இறை ஆட்சி

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்
ஊரெங்கும் பேச்சு உலகெங்கும் பேச்சு
அவனவன் பங்குக்கு அவனவன்
காரணியாகி
ஊழல் விதைகளை நாளும்
விதைக்கிறான் - தான்
வாழ்ந்துவிட வேண்டுமென்று!
ஊழல் ஒழியுமோ? ஊழலாய் நாமிருக்க
வாழும் இறைவனில் முழு நம்பிக்கை இல்லாமல்
எந்த மாற்றமும் மண்ணில் வருவதற்கில்லை!
"உண்மை நேர்மை உழைப்பு''
மேல்மட்டத்திலிருந்து வெளிப்பட
"கல்லாமை இல்லாமை இயலாமை''
கீழ் மட்டத்திலிருந்து மேம்படும்!
அப்போதுதான் மனுக்குலம்
சரியாய் வாழ்ந்ததாக
வரலாறு பேசும்
அந்நாளே
'இறை ஆட்சி'
மலரும் நாள் மண்ணில்!
வானம் வந்திடும் நாள்!

0 comments:

Post a Comment