நம் வாழ்வின் நெறிமொழி

18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதின் காலங்களில் பிரான்ஸ் நாடு முழுவதும் ஒரு இருள்மயமான சூழ்நிலைல் கடந்து சென்றது. குறிப்பாக திருச்சபைன் பிள்ளைகள் நெருக்கடியான காலச் சூழ்நிலை களில் கடந்து சென்றார்கள்.

பிரெஞ்சுப் புரட்சினாலும் நெப்போலியன் போனபார்ட்டின் கொடும் அரசாட்சினாலும் திருச்சபை மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளானார்கள். ஆலய வழிபாடுகள் இல்லை. குருவானவர்கள் வெளியரங்கமாய் நடமாட முடியவில்லை. ‘கிறிஸ்தவர்கள்' எனக் கூறுவதற்கே மக்கள் அச்சமடைந்தார்கள். இராணுவத்தின் கொடூரப் பிடியில் மக்கள் சிக்கித் தவித்தார்கள்.

அப்போது மதவிரோதக் கும்பல் ஒன்று குருவானவரைப் பிடித்து சிறையிலடைத்துத் துன்புறுத்த எண்ணம் கொண்டது. எனவே ஒரு வீட்டுக்குச் சென்று அவ்வீட்டின் தலைவரை வியாதிப்படுக்கையில் இருப்பதுபோல் நடிக்க வைக்க வேண்டும் எனத் தீர்மானித்து, அதன் படியே செயல்பட்டார்கள்.

எப்படியோ ஒரு கிறிஸ்தவரைக் கண்டுபிடித்து நோயில்பூசுதல் திருவருள்சாதனம் நிறைவேற்ற ஒரு குருவானவரை அழைத்து வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். வஞ்சகமாய்ச் செயல்பட்ட அவர்களின் எண்ணங்களை அறியாத இவரும் சாதாரண உடையணிந்து ஒரு குருவானவரை அழைத்து வந்தார்.

குருவானவர் வியாதிப்பட்டவர் போல் படுக்கையில் படுத்திருந்தவரின் அருகில் சென்றார். அவரைத் தொட்டவுடன் குரு, "அவர் ஏற்கெனவே மரித்து விட்டாரே" எனக் கூறினார்.

வஞ்சகக் கூட்டமோ கேலி பண்ணி சிரித்தது. ஆனால் படுக்கையில் நடிக்க வைக்கப்பட்டவர் உண்மைலேயே மரித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பயத்தில் உறைந்து போனார்கள்.

வேதாகமத்தில், "ஆண்டவரே, என் வாழ்வின் முடிவையும், என் வாழ்வின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும். எவ்வளவு நிலையற்றது என் வாழ்வு! இதை நான் அறிவேனாக" (திபா 39:4-5) என வாசிக்கிறோம். மோயீசன் இஸ்ராயேல் மக்களிடம் "நீ உன்னையும் உன் ஆன்மாவையும் கவனமாய்க் காக்கக் கடவாய்" (இச 4:9) என்று கூறுகிறார்.

மத்தேயு 5 - 7 அதிகாரங்களில் இயேசுவின் மலைப்பொழிவின் அறிவுரை களைக் காணலாம். மகாத்மா காந்தி அவர்கள், "ஒவ்வொரு மனிதனும் மத் 5 - 7 அதிகாரங்களை மட்டும் வாசித்து அவைகளைக் கடைப்பிடித்தால் இந்த பூமி முழுவதையும் தெய்வீக சமாதானம் நிறைக்கும்" என்கிறார்.

இயேசு பிறந்த 2000 ஆண்டின் நினைவாக எனக்குப் புனித பூமி செல்லும் பாக்கியம் கிடைத்தது. இயேசு மலைப் பொழிவு செய்த இடத்தில் எட்டு பட்டயங்களைக் கொண்ட ஓர் ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. எட்டு பாக்கியமான வாக்கியங்கள் (5:3-10) நினைவாக அவ்வாலயம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நான் அந்த ஆலயத்தில் மண்டிட்டு இந்த மூன்று அதிகாரங்களையும் வாசித்துத் தியானம் செய்தேன். அன்று ஞாற்றுக்கிழமை. காலை எட்டு மணிக்கு இயேசு மலைப்பொழிவு செய்த இடமாய்ப் பாரம்பரியமாய் நினைக்கப்படுகின்ற இடத்திலுள்ள மரத்தினடி பலிபீடத்தில் திருப்பலி செய்தேன். உடன் பயணித்த திருயாத்திரிகர்கள் பங்கு பெற்றார்கள். எத்தனை பாக்கியமான திருப்பலி அது!

இயேசுவின் அருள்மொழிகள் கூறப்பட்ட இடத்திலிருந்து பார்த்தால், மக்கள் உட்கார்ந்து இறைவார்த்தையைக் கேட்ட இடம் ஒரு பள்ளத்தாக்குப்பகுதியாகத்தான் இருக்கிறது. இயேசுவின் மலைப்பொழிவு மிக எளிதாக, தெளிவாகப் புரிந்துகொள்ளும் சூழ்நிலையைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

மத் 5:1-இல் இயேசு திரளான கூட்டத்தைக் கண்டு மலை மீது அமர்ந்து திருவாய் மலர்ந்து போதிக்கலானார் என வாசிக்கிறோம்.

மலைப்பொழிவு முழுவதும், "உங்கள் இறைவன் பரிசுத்தர், எனவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்" என்ற அறிவுரை ன்படியே இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் மிகவும் புனிதனாய் வாழ இயேசு கற்பிக்கிறார். நாமும் மலைப் பொழிவு மக்கள் கூட்டத்தில் பங்குபெற்று இயேசுவில் வாழ வழி அறிவோம்.

ஒரு சமயத்தில் கிராமப்புறப்பங்கில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அன்று ஆகஸ்ட் 15-ஆம் தேதி - சுதந்திர தினமும் மரியாள் விண்ணேற்புத் திருநாளும் உள்ள திருப்பலிக்கு மக்கள் வந்திருந்தார்கள்.

அக்கிராமத்தில் அநேகர் ஆசிரியப்பணி செய்து வந்தார்கள். அரசுப்பள்ளிகளிலும் வேலை பார்த்து வந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி

"உங்கள் இறைவன் பரிசுத்தர், எனவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்"

செல்வதோ, குழந்தைகளுக்குக் கடமை உணர்வு, அக்கறையோடு பாடங்கள் நடத்தாததைக் கேள்விப்பட்டு மறையுரையில் சற்று கடுமையாகத் திட்டினேன்.

ஆசிரியப் பிள்ளைகளோ அன்று சுதந்திர தினமாகையால் மற்ற சக ஆசிரியர்களிடம் நான் திட்டியது குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்களோ, "உங்களை உரிமையோடு திட்டுவதற்கு ஒருவர் இருக்கிறாரே, எங்களைத் திட்டி வழிநடத்த ஒருவரும் இல்லையே" என்றார்களாம்.

இயேசுவின் அருள்மொழிகள் நம் வாழ்வு செம்மைப்படுத்தப்படவும், நெறிப்படுத்தப்படவும் கூறப்பட்டிருக்கின்றன. நாம் அவைகளை வாசிப்போம், தியானிப்போம். அவற்றின்படியே வாழுவோம். இந்தப் பூமியில் வாழ்வில் மட்டுமே நாம் நம் பாவங்களுக்காகக் கண்ணீர்விட முடியும்; இறை மன்னிப்பும் பெற முடியும். ஏனெனில் இப்பூமின் நாட்கள் இரக்கத்தின் நாட்கள் என்பதை உணருவோம். ஆமென்.

Fr. ஜெகநாதன், அய்யம்பாளையம், திண்டுக்கல்

0 comments:

Post a Comment