இளைஞனே! விழித்தெழு! ஒளிவீசு!!


முன்னுரை

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்பதற்கேற்ப இந்த உலகத்தில் பிறந்திருக்கிற இளைஞர்களிடம் நிறைய திறமைகள் உள்ளன. ஆனால் பொறுமை இல்லை. அவர்களுடைய திறமை இந்த உலகிற்கு எப்படி ஒளிவீசும் என்பதைப் பினவருமாறு காண்போம்.

இளமைப் பருவம் என்றால் என்ன?

இளமைப் பருவம்தான் குறிப்பிடத் தக்க பருவம். எதனையும் செய்யத் துடிக்கும் பருவம். துணிச்சல் மிக்க பருவம். சாதனைகள் பல செய்யத் துடிக்கும் பருவம். கனவுகள் பல காணத் துடிக்கும் பருவம். வெயிலின் அருமை நிழலிலே தெரியும். அதுபோல இளமையின் அருமை முதுமையில் தெரியும். செய்ய வேண்டிய எந்தச் செயலையும் இளமையிலே செய்து முடித்தல் வேண்டும்.

இளைஞர்களிடம் இருக்க வேண்டியவை

அமைதியாக இருஅடிமையாக இராதே.

பணிவாக இருபதுங்கி விடாதே.

நம்பிக்கை என்பது நூறாவது படி என்றால் துணிச்சல் என்பதுதான் தொண்ணூற்று ஒன்பதாவது படி.

வெற்றி என்பது நூறாவது படி என்றால் முயற்சி என்பதுதான் முதற்படி.

உன் முயற்சி வளர்க! வெல்க!

மாரூர் தாராபாரதி சிந்தனைகள்.

மூலையில் கிடக்கும் வாலிபனே!

வேலை கிடைக்கவில்லை என்று மூலையில் கிடக்கும் வாலிபனேமுயற்சி செய்யாவிட்டால் எப்படி வேலை கிடைக்கும் எனது வாழ்க்கை பயனற்ற பாலைவனம் போல் ஆகிவிட்டதே என்று எதற்குப் பல்லவி பாடுகிறாய்.

விரல்கள் பத்தும் சொத்து

வேலை செய்ய ஒரு பொருளும் இல்லையே என்று நினைப்பது அறியாமைக் குணம். இருகை விரல்களும் மூலதனம். அவற்றின் மூலம் கருங்கல்லையே தூள் தூளாக ஆக்கிவிடலாம். உலகையே ஒரு கையில் சுழற்றிவிடலாம்.

சுண்டுவிரல் நகமாய் வானம்

கை கட்டை விரலின் உயரத்தைவிட இமயமலை குட்டையானது என்று கூறு. சுண்டுவிரலின் நகமாய் விரிந்த வானம் சுருங்கிவிட்டது எனப் பிறருக்குச் சொல்.

தொடுவானம்தான் உனக்கு எல்லை

உன் வலிமை மிக்க இரண்டு தோள்களும் நீ தொழில் புரியும் தொழிற் சாலையாகும். நீ விரும்பித் தொழில் புரியும் இடமே உனக்கு மலர்ச்சோலை ஆகும். இனி உனக்கு இல்லை கவலை. இனி தொடுவானம்தான் உன் எல்லை.

கங்கையும் சிந்துவும் ஓடி வரும்

உன் கால் விரல்களோடு கோடு கிழித்தால் அதில் கங்கை நதியும்சிந்து நதியும் ஓடி வரும். உன் வலிமை மிக்க தோள்கள் வடதுருவத்தையும் தென் துருவத்தையும் இணைக்கும் பாலமாகும்.

வேலைகளல்ல வேள்விகளே

மனிதனே மாபெரும் சக்தி கொண்ட நீ மண்புழு அல்ல. உன் சக்தியை விண்ணடை சென்று வெற்றி கொள். உன் மாபெரும் சக்தியை அங்கு நிகழ்த்து.

விண்ணிலும் மண்ணிலும் ஏற்படும் நிகழ்வுகள் வேலைகளல்ல வேள்விகளே.

இளைஞர்களுக்கு விழிப்பூட்டும் கவிதைகள்

இளைஞனே!

விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எல்லாம்

உழைத்துக் கொண்டிருப்போம்.

உளிபடாத கல் சிலையாவதில்லை

உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை

சோர்வும் சோம்பலும் கண்டு நூறு நாட்கள் வாழ்வதைவிட

பேருழைப்போடு ஒரு நாள் வாழ்தல் மேலானது.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும் வாழ

நின்றால் ஓடி விடுவதில்லை

எதையும் தாங்கும் இதயமிருந்தால்

இறுதி வரை அமைதி கிடைக்கும்

இளைஞனே!

எழுச்சி கொள் உறக்கம் என்பது புதைமணல்

போராடு போராட்டம் இல்லாத வாழ்க்கை

நீரோட்டம் இல்லாத ஆறு போன்றது.
எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்
எனவே இளைய நண்பர்களே!

வேகத்தைக் குறையுங்கள்

விவேகத்தைத் தேடுங்கள்

வாழ்வு வளமாக அமையும்.

இளைஞர்களே! மேற்கண்ட கருத்துகள் மூலம் உங்கள் திறமையை இந்த உலகிற்கு ஒளிவீசுங்கள். பிறப்பைச் சம்பவமாக்கிஇறப்பைச் சரித்திரமாக்க வேண்டும் என்ற உறுதி எடுத்து இந்தியாவைத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்ய வேண்டும்.

வாழ்க இளமை! வளர்க திறமை!

அஞ்சுதா
ஆம் வகுப்பு
புனித பேட்ரிக் மே.நி.பள்ளி
அளுந்தூர்  திருச்சி

0 comments:

Post a Comment