இறையழைத்தல் ஊக்குநர்கள் கருத்தரங்கு 28 & 29 ஆகஸ்ட், 2010

கருத்தரங்கின் தலைவர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்களின் துவக்க உரை :
இறையழைத்தலுக்கு இன்று இளையோர் தயாராக இல்லை வெளிநாடுகளில் குழந்தைகள் பெற்றால் அவர்களை ஊககுவிக்கிறது அந்நாட்டு அரசு. ஆனால் இந்திய நாட்டில் இளையோர் அதிகம். இளையோர் அதிகமாயிருப்பதால் நம் நாடு வல்லரசு நாடாகவும் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இளையோர் பருவம் துணிச்சல், சாதனைகள் செய்யக் கூடியவர்கள்.
  • 10 இளைஞர்களைத் தாருங்கள் நான் வலிமையுள்ள இந்தியாவாக உருவாக்கிக் காட்டுகிறேன் -  சுவாமி விவேகானந்தர்.
  • புதிய சமுதாயத்தின் வாசல்களை இளைஞர்களுக்குத் திறந்து விடுங்கள் - திருந்தந்தை 2ம் ஜான் பால்
  • நாட்டின் தீட்டிய ஈட்டி முனைகள் இளைஞர்கள்.  
  •  - அறிஞர் அண்ணா
  • கனவு காண்போம் - லட்சியத்தோடு இளைஞர்கள் வாழ முடியும்  - அப்துல் கலாம்
  • இளைஞர்களைத் தாருங்கள் - மற்ற அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் - புனித ஜான் போஸ்கோ
  • துறவறத்துக்குச் செல்லும் ஒருவர் நல்லவராக, தாராளமுள்ளவராக, நல் வாழ்வு நடத்த புனிதராக, பணி செய்ய ஆர்வமுள்ளவராக - இறைவனுக்குச் சான்று பகர சாட்சியாக இருக்க வேண்டும்.
  • தடைகளைப் படிக்கட்டுக்களாக மாற்றி இளைஞர் முன்னேற முடியும்.
  • இளைஞர் பல்வேறு துன்பங்களுக்குப் பிறகு சாதனை கண்டார்கள் :  - தாமஸ் ஆல்வா எடிசன் &  ஆம்ஸ்ட்ராங்க்


இன்றைய இளைஞர்கள் சவால்கள்: 
  1. 1 + 1 எனக் குழந்தைகள் இருப்பதையும் கடந்து இறைப்பணிக்கு அர்ப்பணிப்பது தான் பெற்றோருக்குச் சவால். குழந்தைகள் அதிகம் இல்லாததால் தேவ அழைத்தல் இல்லை என்பதற்கு காரணம்.
  2. கல்வித் துறையில் அரசு காட்டும் அதிக வளர்ச்சியில் இறையழைத்தல் குறைகிறது - First Generation - Free Education
  3. குடும்ப பக்தி - குடும்ப வாழ்வு - முதல் நாற்றாங்கால் குடும்பம்தான். ஆனால் இன்று குடும்ப செபத்துக்கு வாய்ப்பில்லை. இறையழைத்தல் குறைகிறது - பணம் சம்பாதிப்பது முதன்மை நோக்கம் (Possessiveness)
  4. தொலைத் தொடர்பு சாதனங்களை அதிகமாக, தவறாகப் பயன்படுத்துவதால் ஆற்றல் மிகு இளைஞர் பருவத்தைத் தவறாக பயன்படுத்துதல்.


இளைஞர்களுக்கு இறையழைத்தல் ஊட்ட நாம் செய்ய வேண்டியது என்ன?
  • சாட்சியவாழ்வுதான் முக்கியம். இயேசுவின் வழியில் எத்தனையோ புனிதர் வாழ்ந்து சான்று பகர்ந்தனர். புனித சவேரியார், குழந்தை தெரசா, புனித ஆக்னஸ்.
  • குடும்பங்களை, கிராமங்களைச் சந்திக்காமல் தேவஅழைத்தல் வர இயலாது. நல்ல குடும்பத்தில்தான் நல்ல இறை அழைத்தல் வர முடியும்.
  • சமுதாயத்தில் இன்று எதிர்பார்ப்பு - துறவறத்தார் - குருக்கள் மக்களோடு ஒன்றிணைந்து வாழவும் - அடிக்கடி அவர்களைச் சந்திப்பதும் பேசுவதும் அவசியம்.
  • இன்று எத்தனையோ பேர் தேவ அழைத்தல் பற்றி நமது உறவினரிடம் பேசுகிறோம் ?
  • நமது உறவினர்களிடையே இறை அழைத்தல் பற்றிப் பேச அச்சப்படக் கூடாது.
  • விதைக்க வேண்டியது நமது கடமை. அறுவடை செய்வது ஆண்டவருடைய செயல்.


II. குழு ஆய்வு வினாக்கள் :
1.
 a )இளையோரைப் பற்றிய நமது முன் சார்பு எண்ணங்கள் கருத்தியல்கள் என்ன?

 b) நடைமுறை வாழ்வியலில் இளையோரின் பலங்களும் பலவீனங் களும் என்ன?
 c) இளையோரின் உள் ஆற்றலை நமது பணியில் முழுமையாய் பயன்படுத்துகிற வழிமுறைகள் என்ன?

2. இளையோரைத் தேர்ந்தெடுக்கும் போது நாம் எதிர்கொள்ளும் சவால் களும் சஞ்சலங்களும் என்ன?
3. இளையோர் அழைத்தல் பணிகளில் நாம்கையாள வேண்டிய புதிய நவீன யுக்திகள் என்ன?
குழு அமர்வின் சிந்தனை :
  1. சாதிக்கும் உள்ளம் படைத்த இளையோரைக் கைவிடாமல் உறுதுணையாக இருக்கணும்.
  2. இளையோர் சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  3. நமது சாட்சிய வாழ்வாலும், காலத்திற்கேற்பவும் உருவாக்குதல் தலைமைப் பண்புகளை வளர்த்தல் - லட்சியத்தின் விழுமிய வழியில் வாழ வழிவகுக்க வேண்டும்.
  4. இளையோரைத் தேர்ந்தெடுக்கும்போது சவாலாக உள்ளவற்றையும் ஏற்க வேண்டும்
  5. சாதியம், சாட்சிய வாழ்வின்மை போன்றவற்றால் இறையழைத்தல் தடையாக உள்ளது. பெற்றோர் ஒரு, இரு பிள்ளைகளைப் பெறுவதால் இறையழைத்தல் தடையாக உள்ளது.
  6. சுகபோக வாழ்க்கை வாழ்வது, சாட்சிய வாழ்வில்லாதிருத்தல் இளைஞர்களைத் தெரிந்தெடுக்கத் தடையாக உள்ளது.
  7. பல்வேறு திறமைகளை ஊக்கப்படுத்தி, பணிகளைப் பகிர்ந்து தரவும், கருத்தரங்கு - முகாம்கள் புதிய முறைகளைக் கையாண்டு இளைஞர்கள் இயேசுவைத் தொடர வழிவகுக்கணும்.
  8. புதிய யுக்திகளைப் பயன்படுத்தி (ஊடகங்கள்) இளைஞர்களை வழி நடத்தினால் இயேசுவின் பாதையில் செல்ல வைக்கலாம்.


III. இளையோர் பகிர்வு  - Fr. எஸ்தாக்யூஸ், Mrsவி. நிர்மலா, Mr. ரஞ்சித்
  1. குருக்கள், துறவியரிடமிருந்து இளையோர் எதிர்பார்ப்பது
  2. இளையோர் ஏன் இறையழைத்தலுக்குக் கவரப்படுவதில்லை?
  3. இளையோர் எவ்வாறு இறையழைத்தல் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள இயலும்?


அருள்பணி. எஸ்தாகியூஸ் செயலர் இளமை என்பது மகிழ்ச்சியானது. அதைச் சரியாக பயன்படுத்த அறிதல் வேண்டும்.  இளைஞர்களை எப்படி வழிநடத்த முடியும்...?

திரு. ரஞ்சித் இளைஞர்களாகிய நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம்?
1.பொதுவான எதிர்பார்ப்புகள்
2.ஏழை, பணக்காரர் என வேறுபாடின்றி
  • பங்களவில் இளைஞருக்கு அங்கீகாரம் தரல்.
  • உதவிகள் - வழி நடத்துதல் துன்ப வேளையில் உதவுதல் - ஆற்றுப்படுத்துதல்
  • பங்கு அளவில் இளைஞர் இயக்கத்துக்கு பங்குத்தந்தை உடன்பட்டிருக்கணும்.
  • சாதி ரீதியாக ஒதுக்கப்படாமை
  • பங்குப் பேரவையின் உறுப்பினராக (இளைஞர்கள்) அங்கீகரிக்கப்படுதல்
  • மனித மாண்பு மதிக்கப்பட வேண்டும்.
  • இடைநிலை, கடைநிலை இளைஞர்கள் ஒதுக்கப்படக் கூடாது.
  • குருக்கள், துறவறத்தார்கள் Role Model ஆக இருக்க வேண்டும்.
  • பெற்றோர்களும் ... தம் பிள்ளைகளுக்கு நல்வழிகாட்ட கிறிஸ்துவ கடைமைகளைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
  • இளைஞர்களுக்கு பங்களவில் இளைஞர் இயக்கத்துக்கு கருத்தரங்கு, வேலை வாய்ப்பு வசதி தரல்.
  • நாங்கள் உங்களிடம் எங்களை சமமாக நடத்துங்க ... தோழமையில் உடனிருப்பு, அன்பாகயிருங்க என்று கேட்கிறோம்.
  • ஆலோசனை தந்து வழிநடத்துவது துறவறத்தாரின் கடமை.


திருமதி நிர்மலா இன்றைய இளைஞர்கள் குருத்துவத்துக்கு, துறவறத்துக்கு ஏன் வர இயலவில்லை?
  • எதிர்பார்ப்பது கிடைக்காததால் விலகிச் செல்கிறார்கள்.
  • இன்று இளைஞர்கள் அருட்தந்தை, அருட்சகோதரிகளை எப்படிப் பார்க்கிறார்கள்? ஏன்?
  •  டாக்டரிடம் ரூபாய் தந்தால் மருத்துவம் பார்க்கிறார்கள். என்ஜீனியரிடம் ரூபாய் தந்தால் வீடு கட்டித் தருகிறார்கள்.
  • அதேபோல் குருவானவரிடமும் ஏதாவது வேலை செய்தால் மட்டும் உதவி செய்கிறார்கள்.
  •  Media வழியாக
  • தொண்டுக்கும் வேலைக்கும் வித்தியாசம் தெரிய வேண்டும்.
  • ஈர்ப்புத் தன்மை வேணுமா? அமர்ந்து பேசணும் . . .
  • அருட்தந்தையரிடம், துறவிகளிடம் எதிர்பார்ப்பது உங்களுடைய அன்பான வார்த்தைகள் அணுகுமுறை. . .
  • அருட்சகோதரிகள் இளம் பெண்ணை அதிகம் வழிநடத்த உதவி செய்யணும்.


திரு. ஸ்டாலின்  இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட ஈடுபாடு இருக்க வேண்டும்.
  • பங்கேற்பவர் பங்களிப்பவர் பார்வையாளராக இருக்கக் கூடிய இளைஞர்களை நாம் பங்களவில் ஈடுபடுத்த வேண்டும்.
  • குருக்கள், அருட்சகோதரிகள் இல்லை யயன்றால் பொதுமக்கள் நாங்கள் கிறிஸ்துவுக்குள் வாழவே முடியாது.
  • இளைஞர்களை நீங்கள்தான் வழிநடத்தணும்.
  • நம்மிடம் வரும் ஒரு இளம் பெண்ணை / இளைஞரை எப்படி இயேசுவாக மாற்றப் போகிறோம்?
  • ஒற்றுமை ரீதியாக, பண்பாடு ரீதியாக ஒருங்கிணைக்கலாம்.
  • மறைக்கல்வியில் இளைஞர்களை அனுபவப் பகிர்வு மூலம் ஒருங்கிணைக்க முடியும்.
  • ஒவ்வொரு சபையும் தனது தனி வரத்தால் சமுதாயத்தோடு இணைந்து பணியாற்றும் போது ஈடுபடுத்தி ஒருங்கிணைக்க முடியும்.
  • காலத்தை அறிந்து  செயல் திட்டத்தோடு செயல்பட இளைஞர்களை ஈடுபடுத்தி பணிகளை செய்விக்க வேண்டும்.
  • அதற்கு நாம் ஒவ்வொருவரும் Role Model ஆக வாழணும்.
  • நம் தமிழகத்தில் கோடிக்கணக்கில் இளைஞர்கள் உள்ளார்கள். அருட் தந்தையர், அருட்சகோதரிகள் நினைத்தால்தான் இளைஞர்களை உருவாக்க முடியும்.
  • இளைஞர்களைப் பங்களிப்பவர்களாக உருவாக்குங்கள்.
  • நல்ல உறவும் பகிர்வும் தொலைத் தொடர்பும் கிறித்துவத்துக்குத்தான் உள்ளது. எனவே இளைஞர்களை இதன் வழியாக மேம்படுத்துங்கள்.


தந்தை எஸ்தாகியூஸ் 
  • இன்றைய இளைஞர்கள் சவாலாக தனது வாழ்க்கையைப் பார்க்கிறார்கள்.
  • சவாலை நாம் கூர்மையாக்க வேண்டும்
  • பார்வையைப் பொறுத்தவரை விசாலமாக்க வேண்டும். அப்போது இறை அழைத்தலுக்குச் செவிமடுப்பார்கள் இளைஞர்கள். நாம் உலகின் ஒளியாக இருக்க அழைக்கிறார். எனவே மற்ற மதத்தினருக்கும் தீப்பொறியாக அமைய வேண்டும்.
  • நாம் தேவனைப் பற்றி பேசும்போது அவருக்கே உள்ள இலட்சியத்தைப் பற்றி பேச வேண்டும்.
  • நமது இறையழைத்தல் மிகவும் பயன் உள்ள வகையில் அமைய தமிழக அளவில் சபைகள் புதிய யுக்திகளைச் சிந்திக்க வேண்டும்.


IV. கருத்துரை - அருள்பணி. ஜெரி S.J.

கடவுள் பாதி, மிருகம் பாதி,
கலந்து செய்த, கலவை நான்,
வெளியே மிருகம், உள்ளே கடவுள்,
விளங்க முடியா, கவிதை நான் - கவிஞர் வைரமுத்து
தேவ அழைத்தலுக்கு சவாலாக ... உரோ 7ஆம் அதிகாரம்
வேறு சில காரியங்களைத் தவிர்க்க ஆர்வம் ஆனாலும் செய்து கொண்டிருக்கிறேன்.
தேவ அழைத்தல் என்பது துறவறத்துக்கு, குருத்துவத்துக்கு அழைத்தல் என்பது மட்டுமல்ல.
தேவ அழைத்தல் என்பது மனிதத்தைத் தூக்க மிருகத்தை இறக்கத்தான்.
­ இன்றைய இளையோர் பரந்த சிந்தனை உடையவர்கள்
விவேகானந்தர் : மலைக்கு உச்சி நோக்கும் போது ஒரு பக்கத்தைப் பார்க்கிறோம். உச்சி ஏறிய பிறகு அம்மலைக்கு அடுத்த பக்கம் உண்டு என்றார்...
­ நாமும் நமது கிறிஸ்துவ சமயத்தில் இளையோர்களை விரிவுபடுத்த வேண்டுமெனில் இந்த நமது சபை வழியாக திருச்சபை வழியாக, கிறிஸ்துவ மதம் வழியாக ... பிற மதங்கள் மனித உள்ளங்களையும் பார்க்க வேண்டும்.
புதிய பாணியில் ... இறையாட்சி பணியில் இறை அழைப்பு
  1. இறைமையை மனிதத்தை புனிதத்தைத் தூக்கி நிறுத்த அழைப்பு (மனிதத்திற்காக அழைப்பு)
  2. திருச்சபை துறவற சபைகளைக் கடந்தது. எ.கா. அன்னை தெரசா.
  3. நாத்திகம் ஆத்திகம் கடந்தது.
  4. இன்றைய இளையோர் எதிர்பார்ப்பது கூரிய சவால், பரந்த பார்வை.
  5. இறையாளர் பல்வேறு சபைகள்.
  6. சாட்சிய வாழ்வு வாழ்வும் வார்த்தையும்
  7. இறையாட்சி விழுமியங்கள்.
  8. முத்திரைஇயக்கம் நிறுவனம்.
  9. அழைப்பு பல புதிய பணிகள்
  10. இலட்சிய அறிக்கை
மனத்திற்கு மட்டுமே பயந்து விடுமானத்தை உடலிலே கலந்து விடுஇருக்கின்றவரை வாழ்ந்துவிடுஇரண்டில் ஒன்றைப் பார்த்துவிடு
மதர் தெரசாள் அழைப்பில் அழைப்பை ஏற்றார். மதர் தெரசாள் She became a Role Model - Why not you & I ?
இயேசு இலட்சியத்தில் வியப்போடு பேசுகிறார் விமர்சனத்தோடு... (லூக் 4; யோவா 8). இன்றைய துறவற மனப்பான்மை எப்படி உள்ளது?
  1. signs of Convenience in the modern world (இறையாளர்கள் வசதியின் அடையாளங்கள்) 30%.
  2. Signs of Compromise (சமரசம் செய்பவர்கள்) 60%
  3. Signs of Contradiction (வித்தியாசமாக செய்பவர்கள்) 10%
மூன்றாவதான கூற்றுப்படி வாழ்ந்தால் கண்டிப்பாக இலட்சியத்தை வாழ்வாக்க முடியும்.
­ எல்லாம் விதிவசப்படித்தான் நடக்கும் என்பதை மறந்துவிடு (வைரமுத்து)
 இலட்சியம் இதயத்தில் இருக்கும்போதே எது நிஜம் என்பதைக் காட்டிவிடு. அப்போது காலம் புரண்டு படுக்கும் நான் சிலுவையில் உயர்த்தப்பட்ட பிறகு ஈர்க்கிறேன் Jesus
வாழ்க்கை சாட்சியாகயிருக்கணும் வாழ்க்கைப்பாடு
வாழ்க்கை சாட்சி வாழ்க்கைப்பாடு எடுத்து வாழ்ந்து காட்டணும்.
1. திருமுழுக்கு செய்து இயேசுவுக்கு பிரமாணிக்கமாக வாழ்தல்.
2. சொல்வதொன்று செய்வதொன்றாக இருக்கக் கூடாது.
3. திருச்சபையில் தங்களை மட்டும் மேம்படுத்தி துறவறம், இல்லறத்தைவிட மேம்பட்டது எனச் சொல்வது தவறு. இறையாட்சி விழுமியங்களோடு கடவுள் தன்மையை நிலைநிறுத்தி பணி செய்யணும்.
  1. Justice (Obedient)
  2. Freedom (Chastity)
  3. Poverty (Love)
சமுதாயம் என்பது சம ஆதாயம் சம வாழ்வு சம உரிமை சம பங்கேற்பு சம பகிர்வு எங்கே உள்ளதோ அதுவே சமுதாயம்
என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை கூறியுள்ளார்.
இறையழைத்தலுக்கு அழைக்கும்போது கண்டிப்பாக சமூக, இறையாட்சி கண்ணோட்டங்கள் நன்றாக தர வேண்டும்.
இயக்கம் முத்திரையைவிட மேலானது...
எந்த சபை இயக்கங்களை அதிகமாகக் கொண்டுள்ளதோ அவர்கள் அதிக அழைத்தலைப் பெறுகிறார்கள்.
நிறுவனத்தைப் பயன்படுத்துவோம். ஆனால் அதையே இலக்காக வைத்து விடக் கூடாது.
மக்கள் மத்தியில் இயக்கங்கள் சார்பாக பணிகள் செய்ய வேண்டும். அடிமைப் படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காகப் போராடுதல், மக்களின் உரிமைக்காகப் போராடுதல். மக்களை அன்பு செய்தல் இருந்தால் கண்டிப்பாக அதிக அழைத்தல் கிடைக்கும். எந்த அளவுக்கு மண்வாசனை இருக்குமோ அந்த அளவுக்கு இறையழைத்தல் அதிகமாகும். They see our life and come- நமது வாழ்க்கையைப் பார்த்து வருதல் சவாலாக வாழ வருதல் தேவை.
பணிகள் புதிய பாணியில் செயல் படணும் வழக்கமாகச் செய்வதைவிட புதியதாக செய்ய வேண்டும்.
­ வழக்கமாகச் செய்யச் செய்ய இறுகிப் போவோம்  புதியதாயகச் செய்யச் செய்ய இளகிப்போவோம். அப்போது நமது பணி சவாலாக இருக்கும். புதிய பணிகள் புதிய வாழ்முறைகள் யாவை?
தொடர்பணிக்கு :
  1. Vision Statements in Tamil Nadu and Pondicherry
  2. Inter Congregation screening and selection
  3. INCIF : Inter Congregation Initial Formation
அழைத்தல் பொதுவானது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது குறிக்கோள் சிறப்பாகத் தரணும் சபையில் சேர்வது இரண்டாம் பட்சம். ஆனால் இறையாட்சிப் பணியில் சேர்வது முதல் பட்சம், இளையோரைத் துறவற வாழ்வுக்கு அழைக்குமுன் நமது அழைப்பை ஆழப்படுத்தவேண்டும்.
V. கலந்தாய்வரங்கம்
பகிர்ந்தவர்கள் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி. ரெய்மண்ட், சகோ. வில்லியம், அருட்சகோ. சோபி, அருள்பணி. அடைக்கலம், அருட்சகோ. ஜுடி, சகோ. ஆல்பர்ட்
அருட்சகோ. சோபி ICM  இளையாரின் பகிர்வுக்கு நமது பதில்
  • இளைஞர்களை அங்கீகாரம் செய்யுங்கள். 
  • உண்மையிலே இளைஞர்களை வழி நடத்தி அவர்களோடு இணைந்து பணி செய்தல் தேவை. இளையோருக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்வுகள் தொடர பயிற்சி தர வேண்டும்.
  • இளையோருடன் கலந்துரையாட நேரம் ஒதுக்குதல்
  • வழிபாடுகளில் இளையோரை இணைத்து செயல்படல்
  • நாம் Role Model ஆக இருக்கணும்
  • இளையோரைப் பாராட்ட பயப்படத் தேவையில்லை
  • அவர்களிடமே பொறுப்புகளைத் தந்து முடிவுகளையும் எடுக்க வைத்து உற்சாகப்படுத்துதல்.
  • நாம் கண்டிப்பாக இளைஞர்களோடு தோழமையுடன் பயணித்தல் வேண்டும்.
அருட்சகோ. ஆல்பர்ட் வில்லியம் FSP
  • இளைஞர்களுடன் இவர்களது அனுபவம்
  • இளைஞர்கள் நம்மை Role Model ஆக இருக்கணும் என எண்ணுகிறார்கள்
  • நாம் சொல்வதை செய்ய வேண்டு மென விழைகிறார்கள்
  • அவர்களோடு பயணிக்க விரும்புகிறார்கள்
  • அவர்களோடு தோழமையாய் இருக்க விரும்புகிறார்கள்
  • சவால்களோடு வாழ விரும்புகிறார்கள்
  • நமது மனிதநேய பணிகளைப் பகிரும் போது செவிமடுக்கிறார்கள்
  • அவர்களோடு பணி செய்யும்போது வழிநடத்தும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்
அருட்பணி அடைக்கலம் SDC
  • இளைஞர்கள் எப்போதும் நம் பிள்ளைகள்
  • இளைஞர்கள் இன்று நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் எப்படி வாழ வேண்டும்? என வழிகாட்டுதல்
  • அவர்களை நிகழ்காலத்தில் வாழ வைக்கணும்.
  • அவர்களை முன்னேற்ற நாம் முயற்சி எடுக்கணும்.
  • இளைஞர் தவறு செய்யும்போது மிகவும் கரிசணையுடன் அன்புடன் நல்வழி நடத்த வேண்டும்.
  • இளைஞர்களுக்குத் தேவைப்பட்டால் பண உதவிகூட செய்ய முன் வர வேண்டும்.
  • அவர்களுடைய சுயமரியாதையை மதிக்கணும்.
  • இரக்கத்தின் நண்பர்கள் என ஒரு குழுவாக வைத்து அவர்களையே தலைவர், பொருளர், செயலர் உறுப்பினர்களையும் வைத்து வழிநடத்தினால் இளைஞர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
  • நாம் சமுதாயத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக நமது குழுமத்திலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
அருட்சகோ. ஜுடி SAT
  • இளைஞர்களை நாம் தேடிச் செல்ல வேண்டும்.
  • அவர்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
  • அவர்களை மகிழ்ச்சியாக வைக்க தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.
  • பங்கில் உள்ள மறைக்கல்வி, YCS, பாடகர்குழு, இளைஞர் குழு போன்ற அனைத்து நிலைகளிலும் அவர்களை உற்சாகப்படுத்தி தோழமை கொள்ள வேண்டும்.
  • பங்கில் உள்ள அருட்சகோதரிகள் வீடுகளைச் சந்திக்கச் செல்ல வேண்டும். இளைஞர்களைக் கூர்ந்து கவனித்து, நல்ல வழிகாட்டல் தேவை.
  • இன்றைய சமூகத் தொடர்பு சாதனங்களின் பாதிப்பு அதிகமாக இளைஞர் களிடம் உள்ளது   அதைவிட பலமாக நமது முன்மாதிரி வாழ்க்கையிருந்தால் தான் நமது பாதிப்பு அவர்களிடம் ஏற்படும்
  • பொறுப்புக்களை அவர்களிடம் தந்து வழி நடத்தணும்
  • பங்கிலேயே உள்ள இளைஞர்களின் திறமைகளைப் பயன்படுத்தி கலைக்குழு உருவாக்கலாம்
  • இளைஞர்கள் இயக்கத்தில் உள்ள பிறந்த நாள் பெயர்களைப் பட்டியல் எடுத்து திருப்பலியில் பாராட்டினால் உற்சாகமுடன் அவர்களை நாம் தேடுகிறோம் என நம்மை அவர்கள் தேடி வருவார்கள்.
அருட்பணி. ரெய்மண்ட், சென்னை
 இளைஞர்களுக்கு Frs & Srs என்ன செய்யனும்?
 இவ்வருடம் இளையோருக்கு ஒரு ‘Vision Statement’  ஏற்பாடு செய்யலாம்
1.       Role Model- அந்த Role Model நானாக இருக்கனும்.
2.       Relationship- இளையோரிடம Fear of Unknown உள்ளது. அதனால்  Relation ship and Creativity இருக்கணும்.
VI. கருத்துரை :   முனைவர் திரு. அந்தோணி குரூஸ்
இளையோர் பார்வையில் இறையழைத்தல்
குருத்துவப் பயிற்சிக்கான அடிப்படைத் திட்டம் என்ற வினா விடைத் தாளைப் பகிர்ந்து கொண்டார்.
 1. Qualities of Vocation Promoters are Special
  S - Selfless Service
  P - Patient for politeness
  E - Enthusiasm
  C - Caring
   I  - Integrity
  A - Awareness
  L -  Love
2. சவால்கள்

  1. Generation Gaps
  2. Gender  
  3. Crisis
  4. Social Status   
  5. Self Esteem
இளைஞன் தான் எப்படியும் வாழலாம் என வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  இந்த நிலையில் நாம் வழிகாட்ட வேண்டும்.  இளைஞர்களை கீழ்காண் இலக்குத் தலைமுறை என்கிறார்கள் Talents, Skills, Abilities and Power.


இளைஞர்கள் எதுவானாலும்  உடனே அனுபவித்துப் பார்க்க விரும்புகிறவர்கள்.  எனவே நாம் வழிநடத்தணும் - Courage, Creativity and Challenge செய்ய அழைத்துவர வேண்டும்.

  • ஒரு இளைஞன் நம்மைப் பார்த்து அடுத்த பிறவியில் உங்கள் சகோதரனாக, சகோதரியாக பிறக்கணும் என சொல்லும் அளவுக்கு நமது வாழ்க்கை இருக்க வேண்டும்.
  • Digital World-ல் உலவும் இளைஞர் மத்தியில் அதைப் பற்றிய அறிவு நமக்கும் இருக்க வேண்டும்.
  • வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து . . .
வாழ்க்கையில் எதிர்கொள்வதை எதிர்நீச்சல் போட்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
Mother Teresa-வின் நண்பர் Praveen Chawla எழுதுகிறார் :
உலகத்தின் வாழ்க்கையில் முழு உண்மை எதுவுமே கிடையாது.  பாதி உண்மைதான்.
உலகமய கிறிஸ்துவம் பல சவால்களை எதிர்கொள்கிறது.
எதிர்காலத்தில் 64% கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை விட்டு விலகிடலாம்.
எனவே சமுதாயத்தை வளர்த்தெடுக்க புது யுக்தியுடன் செயல்பட வேண்டும்.
இன்றைய கலாச்சாரத்தில்
Sin seems to be stronger than God
Sex seems to be stronger than Jesus
Money seems to be stronger than Holy Spirit
அப்படியானால் நாம் இளைஞர்களை எப்படி வழிநடத்த வேண்டும்? எனச் சிந்தித்து செயல்படுவோம்.
  • இளையோரைத் தேர்ந்தெடுத்து அவர்களை நாமிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து அவர்களோடு உடனிருந்து வாழ்தல் அவசியம்.
  • திருவிவிலியம் எப்போது இளைஞரிடம் கொண்டு போகிறோமோ அப்போது தான் இறையழைத்தல் கண்டிப்பாக கிடைக்கும்.
  • விவிலியத்தை மையமாக வைத்து இறையழைத்தல் பணி செய்ய அழைக்கப்படுகிறோம்.

செயலர் அருள்பணி. சகாய ஜான் அவர்களின் சில முக்கிய அறிவிப்போடு கருத்தமர்வு நிறைவுற்றது.
அறிக்கை தயாரிப்பு
அருட்சகோ. ஆக்னஸ் FSJ
சென்னை

0 comments:

Post a Comment