2. இது பூக்களின் காலம் . . . ஆறாம் அறிவின் அவதாரம் நாத்திக நாவுகள்

கிறிஸ்துவை எனக்குப் பிடிக்கும்.  ஆனால்கிறிஸ்தவர்களைப் பிடிப்பதில்லை      மகாத்மா காந்தி      
ஆதிமனிதன் சூரியன், நிலவு, கடல்,மலை, காடு, பறவைகள், விலங்குகளைக்
கண்டு வியந்தான்.
இடி, மின்னல், மழை, வெள்ம், புயல், நெருப்பு இவைகளைப் பார்த்து பயந்தான். வியப்பும், பயமும் மனிதனைத் தேடலுக்குள் தள்ளின.
தேடலின் படிப் படியான வர்ச்சி
மதத்தில் மனிதனை நிறுத்தியது.
வணங்க ஆரம்பித்தான்.
கடவுள்கள் பல உருவாயின.
மதத்தைக் கண்ட மனிதனுக்குப் பின்
மதம் பிடிக்க ஆரம்பித்தது.
வன்முறை வலுக்கும் பொழுது
கோபத்தைக் கொப்பளிக்கத் துவங்கினான். மீ முடியாத துயரத்தில் அழுத்தப்படும்போது மாமர வார்த்தை கூட
நெருப்புத் துண்டானது.
நீதிக்காக அவதார புருசனைத் தேடும்பொழுது கடவுள் விமர்சிக்கப்பட்டான்.
அப்போதுதான்
ஆத்திகம் அசிங்கப்பட்டது
மதம் மிதிபட்டது.
வாழ்க்கையின் முதலும் முடிவும் கடவுளைச் சார்ந்தவை அந்த வழியில் சிந்தையைச் செலுத்தவதே
வழிபாடு என்கிறார் - மு.வ.
சிலர் உருவ வழிபாட்டை நம்புகிறார்கள் சிலர் கடவுளுக்கு உருவமில்லை என்கிறார்கள் எந்த தெளிவுமில்லாமல்
சமயங்களின் பெயரால், சடங்குகளின்
பெயரால் ரெண்டும் கெட்டானாக
போராடுவோர் கடவுள் நெறிக்கு அப்பாற்பட்டவர்கள்
கடவுளின் கருணையைப் பொருட்செலவு செய்து பெறலாம் என்று நினைப்பது மூடநம்பிக்கை. நாம் ஒன்று கொடுத்தால்அவர் ஒன்று தருவார் என்பது அறியாமை
மனதிற்கு அமைதியும், ஆற்றலும் கிடைப்பதற்கு அன்பைப் போற்றி வாழும்நெறியே கடவுள் நெறி என்பதை மறந்தான்
பின், சடங்குகளை வற்புறுத்தினான். ஆக கப்போராளியைப் பிடித்தது அவனைப் பின்பற்றுபவர்களை பிடிக்காமல்போனது, அப்போதுதான் நாத்திகம்பெருகியது,
ஹிட்லரைப் போன்ற வன்முறைவாதிகள் மக்களைக் கொன்று குவித்தார்கள். கொத்துக்கொத்தாக மனிதன் கொல்லப்பட்டான். மக்கள் அடிமைப்படுத்தப் பட்டார்கள். அப்போது கடவுளை வெறுக்க ஆரம்பித்தான்.
அறிவும் தேடலும் சேர்ந்து அடைகாத்து அடைகாத்து நாடைவில் நாத்திக குழந்தையைப் பெற்றெடுத்தது. அப்போது காரல்மாக்ஸ்சையும்,பெரியாரையும் பின்பற்ற ஆரம்பித்தான்.
இவைகளைத்தான் ஒரு கவிஞன் சொன்னான்
அறிவே மனிதனின் அடையாம்
அதற்கு பெரியார் வழியே சரியாகும்.
(இன்னும் மலரும்) - ஜே. தமிழ்ச்செல்வன்

0 comments:

Post a Comment