என்னால் உலகை மாற்ற முடியுமா?

அனுபவமிக்க அறிவான வயதான ஞானி ஒருவர் தங்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்.

நான் இளமையாக இருந்த காலத்தில் ஒரு புரட்சி மனிதராக வாழ்ந்தேன். அப்பொழுது இறைவனிடம் "உலகை மாற்ற சக்தியைக் கொடும் தெய்வமே" என்று மன்றாடினேன். பிறகு நான் நடுத்தர வயதை அடைந்த பொழுது, வாழ்வின் பாதி நாட்களை கடந்தும் ஒருவரைக்கூட மாற்ற முடிய வில்லையே என நொந்துபோய் என் மன்றாட்டை மாற்றிக் கொண்டு, ஆண்டவரே, என்னோடு வாழும் என் குடும்பத்தினர், என் நண்பர்கள் ஆகியோர்களை மட்டும் மாற்ற அருள் புரியும். அப்பொழுது தான் நான் மன நிறைவு பெறுவேன் எனப் பிரார்த்தனை செய்தேன். அதுவும் நிறைவேறவில்லை. மனம் வருந்தி, முதிர்ந்த வயதில் என் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டு வாழ்ந்து வருகையில், என் எண்ணங்கள் இவ்வாறாக வெளிப்பட்டன. நான் எவ்வளவு முட்டாள் தனமாக நினைத்து; வாழ்ந்து விட்டேன் என வருந்தி என் வேண்டுதலை முயன்றேன். "ஆண்டவரே என்னையே மாற்றிக் கொள்ள வரம் தாரும். என் வாழ்வின் தொடக்க காலத்திலேயே இவ்வாறாகச் செபிக்காமல் பிறரை மாற்ற வேண்டும் என செபித்து என் வாழ்நாட்களை வீணாக்கி விட்டேனே என வேதனைப்படுகின்றேன். இன்று முதல் என்னையே மாற்றி நல்லவராக வாழும் வரம்தாரும்" என்றேன். எனவே நம்மையே நாம் உணர்வோம். வாழும் நாட்களில் பிறரையும் ஏற்று வாழுவோம்.

"இந்த உலகில் வாழும் மனிதர்களில் நானும் ஒருவன். என்னால் முடிந்தவரை கடினமாக உழைத்து அனைவருக்கும் நன்மைகள் பல புரிந்து உதவுவேன். மக்கள் மனதில் இடம் பெறுவேன் என்ற எண்ணத்தை மேற்கொள்வேன். இறப்பதற்கு முன்பே என்னை முழுமையாக பிறருக்குக் கையளிப்பேன். வாழ்க்கை ஒரு சிறிய மெழுகு வர்த்தி (Brief Candle). என் குறுகிய வாழ்நாட்களில் பெற்றுக் கொண்ட பிரகாசமான, அற்புதமான வாழ்வாகிய ஒளியை எதிர்காலத் தலைமுறைக்கு கொடுக்கும் முன்பே, இன்றே, இப்பொழுதே முடிந்த வரை பிரகாசமாக ஒளிரச் செய்து வாழ்ந்து காட்டுவேன்".

- ஜார்ஜ் பெர்னாட்ஷா.

0 comments:

Post a Comment