அன்னை மரியை வணங்கு

அன்னை மரியை வணங்கு
அவள டியைத் தொழுவாய்
விண்ணார் போற்றும் மரியாள்
வேதம் புகழும் அன்னை
மரணம் நேரம் மரித்தாய்
வந்து நிற்பாள் துணைக்கே
அரக்கர் குலத்தை அழிக்கும்
அன்னை மரியாள் நம்தாய்
சென்மப் பாவம் இல்லா(து)
பிறந்த அன்னை நம்தாய்
அன்னை பெற்ற செல்வம்
அருளால் நிறைந்த கன்னி
பிறையைக் காலடி மிதித்து
மின்னும் தாரகை சூடி
குறையும் இல்லாக் கன்னி
குற்ற மில்லா தாய்தான்
தாழ்ச்சி உயர்வைத் தந்தது
தாயும் உரைத்தாள் அடிமையானாள்
வீழ்ச்சி இல்லா அன்னைதான்
வேதம் புகழும் தாய்தான்
தேவதாயைப் போற்றுவோம்
திவ்விய தாயை ஏற்றுவோம்
பாபம் அற்ற மகராசி
பலரின் நல்ல உபகாரி
இரட்ச ணிய மூலக்கரு
இயேசு தேவன் உறைவிடம்
அரசர் வழுத்தும் விண்ணரசி
அன்னை மரியாள் உன்னதம்
அன்னை மரியாள் நம்துணைவி
அண்டிப் போனார் கெடுவதில்லை
உன்னை என்றும் காப்பாற்றி
உறு துணை தருவளே

(கவிஞர் பெஸ்கிதாசன்)

0 comments:

Post a Comment