கள், பண்பு நலன்களை வளர்த்துக் கொண்டு முழு மனிதன் ஆகிறான்.  தான் வாழும் சமுதாயத்தின் நெறிமுறை களைக் கற்றறிந்து சிறந்த குடிமகனாக உருவாகிறான்.  நுண்ணறிவும், கற்கும் ஆற்றலும் மிகுந்து இருப்பதால் அவனால் எதையும் விரிவாகக் கற்றுக் கொள்ள முடிகிறது.
கல்வியின் காரணமாக மனிதன் தனது புறச்சூழல், சமூகச்சூழல் மற்றும் ஆன்மீகச் சூழலுக்கு ஏற்ற இணக்கமான நடத்தையைப் பெறுகிறான்.  “குழந்தை மற்றும் மனிதர்களின் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றின் சிறப்பானவற்றை எல்லாம் முழுமையாக வெளியாக்குவதே கல்வி” என்கிறார் மகாத்மா காந்தியடிகள்.    ‘செடிகள் வளர நிலத்தைப் பண்படுத்துவது போல மனிதர்களைப் பண்படுத்த பயன்படுவதே கல்வி’ என்கிறார் ஜான் லாக்(John Lock).  ஆக கல்விதான் மனிதனைக் கடவுளின்; உயர்படைப்பு என்பதற்குத் தகுதி உள்ளவனாக ஆக்குகிறது.
இத்தகைய உன்னதமான கல்வியின் இன்றைய நிலை நல் உள்ளம் கொண்டோரை வேதனையில் ஆழ்த்துகிறது.  இந்நாட்களில் மாறிவரும் சமூகப் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப, கல்வி தனது அணுகுமுறைகளிலும் நடைமுறையிலும் பெருத்த மாற்றங் களை அடைந்து வருகிறது.
கல்வியை ‘உயர்த்துதல்’ ‘மேன்மை யாக்கல்’ என்ற நிலையில் அரசு பல வளர்ச்சி நிலைகளை அறிமுகப்படுத்துகிறது.  எனினும் சமூகத்தில் பல சுயநல சக்திகள் கல்வியை வியாபாரமாக்கி வருவது நாமறிந்த உண்மை.
ஒரு காலத்தில்சேவைமனம் கொண்டு மனிதனை உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு கற்றவர்கள் தாம் பெற்ற அறிவைப் பிறரோடு பகிர்ந்து கொண்டார்கள்.  “ஆயிரம் அன்ன சத்திரங்கள் கட்டுவதை விட ஓர் ஏழைக்கு எழுத்தறிவு கற்பித்தலே மிகச் சிறந்தது” என்பதை உணர்ந்த வசதி படைத்தோர் கல்விக் கூடங்களை நிறுவி மாணவர்கள் கல்வி கற்க உதவினர்.
ஆனால் இன்று பணம் படைத்தோர் கல்விக் கூடங்களைப் பணத்தைப் பெருக்க உதவும் வணிக நிறுவனங்க ளாகவே மாற்றி விட்டனர்.  எண்ணற்ற தொழில் நிறுவனங்களைப்போல கல்வி நிறுவனங்களையும் வணிக மயமாக்கி விட்டனர்.  பணத்தைப் பெருக்குவதே நோக்கமாக இருப்பதால் குறைந்த ஊதியத்திற்கு, தகுதியில்லாத ஆசிரியர் களைக் கொண்டு பல கல்வி நிறுவனங் களை நடத்துகின்றனர்.
கல்வி பெறுகின்ற மாணவர்களின் எண்ண ஓட்டமும்கூட வேதனை தரக் கூடியதாக இருக்கின்றது.  அதிக மதிப் பெண் பெறுவதே தமது இலட்சியமாகக் கொண்டு புரிகிறதோ இல்லையோ அனைத்தையும் மனப்பாடம் செய்து விடைத்தாள்களில் அப்படியே கொட்டிவிட முனைகிறார்கள்.  வாழ்க்கைக்குத் தேவையான மதிப்பீடுகள், நல்லொழுக்கம், சேர்ந்து வாழ்தல், நல்ல பழக்க வழக்கங் களை வளர்த்தல் போன்றவற்றில் கோட்டை விடுகிறார்கள்.
பெற்றோர்களோ, பணத்தைக் கொட்டி இறைத்து, பிள்ளைகளை விடுதிகளில் சேர்த்தும், காலை, மாலை “டியூசன்” வகுப்புகளுக்கு அனுப்பியும், அவர்களின் குழந்தைப் பருவ விளையாட்டுகளை, மகிழ்ச்சியை அழித்து விட்டு, எப்படியாவது தம் பிள்ளைகள் மிக அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என நினைக்கின்றனர்.
இத்தகைய சூழலில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் வித்தியாசமான நிறுவனங்களாக செயல்பட வேண்டும்.  மனிதனின் மாண்பை உயர்த்த வந்தார் இயேசு.  அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றும் நாம், அவரின் மதிப்பீடுகளை உள்வாங்கி வாழும் நாம், சமூக பொருளாதார, கலாச்சார நிலையில் பின்தங்கி வாழும் மாணவர்களிடம் புதைந்து கிடைக்கும் ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிக்கொண்டு வர முயலவேண்டும்.
குறிப்பிட்ட விளையாட்டில் சிலருக்கு ஈடுபாடு இருந்தால், அவர்களை அந்தத் துறையில் அதிகம் ஈடுபடுத்தலாமே.  மேடைப்பேச்சு, ஓவியம் வரைதல் போன்ற துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்து அந்தத் துறைகளில் வளரச்செய்யலாமே.
பலதரப்பட்ட குணநலன்கள் கொண்ட வகுப்பறை மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்கின்றபோது, சமூகத்தில் சேர்ந்து வாழ்தலின் நன்மைகளையும் அவசியத்தையும் உணரச் செய்து எதிர்கால வாழ்வுக்கு தயார்படுத்தலாமே.
தலைமைப் பண்பை வளர்த் தெடுத்தல், குழுவில் இணைந்து செயல் படுதல், ஒருவர் ஒருவருக்கு உதவி செய்தல், சாதி மத வேறுபாடுகளைக் களைந்து ஒரே சமூகமாக இணைந்து வாழ்தல் போன்ற நற்பண்புகளை எல்லாம் நாம் கற்றுத்தர முடியுமே.
மதிப்பெண்கள் தருகின்ற கல்வி ஒரு வேளை நல்ல வேலை வாய்ப்பைப் பெற்றுத் தரலாம், நல்ல மனிதனாக மாற்றாது.  ஆனால் மதிப்பீடுகள் தருகின்ற கல்வியோ நிச்சயம் நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.
மனிதத்தைப் புனிதமாக்க வந்த இயேசுவைப் பின்பற்றும் நாம் நல்ல மதிப் பெண்கள் பெற உழைப்பதைவிட மேலாக நல்ல மதிப்பீடுகளை மையப்படுத்த உழைக்கலாமே.
Fr. A.S. ஜெயக்குமார், பொன்மலைப்பட்டி

புனிதம் கொடுக்கும் பூக்கள்



புனிதம் கொடுக்கும் பூக்கள் - இரண்டு
ஒன்று செபிப்பு மற்றது
கணிச மான உழைப்பு -  இதனைக்
கருத்தில் கொள்ள வேண்டுமே
சேசு  பகலில் இடைவிடாது -  உழைப்பு
இரவில் துயிலாது செபிப்பு
மாசும் மருவும் இல்லாதவர் - புகட்டும்
மாபாடம் நாமும் கற்கணும்
இந்தப் பாடம் கற்றாலே -  உண்டு
வெற்றி நமக்கு உணர்வீரே
மந்தப் புத்தி உள்ளோரும் -  இந்த
வழியைப் பின்பற்றி வாழுவோம்
புனிதர் நிரலில் இடம்பெற -  இந்தப்
பூக்கள் மிகவும் முக்கியம்
மனிதரைப் புனிதப் படுத்தும் -  உறுதி
மனதில் இதனைக் கொள்ளுவோம்
இறைவன் இயேசு காட்டிய -  பாதை
இதனைப் போற்றி வாழுவோம்
நிறைவு வாழ்வு பெறுவோம்  -  வாழ்வில்
நீடித்த நன்மை அடைவோம்
தூயப் படுத்தும் பூக்கள்தான் -  புனிதர்
போற்றி வாழ்ந்த மலர்கள்தான்
நேய மாக கைக்கொண்டு -  நாமும்
நேர்த்தி யாக வாழ்ந்திடுவோம்!
கவிஞர் பெஸ்கிதாசன்

மறைமாவட்ட வழிகாட்டும் குழு

தம் பணி வாழ்வினை அர்த்தமுள்ள வகையில் அமைத்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காக உண்மையில் உழைக்கும் உன்னத குருக்களை அடையாளம் கண்டு அவர்களைப் பாராட்டுவதும் அவர்தம் பணிகளைப் பறை சாற்றுவதுமே திருச்சபை செய்ய வேண்டிய அடுத்த ஒரு முக்கியமான பணியாகும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவையிரண்டும் திருச்சபையால் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப் படாமலேயே இருக்கின்றன.  இந்தக் குருக்கள் ஆண்டிலிருந்தாவது இவை களையப்பட்டு அருட் பணியாளர்களின் முன்மாதிரியான வாழ்க்கை முறை, பணித்திறன்கள், இறைமக்களுக்காக உழைப்பதில் காணும் நிறைவு ஆகியவைகள் அங்கீகரிக்கப்பட்டு அது அடுத்த வருக்கும் வழிகாட்டுதலாய் அமைய பாராட்டுதலும் பறை சாற்றுதலும் நடத்திட திருச்சபை முன்முயற்சிகள் எடுக்க வேண்டும்.
பாராட்டுக்கள் பலரின் பணி வாழ்வை ஊக்கப்படுத்தும். பறை சாற்றுதல் பலருக்கும் பாதையைக் காட்டும்.
பல்வேறு நிர்வாகங்களில் நடத்தப்படும் பணி மதிப்பீடு முறை போன்று (மூலிணு ழிஸ்ரீஸ்ரீrழிஷ்விழியி) திருச்சபையிலும் ஒவ்வொரு மறைமாவட்ட அளவில் வருடத்திற்கொரு முறை இதனை மேற்கொள்ளலாம்.
நாம் ஏற்கனவே சுட்டியிருந்த மறைமாவட்ட வழிகாட்டும் குழுவே இந்தப் பணியினையும் செய்திடலாம்.  ஆனால் அப்படி செய்திடும்போது அந்தந்தப் பங்கின் மக்கள் இந்த மதிப்பீட்டு முறையில்  அதிகம் பங்குபெற வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும்.
ஒரு அருட்பணியாளரின் தனிச் செப வாழ்வு, திருப்பலி மற்றும் அருட்சாதனப் பணிகளில் காட்டும் ஈடுபாடு, மணத்துறவு குறித்த நிலை, எளிமையான வாழ்வு போன்ற அவரின் தனிவாழ்வு குறித்த செயல்களுக்கும், வீடுகள் சந்திப்பு, மக்களுக்காகப் பணி செய்ய ஒதுக்கிடும் நேரம், பங்குப் பேரவை, பங்கு நிதிக்குழு, அன்பியங்கள் போன்ற மக்கள் அமைப்புகளை அமைப்பதில், மேம்படுத்துவதில் காட்டும் உண்மையான உறுதி நிலை, பங்கு நிதி சார்ந்த விசயங்களில் வெளிப்படுத்தும் ஒளிவுமறைவற்ற தன்மை போன்ற அவர்தம் பணி வாழ்வு குறித்த செயல் களுக்கும் அளவீடுகள் மற்றும் மதிப் பெண்கள் வழங்கப் பட மதிப்பீட்டுத் தாள்களைத் தயாரித்து அவர் பணி செய்யும் தலத்திலுள்ள மக்களிடம் கொடுத்து கருத்துக் கணிப்புகள் நடத்தி இந்த மதிப்பீட்டைச் செய்யலாம்.  ஒரு பங்கில் உள்ள எல்லா மக்களிடமும் இவை கொடுக்கப்பட முடியா விட்டாலும், தேர்ந்தெடுக்கப் பட்ட, ஓரளவு விபரமறிந்த, நேர்மையான மக்களை அடையாளங்கண்டு அவர்களிடம் இக்கருத்துக் கணிப்பை நடத்தலாம்.  அதனை மறைமாவட்ட வழிகாட்டும் குழு முன்னின்று செய்யலாம்.
ஒரு குருவானவர் என்கிற முறையில் தனக்குரிய சாதாரண கடமைகளை நிறை வேற்றுவதுடன் நில்லாமல், மக்கள் நலனை மையப்படுத்தி ஒரு அருட்தந்தை எடுக்கும் ஒவ்வொரு முன்முயற்சிக்கும் தனித்தனி மதிப்பெண்கள் வழங்கி அவரைப் பாராட்டலாம்.  உதாரணமாக பக்திப் பாடல் ளீம் வெளியிடுவது, புத்தகங்கள் எழுதி வெளியிடுவது போன்ற தனிப்பட்ட திறமையான செயல்பாடுகளுக்குச் சிறப்புக் கவனம் கொடுத்து மதிப்பீட்டிற்கு வலு சேர்க்கலாம்.  அத்தகைய முன்முயற்சிகள் ஒருவரின் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தும் நிகழ்வாக மட்டும் இருந்து விடாது மக்களின் வாழ்வினை மேம்படுத்தும் காரணியாக இருப்பதை உறுதி செய்து அதற்கேற்ப மதிப்பெண்கள் வழங்கி அவர்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.
இம்மதிப்பீட்டில் மறைமாவட்ட அளவில் முதல் பத்து இடங்களைப் பெறும் அருட்பணியாளர்களின் சாட்சிய வாழ்வினைத் தொகுத்து பதிவுசெய்து புத்தகங்களாக்கி வெளியிடலாம்.  அவர்கள் வாழும் புனிதர் களாய் மக்களுக்கு வழிகாட்டி நிற்பர் . . .
முதல் பத்து இடங்களில் தொடர்ந்து இடம் பெறும் அருட்பணியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை வட்டார அதிபர், ஆலோசனைக் குழு உறுப்பினர் (ளீலிஐவிற்யிமி னிeதுணுer), குருகுல முதல்வர், ஆயர் போன்ற  பல  உயர்பணிகளை வழங்கி சிறப்பு செய்யலாம்.  பங்களவில் தம் நேரிய செயல்பாட்டால் மக்களிடம் பெயரும் புகழும் அடைந்தவர்களே இந்தப் பொறுப்புகளுக்குரியவர்களாக வர இடம் தரும் வகையில் அமைக்கும்பொழுது அந்தப் பெறுப்புகளுக்கே தனிச்சிறப்பும், மரியாதையும் நிச்சயம் கிடைக்கும்.  மறை மாவட்டங்களில் ஒவ்வொரு வருடமும் குருக்களுக்கான பணி மாற்றத்தின்போது ஏற்படும் முரண்பாடுகளும் முனகல்களும் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.
இவையயல்லாம் சாத்தியமா?  என்கிற சந்தேகம் வரலாம்.  இன்று இருக்கும் நிர்வாக முறைகளில் செயல்பாடுகளில் ஏற்படும் அநீத பிரச்சனைகளை அப்படியே அருகில் வைத்துக்கொண்டே அதிக நாட்கள் வண்டியை நகர்த்த முடியாது.  இந்தப் பிரச்சனைகள் நமக்குக் காட்டும் ஓர் எச்சரிக்கை ஒலி “அணுகு முறைகளில் மாற்றம் செய்யுங்கள்” என்பதே.  எனவே அந்த வகையில் இப்படியயல்லாம் ஒரு சில முன்முயற்சிகள் எடுக்கும் போது அவை மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பியே இந்த ஆலோசனைகள் முன்வைக்கப் படுகின்றன.  திறந்த மனமும். திருச்சபையின்பால் அக்கறையும் இருந்தால் இவை சாத்தியமே.
இதில் சிறு சிறு குறைகள் வரினும் அவைகளும் மாற்றம் செய்யக் கூடியவையே.  ஆனால் மக்களால் மக்களுக்காக மக்களே என்கிற அளவில் திருச்சபையும் ஒரு மக்கள் அமைப்பே என்கிற விதையை இவ்வுலகில் விதைத்து விட இதுபோன்ற முன் முயற்சிகள் முகாந்திரமாய் அமைந்திடும்.
எஸ். எரோணிமுஸ்

புனித தோமையார் - இந்தியாவின் அப்போஸ்தலர் July 3

“என் ஆண்டவரே என் கடவுளே” என்று விசுவாசப் பிரமாணம் எழுப்பியது போல் வேறு யாரும் அவ்வளவு மனம் விட்டு அறிக்கை யிட்டதில்லை.  இவரால் கிறிஸ்த வர்களுக்கு ஓர் உருக்கமான ஜெபம் அமைந்துவிட்டது.  இச்செபம் காலம் எல்லாம் சொல்லப்படும் என்பதில் ஐயமில்லை.  அதோடு நமது எளிய விசுவாசத்தை மதித்து, “காணாமல் விசுவசிப்போர் பேறு பெற்றோர்” என்று ஆண்டவர் பாராட்டும் ஒரு வாய்ப் பினையும் பெற்றுக் கொண்டோம்.
தோமையார் கலிலேயாவில் யூத குலத்தில் மீனவர் குடியில் தோன்றி, அதே தொழிலைச் செய்தார்.  ஆழ்ந்த தெய்வ பக்தியுள்ளவர்.  இயேசுவைக் கண்டடைந்ததும் அவரே உலக மீட்பர் என்று விசுவசித்து அவருக்கும் சீடரானார்.  பின்னர் இந்திய நாட்டுக்கு வந்து போதித்து, பல்லாயிரம் பேருக்குத் திருமுழுக்கு அளித்து, மறைபரப்பியதன் காரணமாக வேத விரோதிகளால் இறுதியில் மயிலாப்பூரில் கொல்லப் பட்டார்.
“ஆண்டவரைக் காணாமல் இருந்தாலும் விசுவாசத்தில் தளர்ச்சி அடையாமல் அதில் வளர்ச்சி பெற முயல்வோம்”




தொகுப்பு : எட்வர்டு

மறைமாவட்ட வழிகாட்டும் குழு

தம் பணி வாழ்வினை அர்த்தமுள்ள வகையில் அமைத்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்காக உண்மையில் உழைக்கும் உன்னத குருக்களை அடையாளம் கண்டு அவர்களைப் பாராட்டுவதும் அவர்தம் பணிகளைப் பறை சாற்றுவதுமே திருச்சபை செய்ய வேண்டிய அடுத்த ஒரு முக்கியமான பணியாகும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவையிரண்டும் திருச்சபையால் அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப் படாமலேயே இருக்கின்றன. இந்தக் குருக்கள் ஆண்டிலிருந்தாவது இவை களையப்பட்டு அருட் பணியாளர்களின் முன்மாதிரியான வாழ்க்கை முறை, பணித்திறன்கள், இறைமக்களுக்காக உழைப்பதில் காணும் நிறைவு ஆகியவைகள் அங்கீகரிக்கப்பட்டு அது அடுத்த வருக்கும் வழிகாட்டுதலாய் அமைய பாராட்டுதலும் பறை சாற்றுதலும் நடத்திட திருச்சபை முன்முயற்சிகள் எடுக்க வேண்டும்.
பாராட்டுக்கள் பலரின் பணி வாழ்வை ஊக்கப்படுத்தும். பறை சாற்றுதல் பலருக்கும் பாதையைக் காட்டும்.
பல்வேறு நிர்வாகங்களில் நடத்தப்படும் பணி மதிப்பீடு முறை போன்று (மூலிணு ழிஸ்ரீஸ்ரீrழிஷ்விழியி) திருச்சபையிலும் ஒவ்வொரு மறைமாவட்ட அளவில் வருடத்திற்கொரு முறை இதனை மேற்கொள்ளலாம்.
நாம் ஏற்கனவே சுட்டியிருந்த மறைமாவட்ட வழிகாட்டும் குழுவே இந்தப் பணியினையும் செய்திடலாம். ஆனால் அப்படி செய்திடும்போது அந்தந்தப் பங்கின் மக்கள் இந்த மதிப்பீட்டு முறையில் அதிகம் பங்குபெற வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும்.
ஒரு அருட்பணியாளரின் தனிச் செப வாழ்வு, திருப்பலி மற்றும் அருட்சாதனப் பணிகளில் காட்டும் ஈடுபாடு, மணத்துறவு குறித்த நிலை, எளிமையான வாழ்வு போன்ற அவரின் தனிவாழ்வு குறித்த செயல்களுக்கும், வீடுகள் சந்திப்பு, மக்களுக்காகப் பணி செய்ய ஒதுக்கிடும் நேரம், பங்குப் பேரவை, பங்கு நிதிக்குழு, அன்பியங்கள் போன்ற மக்கள் அமைப்புகளை அமைப்பதில், மேம்படுத்துவதில் காட்டும் உண்மையான உறுதி நிலை, பங்கு நிதி சார்ந்த விசயங்களில் வெளிப்படுத்தும் ஒளிவுமறைவற்ற தன்மை போன்ற அவர்தம் பணி வாழ்வு குறித்த செயல் களுக்கும் அளவீடுகள் மற்றும் மதிப் பெண்கள் வழங்கப் பட மதிப்பீட்டுத் தாள்களைத் தயாரித்து அவர் பணி செய்யும் தலத்திலுள்ள மக்களிடம் கொடுத்து கருத்துக் கணிப்புகள் நடத்தி இந்த மதிப்பீட்டைச் செய்யலாம். ஒரு பங்கில் உள்ள எல்லா மக்களிடமும் இவை கொடுக்கப்பட முடியா விட்டாலும், தேர்ந்தெடுக்கப் பட்ட, ஓரளவு விபரமறிந்த, நேர்மையான மக்களை அடையாளங்கண்டு அவர்களிடம் இக்கருத்துக் கணிப்பை நடத்தலாம். அதனை மறைமாவட்ட வழிகாட்டும் குழு முன்னின்று செய்யலாம்.
ஒரு குருவானவர் என்கிற முறையில் தனக்குரிய சாதாரண கடமைகளை நிறை வேற்றுவதுடன் நில்லாமல், மக்கள் நலனை மையப்படுத்தி ஒரு அருட்தந்தை எடுக்கும் ஒவ்வொரு முன்முயற்சிக்கும் தனித்தனி மதிப்பெண்கள் வழங்கி அவரைப் பாராட்டலாம். உதாரணமாக பக்திப் பாடல் ளீம் வெளியிடுவது, புத்தகங்கள் எழுதி வெளியிடுவது போன்ற தனிப்பட்ட திறமையான செயல்பாடுகளுக்குச் சிறப்புக் கவனம் கொடுத்து மதிப்பீட்டிற்கு வலு சேர்க்கலாம். அத்தகைய முன்முயற்சிகள் ஒருவரின் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தும் நிகழ்வாக மட்டும் இருந்து விடாது மக்களின் வாழ்வினை மேம்படுத்தும் காரணியாக இருப்பதை உறுதி செய்து அதற்கேற்ப மதிப்பெண்கள் வழங்கி அவர்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.
இம்மதிப்பீட்டில் மறைமாவட்ட அளவில் முதல் பத்து இடங்களைப் பெறும் அருட்பணியாளர்களின் சாட்சிய வாழ்வினைத் தொகுத்து பதிவுசெய்து புத்தகங்களாக்கி வெளியிடலாம். அவர்கள் வாழும் புனிதர் களாய் மக்களுக்கு வழிகாட்டி நிற்பர் . . .
முதல் பத்து இடங்களில் தொடர்ந்து இடம் பெறும் அருட்பணியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை வட்டார அதிபர், ஆலோசனைக் குழு உறுப்பினர் (ளீலிஐவிற்யிமி னிeதுணுer), குருகுல முதல்வர், ஆயர் போன்ற பல உயர்பணிகளை வழங்கி சிறப்பு செய்யலாம். பங்களவில் தம் நேரிய செயல்பாட்டால் மக்களிடம் பெயரும் புகழும் அடைந்தவர்களே இந்தப் பொறுப்புகளுக்குரியவர்களாக வர இடம் தரும் வகையில் அமைக்கும்பொழுது அந்தப் பெறுப்புகளுக்கே தனிச்சிறப்பும், மரியாதையும் நிச்சயம் கிடைக்கும். மறை மாவட்டங்களில் ஒவ்வொரு வருடமும் குருக்களுக்கான பணி மாற்றத்தின்போது ஏற்படும் முரண்பாடுகளும் முனகல்களும் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.
இவையயல்லாம் சாத்தியமா? என்கிற சந்தேகம் வரலாம். இன்று இருக்கும் நிர்வாக முறைகளில் செயல்பாடுகளில் ஏற்படும் அநீத பிரச்சனைகளை அப்படியே அருகில் வைத்துக்கொண்டே அதிக நாட்கள் வண்டியை நகர்த்த முடியாது. இந்தப் பிரச்சனைகள் நமக்குக் காட்டும் ஓர் எச்சரிக்கை ஒலி “அணுகு முறைகளில் மாற்றம் செய்யுங்கள்” என்பதே. எனவே அந்த வகையில் இப்படியயல்லாம் ஒரு சில முன்முயற்சிகள் எடுக்கும் போது அவை மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பியே இந்த ஆலோசனைகள் முன்வைக்கப் படுகின்றன. திறந்த மனமும். திருச்சபையின்பால் அக்கறையும் இருந்தால் இவை சாத்தியமே.
இதில் சிறுசிறு குறைகள் வரினும் அவைகளும் மாற்றம் செய்யக் கூடியவையே. ஆனால் மக்களால் மக்களுக்காக மக்களே என்கிற அளவில் திருச்சபையும் ஒரு மக்கள் அமைப்பே என்கிற விதையை இவ்வுலகில் விதைத்து விட இதுபோன்ற முன் முயற்சிகள் முகாந்திரமாய் அமைந்திடும்.
எஸ். எரோணிமுஸ்

ஆன்மீகம்

புனித ஜான் மரிய வியான்னி (1786- 1859) ஆர்ஸ் கிராமத்தின் பங்குத் தந்தையாக இருந்தபோது அவரிடம் பாவசங்கீர்த் தனம் செய்யவும் அவரின் மறையுரைகளில் வெளிப்படும் ஞானத்தைப் பெறவும் அநேக மக்கள் ஆர்ஸ் நகருக்குப் பெருங்கூட்டமாய் வந்தார்கள்.
சாதாரண மக்கள் மட்டுமல்ல குருவானவர்கள், ஆயர்கள், கர்தினால்கள், துறவுமடப் பெரியோர்கள் வந்து அவரிடம் மறையுரைகளில் வெளிப்பட்ட தெய்வீக ஞானத்தைக் கண்டு அதிசயமடைந்தார்கள்.  குருத்துவப் பயிற்சியின் போது ஞானம் இல்லை, அறிவு இல்லை, பேச்சுத் திறமை யில்லை, சிந்தனை ஆற்றல் இல்லை எனக் கருதி குருப்பட்டம் இவருக்குக் கொடுக்கவே தயங்கியவர்கள் இவரில் வெளிப்பட்ட ஞானத்தைக் கண்டு வியந்தார்கள்.
19ஆம் நூற்றாண்டில் மிகவும் புகழ் வாய்ந்த மறையுரையாளர், பெயர் பெற்ற ஞான வல்லுனர், குருமடப் பேராசிரியர் லக்கோர்தேர் என்பவர் புனித ஜான் மரிய வியான்னியிடம் பேசி, உரையாடி, ஆலோசனைகளைப் பெற்றபின் மிகவும் மகிழ்வுடன் திரும்பிச் சென்றார்.
அவரின் வருகையைக் குறித்து ஜான் மரிய வியான்னி குறிப்பிடும்போது “ஒரு மலை மடுவைத் தேடி வந்திருக்கிறது.  ஞானமுள்ளவர் ஞானமற்ற என்னைக் காண வந்தார்.  அறிவிற்சிறந்தவர் அறிவற்ற என்னிடம் வந்து ஆலோசனை பெற  வந்தார்” என்றார்.
ஜான் மரிய  வியான்னியிடம் அபூர்வ சிந்தனைகளும் ஞானக் கருத்துக் களும் வெளிப்பட்டன.  அவர் எந்த ஞானியிடம் போக வில்லை.  அறிவாளியை நாடவில்லை.  கருத்துக் குவியலைக் கொண்டிருக்கும் புத்தகங்களைப் படிக்கவில்லை.  அவர் ஞானத்தைத் தேடி திவ்விய நற்கருணை நாதரின் பாதத்தண்டை வந்தார்.  வேதாகமத்தை இதயத்தில் பதித்தார்.  இறைவனின் மெல்லிய ஆலோசனைகளை ஜெபத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமை யால் உய்த்து உணர்ந்தார்.  அங்கு பெற்ற ஞானத்தையே மக்களுக்குப் போதித்தார்.
வேதாகமத்தில் “உங்களில் எவருக் காவது ஞானம் குறைவாயிருந்தால் அவர் கடவுளிடம் கேட்கட்டும்.  அவருக்குக் கொடுக்கப்படும்.  முகம் கோணாமல் தாராளமாய்க் கொடுப்பவர் அவர்” என்கிறார் புனித யாக்கோபு (1:5).
பாலன் இயேசுவைத் தேடி கீழ்த்திசை ஞானிகள் ஒட்டகத்தின்மீது ஏறி பாலைவனப் பயணம் செய்து எருசலேம் நகர் வருகிறார்கள்.  அவர்கள் ஞானத்தைக் கொண்டிருப் பவரும் அதிசய ஆலோசனையின் கர்த்தராகிய தேவ பாலன் இயேசுவை ஆராதனை செய்ய அதிசய விண்மீனைப் பின்பற்றி எருசலேம் நகர் வருகிறார்கள்.
விண்மீன் மறைவினால் யூதாவின் சிற்றரசன் ஏரோதிடம் “யூதாவின் அரசர் பிறந்திருக்கிறாரே அவர் எங்கே?  அவருடைய விண்மீன் எழுதலைக் கண்டு அவரை வணங்க வந்தோம்” என்கிறார்கள்.
மூன்று ஞானிகள் கீழ்த்திசை நாடுகளில் ஒன்றான அசிரியா, பாபிலோன் அல்லது பெர்´யா நாடுகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.  மெடஸ் (னிedeவி) என்ற குருகுலத்தைச் சேர்ந்தவர்.  சொராஸ்டர் மதக் கொள்கை உடையவர்கள்.  அரசியலிலும் மக்கள் மதிப்பிலும் உயர்ந்து காணப்பட்டவர்கள்.  நாட்டின் ஆளுமையில் பங்கு பெற்ற அறிஞர்கள்.
மேலும் அவர்கள் வானசாஸ்திரி களாய் இருந்தார்கள்.  வானத்தின் நட்சத்திரங் களையும் ஆராயும் ஞானத்தைக் கொண்ட வர்களாயும் இருந்தார்கள்.  ஆராய்ச்சியின் வல்லுனர்களாய் இருந்ததால் அதிசய விண்மீனின் வெளிப்பாட்டை  அறிந்து ஞானத்தின் கர்த்தரை வணங்கக் கீழ்த்திசை நாட்டிலிருந்து பல மாதங்கள் பாலை வனத்தில் பயணம் செய்து பாலன் இயேசுவை மாட்டுக் கொட்டத்தில் கண்டு நெடுஞ்சான்கிடையாக விழுந்து ஆராதிக்கிறார்கள்.
உலக ஞானத்தில் சிறந்தவர்கள் ஞானத்தின் கர்த்தரைத் தேடி மாட்டுக் கொட்டிலில் கிடத்தப் பட்டிருக்கும் பாலன் இயேசுவை ஆராதிக்கிறார்கள்.  தெண்டனிடுகிறார்கள்.  மூன்று காணிக்கைகளை அர்ப்பணித்து இயேசுவை இரட்சகராகவும் குருவாகவும் அரசராகவும் ஏற்றுக் கொள்கிறார்கள்.  ஞானத்தில் சிறந்தவரும், மறை வல்லுனரும், நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதி இறை ஞானத்தை வெளிப்படுத்திய வருமான பேராயர் புல்டன் பீன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“நான் எவ்விடத்தில் இருப்பினும், என் அறைக்கு அடுத்த அறை திவ்விய நற்ளகருணை ஸ்தாபகம் உள்ள சிற்றாலயமாகத்தான் இருக்கும்.  குறைந்தது ஒரு மணி நேர திவ்விய நற்கருணை சந்திப்பில் பெற்ற ஞானக் கருத்துக்கள்தான் என்னிடமிருந்து வெளிப்பட்டன” என்கிறார்.
இன்று நாம் ஞானமுள்ளவர்களாய் வாழ, நடந்து கொள்ள இயேசுவின் பாதப் படியில் மணிக்கணக்காய் அமர்வோம்.  அவரின் ஆலோசனைக்குச் செவிமடுப்போம். ஆமென்.

சமச்சீர் கல்வி

இவ்வுலகைப் பொறுத்தவரை அழியாத செல்வம் கல்விச் செல்வம்.  இன்று மக்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வு கடந்த காலங்களைவிட சற்றுக் கூடுதலாகவே உள்ளது.  இருப்பினும், இந்திய மாநிலங்களில் குறைந்தபட்ச கல்வி அறிவு இன்னும்கூட எட்டாத மாநிலங்களும் உண்டு.  நம் சமூகங்களிடையே உள்ள ஏற்றதாழ்வுகள் களையப் பட்டு ‘சமத்துவம்’ ஏற்பட வேண்டு மென்று சொன்னால் ‘கல்விப் புரட்சி’ மேலோங்கி பொருளாதாரம் சீரடைய வேண்டும்.  இன்று, பாமரர்கள் கூட ‘நல்ல பள்ளி’ எது என்று கேட்டு தம் பிள்ளைகளைச் சேர்ப்பதில் அக்கறையாய் உள்ளனர்.
முட்டாள், மூடன் என்று பின்தள்ளப் பட்டவனும் ‘நீ மாடு மேய்க்கத்தான் இலாயக்கு’ என்று சொல்லப்பட்டவனும் மாறி அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று சொன்ன காலமெல்லாம் மலையேறி ஏழை எளியவர்களெல்லாம் கூட ‘படிப்பை நோக்கி’ முன் செல்கிறார்கள்.  உலகம் ‘ஒரு கிராமமாக’ கைக்குள் அடங்கி விட்ட நிலையில் படிப்பதற்கான சிலாக்கியங்கள் அதிகரித்து விட்டன.  இருப்பினும் சாதனை படைத்துவரும் மகளிர் படிப்பறிவில்லா விகிதத்தில் சற்று உயர்ந்துதான் காணப் படுகிறார்கள்.  ஒவ்வொரு மாநிலமும் தொலை நோக்குப் பார்வையில் தன்னலமற்று அனைத்து சமூகமும் மேம்பட துரிதமாக செயல்படும் என்றால் ‘நல்லரசு’ வீடெங்கும் நாடெங்கும் தோன்றும்.
இன்றைய நிலையில் பள்ளிக்கு வருகின்ற பிள்ளைகளில் சிலர் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த நிலையில் யாரோ ஒருவர் பாதுகாப்பில் இருந்து படிப்பது இடை நிற்றலை அதிகப் படுத்துகிறது.  மக்களின் பொருளாதார நிலையும் மேலும் இதற்கு வலுவூட்டுகிறது.
தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் என்று சொல்லும் நிலையில் உள்ள மாணவர்கள் பன்னெடுகாலமாய் ஒதுக்கப்பட்டு அமுக்கப் பட்ட நிலையில் பிற சமூக கலப்பு இல்லாததால் அவர்களுடைய அறிவுத் திறன் மற்றும் ஏற்புத்திறன் பிற மாணவர்களுடைய திறனைவிட மிகக் குறைவாகவே உள்ளது.  இன்று “ஒரே பாடத்திட்டம் - ஒரே கல்விக் கழகம்” என்று ‘சமச்சீர் கல்வி’ நெடுநாளைய சிந்தனையின் தாக்கமாக அமல்படுத்தப்படுகிறது.  இத்திட்டம் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.
உளவியல்  ரீதியாக இருவர் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்கின்றபோது நாமே மாணவர்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்துவது சமூக அநீதியாகும்.  இந்நிலையில், கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் அர்ப்பணத் தோடும் கடப்பாடோடும் எவ்வித சார்பெண்ணங் களுக்கும் இடம் தராமல் அனைவரையும் சமமாக மதித்து பாடத்தைத் தெளிந்த சிந்தனையோடு கற்றுத் தேர்ந்து போதிக்க பயிற்சி முழுமை பெற வேண்டும்.
தேர்வு முறைகளை  மாற்றிப் புரிந்து படிக்கின்ற ஆற்றலும் சுயச்சிந்தனைச் சார்பும் படிக்கும் மாணவர்கள் கொண்டு தேர்வைத் தேர்வாக எழுதுகின்ற அடிப்படைப் பயிற்சி மழலையர் பள்ளியிலிருந்து பயிற்றுவிக்கப் படவேண்டும்.  தரமான கல்வி தரமான ஆசிரியர்களால் தரணியயங்கும் வழங்கப் பட்டால் படித்த மேதைகள் கணிசமாக நூற்றுக்கு நூறு பெருகுவர் என்பது உறுதி.  அரசும் வேலை வாய்ப்பைப் பெருக்கி ஊக்குவித்தால் பல நன்மைகள் ஏற்பட்டு கல்வி, பொருளாதார, சமூக வேற்றுமைகள் களையப்படும்.  அதனால் ஒரு புதிய சமுதாயம் உருவாகும்.  மனுக்குலம் பண்பட்டதாய் மிளிரும்.  ஏழை பாழை எல்லாம் அகலும்.
S. செல்வராஜ், விழுப்புரம்

இளைஞர் ஆண்டு 2010

தோழமை நெஞ்சங்களே!


இரண்டாம் வத்திக்கான் சங்கம் வழியாக திருச்சபைத் தளத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் ஒரு வெளிப்பாடாக 1971 ஆம் ஆண்டு சென்னையில் தமிழக ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழு வானது துவங்கப்பட்டது.  தமிழகம் முழுவதும் இளைஞர் குழுக்கள் பரவலாகத் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டும் வந்தன.  இந்நிலையில் 1985ஆம் ஆண்டினை ஐக்கிய நாடுகள் சபையானது இளைஞர் ஆண்டாக அறிவித்தது.  திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அவர்கள் இளைஞர்களின் பங்களிப்பும், பங்கேற்பும் திருச்சபைக்கு இன்றியமையாதவை “இளைஞர்களே நீங்கள்தான் திருச்சபையின் நம்பிக்கை” என இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க அகில உலகக் கத்தோலிக்க இளைஞர் ஆண்டு என அறிவித்தார்.  அதன் விளைவாக ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இளைஞர் குழுக்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே குடையின் கீழ் செயல்பட தமிழக கத்தோலிக்க இளைஞர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.  அன்று முதல்  இன்றுவரை பல தடை களைக் கடந்து, சாதனைகள் பல படைத்து எழுச்சி பெற்ற இயக்கமாக தமிழக வரலாற்றில் தடம்பதித்து வருகிறது.
இளைஞர் ஆண்டு ஏன்?
1985-ஆம் ஆண்டை அகில உலகக் கத்தோலிக்க இளைஞர் ஆண்டாக மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அறிவித்தார்.  எனவே 2010- ஆம் ஆண்டு அதன் வெள்ளி விழா ஆண்டாக அமைகிறது.
தமிழக ஆயர் பேரவை இளைஞர் ஆண்டாக அறிவிக்க ஒப்புதல் அளித்த நாளிலிருந்து மறைமாவட்டம், மாநிலம் எனப் பல்வேறு நிலைகளில் பொதுநிலையினர், துறவியர், குருக்கள், முன்னாள், இன்னாள் இளைஞர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து திட்டம் தீட்டி, இளைஞரே!  விழித்தெழு, ஒளி வீசு என்னும் கருப் பொருளைத் தேர்வு செய்து அதன் வழியாக ஒவ்வொரு மறை மாவட்டத்திலும் ஆண்டுத் திட்டம் உருவாக்கி யுள்ளோம்.  
2010 - இளைஞர் ஆண்டின் ஒரு சில சிறப்பு நிகழ்வுகள்
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டங்கள்.


  • 25  மணி நேர நற்கருணை ஆராதனை.
  • இளைஞர் தியானம்.
  • மாதந்தோறும் இளைஞர் திருப்பலி.
  • திருச்சிலுவைப் பாதை (இளைஞர் களுக்காக).
  • இளைஞர் ஞாயிறு கொண்டாட்டம்.
  • மாபெரும் விவிலிய வினாடி வினாப் போட்டி.
  • இளைஞர் வளர்ச்சிக்கான கலந்தாய் வரங்கம்.
  • உயர் கல்விக்கு வழிகாட்டும் பயிற்சிகள்.
  • மனித உரிமைப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம்.
  • வேலைவாய்ப்பு முகாம் மற்றும் கண்காட்சி.
  • பெற்றோர் இளைஞர் உறவுச் சங்கமம்.
  • இளைஞர் சங்கமம் (மறைவட்டம் மற்றும் மறைமாவட்டம்).
  • பங்குகள் சங்கமம் (நகர்ப்புற, கிராம புறப் பங்குகள்).
  • விளையாட்டுப் போட்டிகள்.
  • மண்ணின் கலைப் போட்டிகள்.
  • பல்சுவைப் போட்டிகள்.
  • மாற்றுத் திறனுடை இளைஞர் களுக்கான சிறப்பு நிகழ்வுகள்.
  • இளம் பெண்களுக்கான சிறப்புப் பயிற்சிகள்.
  • மருத்துவமனை மற்றும் சிறைச் சாலை சந்திப்பு.
  • ஏழைகளுக்கு கல்வி உதவி செய்தல்.
  • முதிர் கன்னிகளுக்கு திருமணம்.
  • ஆற்றுப்படுத்தும் நிகழ்வுகள்.
  • 1,00,000 மரக்கன்றுகள் நடுதல்.
  • 50,000 நபர்கள் இரத்த தானம் செய்தல்.
  • மறைமாவட்ட மாநாடு.
  • மாநில இளைஞர் விருது.
  • 4வது மாநில மாநாடு.


இளைஞர் ஆண்டு துவக்க நிகழ்வு
ஜுன் 20, 2010 மதுரை உயர் மறை மாவட்டத்தில் மேதகு பேராயர் பீட்டர் பெர்ணான்டோ அவர்கள் தலைமையில் இளைஞர் பணிக்குழு ஆயர் தலைவர் மேதகு செளந்தரராஜு ச.ச. முன்னிலையில் மற்றும் ஆயர்கள் வழிகாட்டுதலில் 1000 இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.  இளைஞர் ஆண்டு கையேடு புத்தகம், விழிப்புணர்வுப் பாடல் தொகுப்பு நூல், ஒலி நாடாக்கள் வெளியிடப்பட உள்ளன.


மாநில மாநாடு
ஜனவரி 29, 30. 2011 சென்னை உயர் மறைமாவட்டத்தில் மேதகு பேராயர் பு.னி. சின்னப்பா  ச.ச. அவர்கள் தலைமையில் இளைஞர் பணிக்குழு ஆயர் தலைவர் மேதகு செளந்தரராஜு ச.ச. முன்னிலையில் தமிழக ஆயர் பெருமக்கள், கட்சித் தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.  இம்மாநாட்டில் தமிழக முழுவதிலிருந்தும் ஏறக் குறைய 1 இலட்சம் இளைஞர்கள் ஒன்று சேர்கிறார்கள்.
இப்படி பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இளைஞர்களின் வளர்ச்சியை மையப்படுத்தி அமைய இருக்கின்றன.  இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து தடம் பதிக்க உருவாக்குவோம்.  அவர்களின் வளர்ச்சியில் வழியாய் திருச்சபையும் சமூகமும் வளரும் என்ற நம்பிக்கை ஏற்போம்.  இந்த இளைஞர் ஆண்டுக் கொண்டாட்டம் சிறப்புடன் அமைய செபிப்போம்.  நன்றி!

திருச்சிலுவை

விண்ணைப்   படைத்த   ஆண்டவன்  -  புவி
மண்ணைப்   படைத்திட்டான்    மண்ணும்   மகிழ்வுரவே
மண்ணெடுத்து   ஒரு   மனிதனைப்   படைத்தான்  -  பின்
மனிதனின்   எலும்பெடுத்து   ஒரு  பெண்ணைப்  படைத்தான்
இவர்கள்  ஒன்றாய்  வாழ்ந்து  இன்புறவே  -  சிங்கார
வனத்தைப்   படைத்தான்   அதில்   ஓர்   அதிசயக்
கனியைப்   படைத்து   புசிக்க  வேண்டாம்   எனவும்   சொல்லிவிட்டான்
கூடவே   ஒரு  பாம்பையும்   அனுப்பி   சோதித்தும்   விட்டான்
பெரும்   பாவங்கள்   செய்து   கடவுளை   மறந்த   மனிதன்
கடவுள்   மனிதனாக   வந்து   பிறக்க   வேண்டும்   என்று
அறை  கூவல்   விடுத்தான்  -  மனிதக்   குரலுக்கு   மதித்த
கடவுள்   மண்ணில்   மனிதனாய்   வந்து   பிறந்திட்டார்.
மனிதனாய்   பிறந்த   கடவுள்   மண்ணிலே   -  உயர்
மனித   நேயத்தை   அன்பினாலே   விதைத்திட்டார்
கருணைப்   பார்வையால்   இன்   மொழிகளைப்    பேசி
பாவப்   பட்ட   மனிதர்களைப்   புனிதன்   அணைத்துக்   கொண்டார்
பாவச்   சேற்றில்   இருந்த   மனிதன்   வெளிவரவே   புனிதன்
புது  வழிகள்  காட்டி   புரட்சியால்   புதுமைகள்   பல  செய்தார்
கடவுளைப்   பொய்யன்   புளுகன்   புரட்சிக்  காரன்  எனச்  சொல்லி
மனிதன்   கடவுளைச்   சிலுவையில்   கொன்று   சாகடித்தான்   -  சாகடித்த
சாபமான   சிலுவையே   சாப  விமோசனதிருச்   சிலுவையானது  - மனிதனை
அன்புப்   பாதையில்   வழி   நடத்தும்   அகிம்சை   வழியானது
திருச்   சபையின்  திறவு   கோலாய்   திசை   எங்கும்   சென்றது  மண்ணிலே
மனித  நேயத்தை  வளர்த்து  கடவுளுக்கும்  மனிதனுக்கும் பெரும்   பாலமானது
தங்க. ஆரோக்கியதாஸ், ஆவடி

Back to School

கத்திரி வெயில் காலம் முடிவுற்றாலும் வெயிலின் அகோரமும் வெப்பத்தின் கொடூரமும் இன்னம் குறைவின்றி நீண்டு கொண்டே செல்கிறது.  கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலில் கொளுத்தும் வெயிலில் மீண்டும் பள்ளிகள் நோக்கிப் பயணம் செல்வது பிள்ளைகள் மட்டுமல்ல;  பெற்றோர்களும் தான்.  தம் சின்னஞ் சிறுசுகள் (புத்தக) சுமை தூக்கிச் செல்வதைப் பொறுக்காத பெற்றோர், தாமே அவைகளைச் சுமந்துகொண்டு பள்ளிவாயிலில் சுமைகளை மாற்றிக் கொடுத்துவிட்டு, “டாட்டா” காட்டித் திரும்பும் காட்சிகள் மீண்டும் இப்புதிய கல்வி யாண்டில்.
“மீண்டும் பள்ளி” (back to school) என்பது நிச்சயமாக பழைய கனவுகளைச் சுமந்து செல்கிற ஒன்றாக இருக்க முடியாது.  வகுப்பு மாறி உயர்ந்து செல்கின்ற பிள்ளைகள், இப்புதிய கல்வியாண்டில் தம் செயல்பாடு மற்றும் உயர்வு பற்றிப் புதிய கனவுகளைச் சுமந்து செல்கிறார்களோ இல்லையோ அவர்களின் பெற்றோர்கள் நிச்சயமாக புதிய கனவு காண்பர்.  அதிலும் குறிப்பாக, தொடக்க நிலையிலிருந்து உயர்நிலைக்கும், ஒன்பதிலிருந்து பத்தாம் வகுப்பிற்கும், +1லிருந்து +2க்கும் சென்றுள்ள பிள்ளைகளைப் பற்றிய கவலை இப்போதே பெற்றோரைப் பற்றிக் கொள்ளும்.  அவர்கள் தம் பிள்ளைகளைப் பற்றிய கனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறோம்.  
அனைவரும் கல்வி பெற்றிட வேண்டும் என்ற ஆசையும் திட்டமும் நம் நாட்டில் புதிதல்ல.  கல்வியில் உயர்ந்தால் மக்களின் வாழ்க்கை நிலையும் உயரும் என்பதெல்லாம் தலைமுறைதோறும் பகிரப்படுகிற சிந்தனையே.  நம் தமிழகத்தில், ஒருவேளை இச்சிந்தனை செயல்வடிவ மாகியுள்ளது என்கிறது ஒரு புள்ளிவிவர  கணக்கு 6 முதல்14 வயது வரை உள்ள குழந்தைகளில் 99 சதவிகிதம் குழந்தைகள் பள்ளிகளில் உள்ளனர்.  அதேபோல 11 முதல் 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளில் 97 சதவிகிதம் பேர் பள்ளிக்குச் செல்கின்றனர் (பு. தலைமுறை). எண்ணிக்கையில் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ள தமிழகம், கல்வித் தரத்தில் வெற்றி காணவில்லை என்பதும் உண்மையே.  தமிழகத்தில் 5ஆம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளில் கிட்டத்தட்ட 65 சதவிகிதக் குழந்தைகளால் எளிய 2ஆம் வகுப்புக் கதைகளைக்கூட வாசிக்க முடியவில்லை.  அதே வகுப்பு படிக்கும் 45 சதவிகிதக் குழந்தைகளால் கழித்தல் கணக்குகளைக்கூட செய்ய முடிய வில்லை (பு. தலைமுறை). இது பொதுவான கருத்துருவம்.
நமது கத்தோலிக்கப் பள்ளிகள் ‘மதிப்பெண்’ தரத்தையும் தாண்டி மனித வாழ்வின் கோட்பாடுகளை, மனிதநேய மதிப்பீடுகளை உள்ளடக்கிய உயர் கல்வியைத் தர வேண்டும் என்றே விரும்புகிறோம்.  கடந்த கல்வியாண்டில் (2009 ‡ 2010) பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் எத்தனையோ நமது பள்ளிகள் 100 விழுக்காடு வெற்றி கண்டன.  வாழ்த்துகிறோம்.  இருப்பினும் மாநில அளவிலான முதல் இடங்களில் நம் பள்ளிகளின் பெயர்கள் அதிகம் காணப் படவில்லையே என்ற ஏமாற்றமும் பலரிடம் மிஞ்சியுள்ளது.
தற்போதைய சமூகப் பின்னணியில் மதிப்பெண் சார்ந்த உயர்வு ஒருபுறம் கட்டாய தேவையாயுள்ளது என்றாலும், வாழ்வு சார்ந்த (life-oriented), மனித மதிப்பீடுகள் சார்ந்த (human values), ஒழுக்கவியல் சார்ந்த (morality) கல்விச் சிந்தனைகள் தரப்படுதல் மிகமிக தேவையாகிறது.  மறைக்கல்வி, நன்னெறிக் கல்வி, மாணாக்கர் இயக்கங்கள் என்றெல்லாம் நமது தனிப்பட்ட (morality)  செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறும் போது அவற்றின் மூலம் தரப்படுகிற சமூக, சமய, கலாச்சார, பண்பாடு, மதிப்பீகள் உயர்ந்தே இருக்க வேண்டும்.  இந்த முழுமனித உயர்வுநிலைக் கல்வி தருகிற அனைத்துப் பள்ளிகளும் முழு வெற்றி பெறுகின்றன என்பது மிகையல்ல.  அதற்காக தன்னலம் பாராது உழைத்து சாட்சிய (witness) வாழ்வு வாழ்கின்ற அனைவரையும் மனதார பாராட்டு கின்றோம்.  ஆனால் இன்றைய மாணாக்கரின் வாழ்வுச் சூழலைக் காணுகின்றபோது இந்தக் கல்விப் பணியின் தன்மைகள் இன்னும் வீரியமாக்கப்பட வேண்டும் என்பது உறுதியாகிறது.  இப்புதிய கல்வியாண்டில் முழுமனித உருவாக்கத்திற்கான செயல்பாடுகள் நமது பள்ளிகளில் அதிகமாக்கப்பட திட்டமிடுவோம்.  பல்வேறு இயக்கங்களின் செயல்பாடு களுக்கும் முக்கியத்துவம் தர திட்ட மிடுவோம்.  ஒருவேளை நாம் சொல்லலாம்;  ‘இந்த extra செயல்பாடுகள், இயக்கங்கள் அதிகமான நேரத்தைத் தின்றுவிடுகின்றன.  10, +2 வகுப்புகளுக்கெல்லாம் பாடம் நடத்துவது கடினமாக உள்ளதே’.  இம்மதிப்பீட்டு வாழ்வுக்கல்வி என்பது 10,12ஆம் வகுப்புகளுக்கு என்று மட்டுமல்ல சிறுவயது முதல் தரப்படவேண்டியவை இக்கல்விமுறைகள்.  கலாச்சார, மதிப்பீட்டுக் கல்வி கற்றுக் தருவதற்கு வயது வரம்பு இல்லை.  அனைவருக்கும் சிறுவயது முதலே முழுமனித வயர்ச்சிக்கான கல்வியைத் தர, நேரம் ஒதுக்கி வைப்போம்.  அப்போது மதிப்பெண் சார்ந்த கல்வியை விட, மனித வாழ்வு உயர்வைச் சார்ந்த தரமான கல்வியும் நம் மூலமாக தரப்படும்.  இதுவே நமது முழு வெற்றி.  இப்புதிய கல்வியாண்டின் செயல்பாடுகள் வெற்றி யடைய வாழ்த்துகிறேன்.
சே. சகாய ஜாண்