மாதாபக்தி பரப்பு

அன்னை  பக்தி     பரப்பு
அது    கொடுக்கும்    சிறப்பு!
உன்னை    உயர்த்திக்    காட்டும்
உன்ன(த)    வாழ்வைக்    கூட்டும்!!
அன்னை    நமக்கு    அடைக்கலம்
அலகை    ஓடும்    படைக்கலம்!
உன்னைப்    பாதுகாப்பாள்
உரிய    மோட்சம்    சேர்ப்பாள்!!
மாதாவை    நம்பி     வாழ்வாய்
மறுத்தால்    நீயும்    தாழ்வாய்!
ஆதாம்    ஏவாள்    பாபம்
அழிக்கப்    பிறந்த    அன்னை
தன்னைத்    தாழ்த்தி    உயர்ந்தாள்
தாய்குலத்துச்    சிறந்தாள்!
அன்னை    உன்னத    நற்கதி
அமர    வைப்பாள்     உசத்தி!!
தன்னைத்    தாழ்த்தி    உயர்ந்தாள்
தாய்குலத்    திலகம்    பேறடைந்தாள்!
அன்னை    நமக்குத்    தாய்தான்
அனைவரும்    அன்னை   சேய்தான்!!
மரியை    வாழ்வில்    நம்பு
மனத்தில்    வளரும்    தெம்பு!
புரிந்து    வாழ்வில்    நடப்பாய்
புரிந்த    பாபம்    அழிப்பாள்!!

கவிஞர் பெஸ்கிதாசன்

0 comments:

Post a Comment