நல்லவற்றில் நிலைக்க


SMS செய்தி ஒன்று வந்தது : "ஏப்ரல்1 ஆம் தேதி ஏமாந்தால் ஒரே ஒரு நாளோடு முடிந்துவிடும். ஆனால் ஏப்ரல் 13ஆம் தேதி ஏமாந்தால் அது ஐந்து ஆண்டு களுக்கு நீடிக்கும். எனவே நன்றாக சிந்தித்து நல்லவர்களுக்கு ஓட்டு பதிவு செய்யுங்கள்".

இவ்விதழ் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும்போது ஓட்டு போட்டு முடித்திருப் பீர்கள். இன்னும் சரியாக ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அதன் விளைவு என்ன என்று தெரிந்து கொள்ள. நல்லதே விளையும் என நம்புகிறோம்ஜெபிக்கிறோம்.

இயேசுவின் இறப்போடு எல்லாம் முடிந்து போயிற்று. இனி புதிய போதகனின் தொந்தரவு இல்லை என்றுதான் நினைத்தது ஒரு கூட்டம். ஆனால் விரைவாகவே அவர்களுக்கு வந்தது ஏமாற்றம்.  நாட்களில் வந்த "உயிர்ப்பின் செய்தி" பெரும் அதிர்ச்சியாயிற்று அவர்களுக்கு. நம்ப முடியாமல் ஆயிற்று. இயேசுவை எதிர்த்தவர்கள் மட்டுமல்லஅவருடைய சீடர்களுமேகூட நம்ப முடியாமல் இருந்தனர்.

நம்பிக்கை என்கிற வார்த்தை மனித வாழ்விற்கு அடிப்படையே. இயேசுவின் உயிர்ப்பு பற்றி சிந்தனையளவில் உள்ளோர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தாலும் பதில் என்பது விசுவாசத்தோடு இணைந்ததே. ஆனால் எனக்குள் எழும் கேள்வியும் சிந்தனையும் இதுவே. எல்லோருமே உயிர்ப்பைநம்பக்கூடிய அளவிற்கு ஈஸ்டர் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் சான்று பகரவில்லையா வாழ முடியவில்லையா உயிர்ப்பின் மகிமைக்கு விழா எடுப்போர் தம் வாழ்வில் நல்லவற்றை உயிர்ப்பிக்கவில்லையா முழுமையாக இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சாவுக்குப் பின் உயிர்ப்பு எனச் சொல்வோர் தாம் வாழும் இக்காலத்தில் நல்ல வாழ்வுசெயல்கள் மூலம் உயிர்ப்பின் மகிமையை உணர மறந்த நிலை. தீமைகள் புதைக்கப் படுவதும் நன்மைகள் வாழ்வதுமே உயிர்ப்பின் மகிமை. இத்தன்மை புரியாத நிலையில் தீமைகளோடு இணைந்து கொண்டு இயேசுவின் மதிப்பீடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும் நிலையில் உயிர்ப்பு அர்த்தமே இல்லாமல் மாறிப் போனது.

சமூக நன்மைகள் . . . அதை வளர்க்கும் மனித மனங்கள் . . . நல்லவற்றில் நிலைத்து நிற்கும் செயல்பாடுகள் உயிர்க்க வேண்டும் என விரும்புகிறோம். நாமும்வீடும்சமூகமும்திருச்சபையும் உயிரூட்டமுள்ளதாய் மாற தனி மனித மனங்கள் உயிர்க்க வாழ்த்துகிறேன்.

உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்!


சே. சகாய ஜாண்

0 comments:

Post a Comment