பொது எதிரி

கடவுளைப் போல் ‘நான்’
அகம்பாவம் கொண்டவன்
தான் இழந்த சொர்க்கம்
தனக்குக் கீழ் மனிதன்
அடைய ஒவ்வானோ?
துன்மார்க்கன் முதல் பெண் ஏவாளை
வஞ்சித்து தீமையை இரத்தத்தில்
கலந்தான்
அன்று முதல் பொறாமை
கொலை கீழ்ப்படியாமை
இன்னபிற அரங்கேறின
மனித வரலாற்றில்
உலகம் சாத்தானின் பிடியில்
முழுவதும் உள்ளது
மானுடர் மீது கொண்ட
தணியா தாகத்தால் தம்
ஒரே பேறான அன்பு மகனைப்
பரிகாரப் பலியாக்கினார்
அன்பு தந்தை
ஒவ்வோர் ஆன்மாவும் மீட்கப்படுவது
இறைச்சித்தம்.
‘நிலையற்ற அற்ப இன்பத்தைத் தேடி
ஆன்மாவை இழப்பது பெரும்பாவம்’
ஜெப ஆவியை எழுப்பிக்
கதறி  மன்றாடும்போது
கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
மனிதன் மனிதனுக்கு எதிரியல்ல
மனிதர் அனைவர்க்கும்
பொது எதிரி அலகையே!
‘நம் அழிவு’ அவன் உயிரில்
கலந்ததாலேயே!
‘அவனை’ மிதிப்போம் முறியடிப்போம்
ஒன்றுசேர்வோம் போராடுவோம்
சாத்தானை வெல்ல ஆவியின்
வரம் வேண்டி நாளும் வேண்டுவோம்
ஆயிரம் கால இறையாட்சியைச்
சொந்தமாக்குவோம்
இறுதி நாளில் அக்கினித் தீர்ப்பினின்று
தப்புவோம்
புதிய வானம் புதிய பூமி
காண்போம்
புனிதராய் மூவொரு கடவுளை
தினம் துதிப்போம்
நித்திய பேரின்பம் சுவைப்போம்
முகம் முகமாய் இறைவனைக்
காணும் பேறு பெறுவோம்!

ச. செல்வராஜ், விழுப்புரம்

0 comments:

Post a Comment