புனித லீமா ரோஸ் 1586-1671


பெரு நாட்டிலுள்ள லீமா நகரில் 1586-ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது ஞானஸ்நானப் பெயர் இசபெல்லா. இவரது முகம் ரோஜா மலரை ஒத்திருந்ததால், பின்னர் இவருக்கு ரோஸ் எனப் பெயர் வழங்கலாயிற்று. பாவிகள் மனந்திரும்பும் படியாக இவர் அடிக்கடி செபிப்பார், உழைப்பார், அழுவார். தன் தந்தையின் தோட்டத்தில் ஒரு சிறு குடிசை அமைத்து அங்கு போய் செபிப்பார்.

ஆண்டவர் பட்ட பாடுகளைப் பற்றி அடிக்கடி சிந்திப்பார். உள்ளத்தின் வேதனைகளையும், உடலின் நோவுகளையும் சகிப்பது இவருக்கு எளிதாயிற்று. ‘இனிய இயேசுவே, உமது திருச்சித்தத்தின்படியே எனது வேதனைகளையும், அதே நேரத்தில் உம்மீது எனக்குள்ள அன்பையும் அதிகரியும்’ என்பார். வேதனைகளைப் பொறுமை யோடு சகிப்பார். தானே தவ முயற்சிகளைத் தேர்ந்தெடுத்து செய்து வருவார். இளம் வயதிலேயே தன் கன்னிமையைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்தார். புனித சியன்னா கத்தரீனம்மாளை மேல்வரிச் சட்டமாக வைத்து தவ வாழ்வு நடத்தினார். தையல் வேலை இவருக்கு நன்றாகத் தெரியும். குடும்பத்தில் பணமுடை ஏற்பட்டபோது, இவர் தையல் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். பலர் இவரை மணக்க விரும்பியதால், இவர் தன் தலைமுடியை வெட்டி 11 ஆண்டுகளாகத் தவ வாழ்வு நடத்தினார்.

கற்புக்கும் விசுவாசத்திற்கும் மாறான சோதனைகளை அவர் வீரத்துடன் எதிர்த்துப் போராடுவார். பின் அவர் மனதில ஒப்பற்ற அமைதியும் ஆனந்தமும் ஏற்படும். பாவிகளின் பாவங்களுக்குப் பரிகார மாகவும், உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு ஆதரவாகவும் தனது தவ முயற்சிகள் அனைத்தையும் ஒப்புக்கொடுப்பார்.

சிந்தனை : ‘நம் ஆண்டவரின் கரங்களில் ஒரு பெரிய தராசைக் கண்டேன். அவர் மக்களுக்கு வர அனுமதித்த துன்ப துயரங்களுக்கு ஏற்ப வரங்களைக் கவனத்துடன் பகிர்ந்து கொடுத்தார். கடவுளுடைய தராசில் துன்பத்தின் அளவு வரப்பிரசாதம் கிடைக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். நமது சிலுவைகள் யாருடைய தராசில் நிறுக்கப்படுகின்றன என்று அறிவோமானால், நமக்கு வரும் சிலுவைகளைப் பற்றி நாம் ஒருபொழுதுமே முறையிடமாட்டோம். 

எட்வர்டு

0 comments:

Post a Comment