சுதந்திர பயணம் தொடரட்டும்


வெள்ளயர்களிடமிருந்து நாம் சுதந்திரத்தைத் தந்திரமாகப் பெற்றோம் என்பதைவிட, அவர்களின் கைகளில் ‘நம் குடுமிகளைக் கொடுத்து, மீண்டும் பெற்றோம்’ என்பதை வரலாறு மறக்காது. ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க நினைத்தார் திப்பு சுல்தான். நல்ல சிந்தனை. ஆனால் அவர்களை விரட்ட பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடியது அவரது பலவீனம். போர்ச்சுக்கல் நாட்டைச் சார்ந்த வாஸ்கோடகாமாவின் உதவியைக் கள்ளிக் கோட்டை ஜாமரின் மன்னர் நாடினார். ஏனெனில் அவருக்குப் பல பகைவர்கள் பக்கத்திலே இருந்தனர். வியாபாரம் செய்ய வந்த வாஸ்கோடகாமா கோவாவின் முதல் ஆளுநரை நியமித்தார். தற்காலக் கூட்டணிகளைப் போல, முற்காலத்திலும், ஏன், இயேசுவின் காலத்திலும் கூட்டணிகள் இருந்திருக்கின்றன. இயேசுவைத் தொலைக்க, கருத்து வேறுபாடுகள் உள்ள பரிசேயர்களும் சதுசேயர்களும் ஒன்றுசேரவில்லையா? இந்து - முஸ்லீம் பிரச்சினை பெரிதாகி, ‘கைநழுவிப் போன காலத்தில்’, ‘சட்டி சுட்டதா கை விட்டதடா’ என்ற பாணியில் ஆங்கிலேயர்கள் பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்த மறுநாள் நமக்குச் சுதந்திரம் தந்தார்கள்.

20-ஆம் நூற்றாண்டில் 40களில் பெரும்பாலான நாடுகள் சுதந்திரம் பெற்றன. இஸ்ராயேல் முதல் இந்தியா வரை பல நாடுகள் அரசியல் சுதந்திரம் பெற்றன. ஜூலை மாதம் 9-ஆம் நாள் தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று, 193-வது நாடாக ஐ.நா. சபையில் ஐக்கியமானது.

நாம் பெற வேண்டிய சுதந்திரம் பலப்பல. பொருளாதார, சமூக, மத விடுதலைகளும், ஆணவம், வெறுப்பு, பேராசை, பழிக்குப் பழி, கீழ்ப்படியாமை, பிறரை மதிக்காத தன்மை, பகிர்ந்து கொள்ள மறுக்கும் நிலை போன்ற உள்மனச் சிறையிருப்புக்களிலிருந்து விடுதலை பெற வேண்டும். பொருட்கள் கிடைக்க வில்லையே (problem of scarcity) என்ற நிலை மாறி, எந்தப் பொருளை வாங்குவது (problem of affluence) என்னும் குழப்ப நிலைக்கு நாம் உந்தப்பட்டிருக்கிறோம். நுகர்வோர் கலாச்சாரம் (consumerism) பெருகி விட்டது. சமூக அளவில் மாணவர் சேர்க்கை எந்தெந்த விழுக்காடு என்ற அடிமைத்தனம், வேலைவாய்ப்புக்களில் சாதி வாரியான ஒதுக்கீடு மூலம் தரமான கல்வி பயின்றோர் புறக்கணிக்கப்படும் நிலை, பெண்களுக் கான 50% இடஒதுக்கீடு என்னும் பல அடிமைத்தனங்களிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்?

ஊழல், கறுப்புப் பணம், வரி ஏய்ப்பு, கள்ளக்கடத்தல், வேலையின்மை, சிகப்புநாடா முறை, சுவிஸ் வங்கியில் பணம் சேர்த்தல், தாராளமயமாக்கல், உலக மயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற பல அடிமைத்தனங்களிலிருந்தும், மதச் சுதந்திரம் பெறாத நிலையிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்.

நம்மவர்களைப் பொறுத்தமட்டில், தற்கால நிலை
முதல் நிலை: திருஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிவதுதான் பொதுநிலையினரின் கடமை
இரண்டாம் நிலை:திருஆட்சியாளருடன் இணைந்து பொதுநிலையினர் பணிபுரிய வேண்டும்
மூன்றாம் நிலை:பொதுநிலையினர் திருச்சபையின் ஓர் அங்கம்
நான்காம் நிலை:பொதுநிலையினரே திருச்சபை

0 comments:

Post a Comment