சியன்னா நகர் புனித கத்தரின் (1347 - 1380)

இத்தாலி நாட்டின் சரித்திரத்திலேயே மிகப் புகழ் வாய்ந்த பெண்மணி என்று கருதப்படுகின்றார். இவரின் நினைவுச் சின்னம் உரோமை நகரில் மிக முக்கியமான இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. தொமினிர் 3ஆம் சபையில் சேர்ந்தவர். இவருக்கு 5 காயங்களை ஆண்டவர் கொடுத்திருந்தார்.

இவரது அன்புப் பெற்றோரின் 25 மக்களில் கடைசிக் குழந்தையாவார். 6 வயதிலேயே ஆண்டவரின் தரிசனம் பெற்றார். ஜெபத்தையும் தனிமையையும் சிறு வயதிலேயே விரும்பினார். 16 வயதில் டொமினிக்கன் 3வது சபை உறுப்பினராகச் சேர்ந்து கொண்டார். திருப்பலிக்கும் ஆன்ம குருவிடம் பாவசங்கீர்த்தனம் செய்வதற்கும் மட்டுமே அறையை விட்டு வெளியே செல்வார். தனது வீட்டு வேலைகளைச் செய்வதுடன், நோயாளிகள், ஏழைகள் ஆகியோரைப் பராமரிப்பதிலும் ஈடுபாடு கொண்டார்.

இவரது கடைசி நாட்களில் திருச்சபைக்குள் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டது. சொல்ல முடியாத தீய மாதிரிகைக்கு இது வழி ஆயிற்று. இவ்வாறு அலைக்கழிக்கப்பட்டு வேதனையுற்ற திருச்சபைக்காகத் தன் வாழ்வைக் காணிக்கையாக்கி உயிர் விடுவதாகக் கூறி 35 வயதில் உரோமையில் அமைதியாகக் காலமானார்.

0 comments:

Post a Comment