இது பூக்களின் காலம் . . .


பசித்தது ...
அவனே உணவானான்
காசி ஆனந்தன்
கள்வன் இல்லை
என்ற
கூற்றை உடைக்க
சிலம்பை உடைத்தாள்
ஒருத்தி!
பத்தினி என்பதைப்
பறைசாற்ற
தீ மிதித்தாள்
இன்னொருத்தி!
இந்திக்குக் கரிபூசி
செம்மொழி காக்க
தீக்குளித்தான்
சின்னச்சாமி!
இனம் மீட்க
தன்னையே எரித்துக் கொண்டான்
முத்துக்குமார்!
இவைகளுக்கான
நீதியைத்
தியாகம்தான் தந்தது.

கங்கையைக் காக்க
உண்ணாவிரதமிருந்து
இறந்து போனான்
இளம் துறவி நிகமானந்தா!
நாட்டிற்காக
அவன் அழுதான்
அழுததில் வற்றிப் போனது
கங்கை!
விடுதலைக்காக
நீராகாரம் அருந்தாது
உண்ணாநோன்பிருந்து
வீரச்சாவடைந்தான்
திலீபன்!
அவன்
இறப்பில் வெடித்தது
புரட்சி!
இன்று
உண்ணாவிரதம்
அரசியலானது!
இங்கு
சில மணி நேர
உண்ணாவிரதங்களும்
நடந்ததுண்டு!
இன்று
மழை பெய்யாமலே
வெளுக்கிறது
காவிகளின் சாயம்
உண்ணாவிரத பந்தல்களில்!!

ஜே. தமிழ்ச்செல்வன்

0 comments:

Post a Comment