அனனை மரியா

பூலோகத்தில் பெற்ற தாயைப் போற்றாத ஜீவன் இல்லை.  தாயை மதிப்பதாலேயே தாய் நாடு என்றும் தாய் வீடு என்றும் சொல்கிறோம்.  தாயிற்சிறந்த தொரு கோயில் இல்லை என்றும் அன்னை ஓர் ஆலயம் என்றும் பெருமை பாராட்டித் தாயைத் பூலோகத்தில் பெற்ற தாயைப் போற்றாத ஜீவன் இல்லை.  தாயை மதிப்பதாலேயே தாய் நாடு என்றும் தாய் வீடு என்றும் சொல்கிறோம்.  தாயிற்சிறந்ததொரு கோயில் இல்லை என்றும் அன்னை ஓர் ஆலயம் என்றும் பெருமை பாராட்டித் தாயைத்தெய்வமாய் மதிக்கிறோம்.  இந்த தாய்களுக்கெல்லாம் தாயாக விளங்குபவர் அன்னை மரியாள்.  மண்ணகத் தாய் இம்மண்ணகத்தில் மட்டும்தான் தாய்.  ஆனால், தாய் மரியாளோ மண்ணகத்திற்கும் விண்ணகத்திற்கும் தாய்.  அவர் என்றும் வாழும் தாய்!
அன்னை மரியாள் இறைவன் தேர்ந்து கொண்ட ஆலயம்.  இறை இயேசு உறைந்த ஆலயம்.  மாசுமருவற்ற பரிசுத்த ஆலயம்.  “இதோ ஆண்டவரின் அடிமை” என்று தன்னைத்தாழ்த்தி“பேருடையாள்” என உலகம் போற்றுமே என ஆண்டவர்க்குப் புகழ்க் கீதம் பாடியவர்.  “அருள்நிறை பெற்றவர்” எனப் பாராட்டப்பெற்றவர்.  “ஒரு வாள் ஊடுருவும்” என்று முன்னுரைத்து வியாகுலங்கள் பல தாங்கிய வியாகுலத் தாய்.  தம் இறை மகனாம் இயேசுவின் வாழ்க்கையை ஜெபமாலையாக்கி தியானிக்கச் செய்த ஜெபமாலை மாதா.  பாவச் சேற்றில் விழும் மாந்தர் பரமனிடம் சென்று யாசிக்கப் பயப்படும்போது வலிமையுள்ள மிகச் சிறந்த பரிந்துரையாளர்தான் நம் தாய் மரி.
“உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்” என்று ஆண்டவரால் முன் குறிக்கப்பட்டவர்.  சிலுவை அடியில் நின்ற புனித அருளப்பரிடம் “இதோ உன் தாய்!” என்று இறை இயேசுவால் அடையாளம் காட்டப்பட்டவர்.  பிற சபை கிறித்தவ சகோதரர்கள் திருவிவிலியத்தை வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொண்டு அன்னையை மறுதலித்துக் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.  ஆண்டவர் இயேசு “தன் பெற்றோரைவிட ஏன் தன் உயிரைவிட மேலாகத் தன்னைக் கருதுபவன்தான் தன் சீடனாக இருக்க முடியும்” என்று அர்ப்பணத்தின் மேன்மையை உணர்த்துவதால் அன்னை மரியாளை ஒதுக்கிவிட்டதாகச் சொல்ல முடியாது.  இறைவார்த்தைக்கு அதிகமுக்கியத்துவம் தந்ததால் தன் தாயைத் தள்ளிவிட வில்லை.  நம்மையே “சகோதரர்”, “நண்பர்” என்று சொல்லும் போது, அவருடைய சகோதர, சகோதரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் அன்னை மரியாளின் பிள்ளைகள் அல்ல.
மேலும், அப்பாவை வணங்குகின்றவர்கள்; அம்மாவை வணங்குகின்ற வர்கள்; அம்மை அப்பனை வணங்குகின்றவர்கள் என்ற பாகுபாடு நாமாக ஏற்படுத்திக் கொண்டது.  “வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது.  பெண் ஒருவர் காணப்பட்டார்.  அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்.  நிலா அவருடைய காலடியில் இருந்தது.  அவர் பன்னிரு விண்மீன்களைத் தலை மீது சூடி இருந்தார்” திவெ 12:1.  இங்கே கதிரவன் இறைவனையும், நிலா அலகையையும், பன்னிரு விண்மீன்கள் பன்னிரண்டு கோத்திரங்களையும் குறிக்கிறது.  உலகெங்கும் பயன்படும் ஆங்கில நாட்காட்டி சூரியனை மையமாக வைத்தும் பிற நாட்காட்டிகள் சந்திரனை மையமாக வைத்தும் தயாரிக்கப்படுகின்றன.  ஆய்ந்து நோக்கினால் பல உண்மைகள் புரியும்.
இன்று பெண் விடுதலை தேடும் பெண் சமூகம் அன்னை மரியாளைப் போன்று தாழ்ச்சியான உள்ளத்தோடு அர்ப்பண உணர்வோடு தூய ஆவியால் நிரப்பப்பட்டவர்களாய் அலகையை மிதித்து நடமாடும் ஆலயங்களாக மாற வேண்டும்.  அன்னை மரியாளைப் போற்றும் ஆண் சமூகம் உண்மையிலேயே பெண் சமூகத்தை மதிக்க வேண்டும்.  அப்பொழுது பெண்ணடிமைத் தனம் நீங்கி ஆணும் பெண்ணும் சமநீதியோடு சமூகக் காவலர்களாய் வலம்வர முடியும்.  ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை செலுத்தி அன்னை மரியாளை வணங்குவோம்.  தூய ஆவியால் நிரப்பப்பட ஜெபிப்போம்.  நிறை உண்மையை நோக்கிப் பயணம் செய்வோம்.  தய்வமாய் மதிக்கிறோம்.  இந்த தாய்களுக்கெல்லாம் தாயாக விளங்கு பவர் அன்னை மரியாள்.  மண்ணகத்தாய் இம்மண்ணகத்தில் மட்டும்தான் தாய்.  ஆனால், தாய் மரியாளோ மண்ணகத்திற்கும் விண்ணகத்திற்கும் தாய்.  அவர் என்றும் வாழும் தாய்!
அன்னை மரியாள் இறைவன் தேர்ந்து கொண்ட ஆலயம்.  இறை இயேசு உறைந்த ஆலயம்.  மாசுமருவற்ற பரிசுத்த ஆலயம்.  “இதோ ஆண்டவரின் அடிமை” என்று தன்னைத் தாழ்த்தி “பேருடையாள்” என உலகம் போற்றுமே என ஆண்டவர்க்குப் புகழ்க் கீதம் பாடியவர்.  “அருள் நிறை பெற்றவர்” எனப் பாராட்டப் பெற்றவர்.  “ஒரு வாள் ஊடுருவும்” என்று முன்னுரைத்து வியாகுலங்கள் பல தாங்கிய வியாகுலத் தாய்.  தம் இறை மகனாம் இயேசுவின் வாழ்க்கையை ஜெபமாலையாக்கி தியானிக்கச் செய்த ஜெபமாலை மாதா.  பாவச்சேற்றில் விழும் மாந்தர் பரமனிடம் சென்று யாசிக்கப் பயப்படும்போது வலிமையுள்ள மிகச் சிறந்த பரிந்துரையாளர்தான் நம் தாய் மரி.
“உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்” என்று ஆண்டவரால் முன் குறிக்கப்பட்டவர்.  சிலுவை அடியில் நின்ற புனித அருளப்பரிடம் “இதோ உன் தாய்!” என்று இறை இயேசுவால் அடையாளம் காட்டப்பட்டவர்.  பிற சபை கிறித்தவ சகோதரர்கள் திருவிவிலியத்தை வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொண்டு அன்னையை மறுதலித்துக் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.  ஆண்டவர் இயேசு “தன் பெற்றோரைவிட ஏன் தன் உயிரைவிட மேலாகத் தன்னைக் கருதுபவன்தான் தன் சீடனாக இருக்க முடியும்” என்று அர்ப்பணத்தின் மேன்மையை உணர்த்துவதால் அன்னை மரியாளை ஒதுக்கிவிட்டதாகச் சொல்ல முடியாது.  “இறைவார்த்தை”க்கு அதி முக்கியத்துவம் தந்ததால் தன் தாயைத் தள்ளிவிட வில்லை.  நம்மையே “சகோதரர்”, “நண்பர்” என்று சொல்லும் போது, அவருடைய சகோதர, சகோதரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் அன்னை மரியாளின் பிள்ளைகள் அல்ல.
மேலும், அப்பாவை வணங்குகின்றவர்கள்; அம்மாவை வணங்குகின்ற வர்கள்; அம்மை அப்பனை வணங்குகின்றவர்கள் என்ற பாகுபாடு நாமாக ஏற்படுத்திக் கொண்டது.  “வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது.  பெண் ஒருவர் காணப்பட்டார்.  அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்.  நிலா அவருடைய காலடியில் இருந்தது.  அவர் பன்னிரு விண்மீன்களைத் தலை மீது சூடி இருந்தார்” திவெ 12:1.  இங்கே கதிரவன் இறைவனையும், நிலா அலகை யையும், பன்னிரு விண்மீன்கள் பன்னிரண்டு கோத்திரங்களையும் குறிக்கிறது.  உலகெங்கும் பயன்படும் ஆங்கில நாட்காட்டி சூரியனை மையமாக வைத்தும் பிற நாட்காட்டிகள் சந்திரனை மையமாக வைத்தும் தயாரிக்கப்படுகின்றன.  ஆய்ந்து நோக்கினால் பல உண்மைகள் புரியும்.
இன்று பெண் விடுதலை தேடும் பெண் சமூகம் அன்னை மரியாளைப் போன்று தாழ்ச்சியான உள்ளத்தோடு அர்ப்பண உணர்வோடு தூய ஆவியால் நிரப்பப்பட்டவர்களாய் அலகையை மிதித்து நடமாடும் ஆலயங்களாக மாற வேண்டும்.  அன்னை மரியாளைப் போற்றும் ஆண் சமூகம் உண்மையிலேயே பெண் சமூகத்தை மதிக்க வேண்டும்.  அப்பொழுது பெண்ணடிமைத் தனம் நீங்கி ஆணும் பெண்ணும் சம நீதியோடு சமூகக் காவலர் களாய் வலம்வர முடியும்.  ஆண்டவர் இயேசுவுக்கு ஆராதனை செலுத்தி அன்னை மரியாளை வணங்குவோம்.  தூய ஆவியால் நிரப்பப்பட ஜெபிப்போம்.  நிறை உண்மையை நோக்கிப் பயணம் செய்வோம்.
ச. செல்வராசு
விழுப்புரம்

0 comments:

Post a Comment