அர்ப்பண வாழ்வே நிறைமகிழ்வு

திருச்சபைப் புனிதர்கள் வரலாற்றில் புனித பிரான்சிஸ் சொலானோ (1549 - 1610) என்ற புனிதரும் உண்டு. மொன்டில்லா என்ற நகரத்தில் பிறந்தவர்.
தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக் கறிஞராகப் பணி செய்தார். மிகுந்த கடவுள் பக்தியும், நற்குணங்களும் நிறையப் பெற்றவராய் இருந்தார். அவர் மகன் பிரான்சிஸ் அவர்களும் அவரைப் போலவே இறை பக்தியிலும், பிறரன்புச் சேவையிலும் விருப்பம் கொண்டவராய் இருந்தார்.

தன் 20-ஆவது வயதில் குருத்துவ அழைப்பை ஏற்று குருத்துவக் கல்லூரி சென்றார். 27-ஆவது வயதில் குருவாய்த் திருநிலைப்படுத்தப் பட்டார். அச்சமயத்தில் அவரது பகுதியில் காலரா நோய் பரவியது. பலர் மடிந்தார்கள். அச்சமயத்தில் அவர் ஆற்றிய அன்புப் பணி மகத்தானதாய் இருந்தது.

அவரது குணம் அறிந்து தென் அமெரிக்காவிற்கு ஒரு மி­னரியாக அனுப்பினார்கள். செல்லும் வழியில் கப்பல் சேதமடைந்து இடையில் இறக்கிவிடப்பட்டார்கள். அப்பகுதியில் நடந்து சென்று லீமா, பெரு, அர்ஜென்டைனா பகுதியை அடைந்து, 20 ஆண்டு காலம் நடைப்பயணமாகவே சென்று மக்களின் இதயத்தில் இறையன்பைப் போதித்தார். இறைவார்த்தையின்படி அவர்களின் வாழ்வைச் சீர்ப்படுத்தி புனிதராய் மரித்தார்.

இறைவார்த்தையின் நிமித்தம் சிறையிலடைக்கப்பட்டிருந்த புனித பவுல் தன் உடன் உழைப்பாளர் திமொத்தேயுவுக்கு இவ்வாறு எழுதுகிறார்:
""நான் உன்னை வற்புறுத்திக் கேட்டுக்கொள்வது: "தேவ வார்த்தையை அறிவியும். வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிடினும் வலியுறுத்திப் பேசும். கண்டித்துப் பேசும். கடிந்துகொள்ளும். அறிவுரை கூறும். மிகுந்த பொறுமையோடே போதித்துக் கொண்டே இரும்'' (2 திமொ 4:2).
ஆண்டவர் இயேசுவின் புனித பூமிக்குத் திருப்பயணம் செய்துவிட்டு வந்த குருவானவர் ஒருவர் தன் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்: ""முதன் முதல் அப்புனித பூமியைப் பார்த்தபோது, மண்ணில் கால் வைத்தபோது, இந்தப் பூமியையா பரம தந்தை தன் ஒரே மகன் இயேசுவுக்கு இறைப்பணித் தளமாகக் கொடுத்தார்? இப்பூமியில் இறைப்பணி செய்யும் ஒரு பணியாளர்கூட "எனக்கு இந்த மோசமான பகுதியைத் தந்துவிட்டு, தன் மகன் இயேசுவுக்கு நல்ல பூமியைத் தந்து இருக்கிறாரே' எனக் கூறமுடியாது'. தண்ணீர் வளமில்லா வறட்சிப் பகுதி. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம். புழுதி படிந்த மலைப்படிவங்கள். சுண்ணாம்புக் கல் குணம் கொண்ட பகுதிகள். பாலைவனம் போல் காட்சியளிக்கும்.

பூமியின் அமைப்பு. இயற்கையின் செழிப்பைக் காண முடியா நில அமைப்புக்கள்... இப்படி எத்தனையோ!''
ஆனால் ஆண்டவர் இயேசு இந்தப் பூமியைத் தன் இறைப்பணித் தளமாய் இறைத்தந்தை கொடுத்ததை ஏற்றுக்கொண்டார், போதித்தார், காடுமேடெல்லாம் சுற்றி அலைந்தார். இறைவார்த்தையினால் விண்ணக வாழ்வைக் காட்டினார். கடைசியில் அதே பூமியில் குருதி கொட்டி சிலுவையில் உலகின் பாவம் போக்க மரிக்கிறார்.
"அவர் செய்ததெல்லாம் கேள்வியுற்று, யூதேயா, யெருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப் பகுதி, தீர், சீதோன் வட்டாரம் ஆகிய இடங்களிலிருந்தும் திரளான மக்கள் அவரிடம் வந்தனர். இயேசு வியாதிக்காரர்களைச் சுகமாக்கி இறைவார்த்தையை அவர்களுக்கும் போதித்தார்'' (மாற்கு 3:8)
 என இயேசுவின் இறைப்பணியைக் குறித்து எழுதுகிறார்.

இறைப்பணியில் மகிழ்வு அவர்களின் சுயநல வாழ்வில் அடங்கி இருப்பதே இல்லை. மாறாக முற்றிலும் அர்ப்பணிக்கும் குணத்தில் தான் அடங்கி இருக்கிறது. ஒரு பூமியோ இடமோ தன்னிலேயே புனிதமாய் இருப்பதில்லை. மாறாக புனிதமானவற்றாலேயே அது புனிதமாக்கப்படுகிறது. புனிதர்கள் வாழும் இடம் புனிதமாக்கப்படுகிறது. இறைவாக்கினர்கள் மற்றும் ஆண்டவர் இயேசுவின் பாதங்கள் பட்ட பூமிதான் இஸ்ரயேல் நாடு. இன்று புனித பூமி என்று உலகினர் அனைவராலுமே கருதப்படுகிறது.
ஓர் இறைப்பணியாளர் கொடுக்கப்பட்ட எந்த இடத்தில் ஆண்டவர் பணி செய்ய அனுப்பி னாலும் மிகுந்த தாழ்ச்சியான உள்ளத் துடன் உத்தமமாய் பணி செய்வோம்.

என் இறைப்பணியின் நாட்களில் சுமார் ஆறு ஆண்டுகள் தேனிப் பங்கில் பணி செய்தேன் அச்சமயத்தில் அப்பங்குக்கு உட்பட்ட சில குடியிருப்புக்கள் கேரளா எல்லைப் பகுதிகளிலும் இருந்தன. மலையுச்சியில் குடியிருக்கும் அவர்களுக்கும் பணி செய்ய பல மைல்கள் மலையின் உயரத்திற்கு நடந்து செல்ல வேண்டும். இல்லையயன்றால் கேரளாவின் உட்பகுதிக்குப் பேருந்தில் சென்று பின் அப்பகுதி மக்களைச் சந்திக்க வேண்டும். அடியேன் மூணாறு சென்று அன்று இரவே எல்லைப்பட்டி சேர்ந்து விடுவேன். அங்குள்ள அருட்தந்தை யர்கள் எங்களை ஏற்று உபசரித்து வழியனுப்புவார்கள்.
தாமஸ் என்ற அருட்தந்தை அப்போது எல்லைப்பட்டியில் இருந்தார். சிறிய அறை. பல பகுதிகளில் சிதறி இருக்கும் குடியிருப்புகள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். குறைந்த வருமானம். இருப்பினும் எப்பொழுதும் மகிழ்வுடன் இருந்தார். "மக்களுக்குப் பணி செய்வதில் இருக்கும் ஆர்வம் அசௌகர்ய சூழ்நிலைகளையும் மகிழ்வாக்கி விடுகிறது'' என்றார்.    முழு அர்ப்பணத்தில் மகிழ்வு உண்டு. மக்கள் பணியில் அர்ப்பணிப்போம். ஆமென்.

பணி. ச. ஜெகநாதன், அருப்புக்கோட்டை

0 comments:

Post a Comment