எது ஈஸ்டர்?

தவ முயற்சிகள் செய்து, ஜெபம் நிறைய செய்து, தியாகம் பல செய்து இந்தத் தவக்காலத்தில் நம்மைத் தயார்படுத்துவது ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவிற்காக. ஆம்!

உயிர்ப்புப் பெருவிழா - அது நம்
உயிர்ப்பின் பெருவிழா!

உயிர்ப்பு என்பது என்ன? நமக்குத் தெரிந்தது இயேசு பாடுகள் பட்டார், சிலுவை சுமந்தார், உயிர் நீத்தார், அடக்கம் செய்யப்பட்டார், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவ்வளவுதான். மேலும் தவக்காலத்தில் பூ, பொட்டு வைப்பதில்லை, கறி, மீன் சாப்பிடுவதில்லை. உயிர்ப்புப் பெரு விழாவாகிய ஈஸ்டர் அன்று புது ஆடை உடுத்தி, பொட்டு வைத்து, தலை நிறைய பூ வைத்து, இரவு கோவிலுக்குச் செல்ல வேண்டும். மறுநாள் நல்ல அசைவ உணவு சமைத்து உறவினரோடு உண்ண வேண்டும். அதோடு உயிர்ப்புப் பெருவிழா முடிந்துவிட்டது என்பதுதான் நமது எண்ணம்.

அதுவல்ல ஈஸ்டர். நம் ஆண்டவர் இயேசு யாருக்காகப் பாடுபட்டார்? யாருக்காக மரித்தார்? யாருக்காக உயிர்த்தார்? சிந்திப்போம்.

தவக்காலத்தில் வெளி அடையாளங்கள் தாண்டிய நம் மனமாற்றமே அவருக்குத் தேவை. அதையே இயேசு விரும்புகிறார். எனவே உயிர்ப்புப் பெருவிழாவினைக் கொண்டாட நாம் நம் மனத்தளவில் தயாராக வேண்டும்.

ஆண்டவர் இயேசு,
 சாவை வீழ்த்தி உயிர்த்தார்.
 அநியாயங்களை வீழ்த்தி உயிர்த்தார்
 பொய்மையை வீழ்த்தி உயிர்த்தார்
 பகைமையை வீழ்த்தி உயிர்த்தார்.

ஆகவே, நாமும் உயிர்ப்பின் உண்மையான பொருளினைப் புரிந்து தவக்காலத்தில் நம்மைத் தயார் செய்துகொண்டு இறை இயேசுவின் உயிர்ப்பினால் மகிழ்வோடு பங்குபெறக் காத்திருப்போம். உயிர்ப்புப் பெருவிழாவினை இயேசுவின் வெற்றிப் பெருவிழாவாகக் கொண்டாடுவோம். Happy Easter

அ.வென்ஸி, மணவாளநல்லூர்

0 comments:

Post a Comment