இனி ஒரு விதி செய்வோம்

எந்தக் கட்சிக் கொடி
கேட்டுக் கொண்டே ஏற்றினார்
அரசு விழாவில் அமைச்சர்

எல்லாம்
தலை கீழாய் நடக்கும்
காலம்

முதல் நாள்
ரோஜா மாலை
மறு நாள்
செருப்பு மாலை

முன்பு வாக்களிப்பது
சனநாயகம்
இப்போது
பணநாயகம்

அண்ணாவின்
இறுதி ஊர்வலக் கூட்டத்தை
முறியடித்தது
டயானாவின் இறுதி ஊர்வலம்

கோமணம் கட்டிக் கொண்டு
கோடீஸ்வர அரசியல்
நடத்தினார்கள் அன்று

கோடீஸ்வரராய்
இருந்து கொண்டு
மக்களைக்
கோமாளி ஆக்குகிறார்கள்
இன்று!

பெருந்தலைவர்
இறந்தபோது
இருந்தது
அறுபத்தி மூன்று ரூபாய்!

அன்று
ஊழல் இல்லை
இன்று
ஊழல் இல்லாமல்
உலகமில்லை!

கொடியும் தெரியாது
கொள்கையும் அறியாது
அரசியல் செய்கிறார்கள்

ஆகவே
பரிசுச் சீட்டும்
வாக்குச் சீட்டும்
ஒன்றாகிப் போனது
பாமரனுக்கு!

கோட்டு போட்டிருந்த
காந்தியை
கோமணம் கட்ட வைத்ததும்
அரசியல்தான்

அம்பேத்கரை
அண்ணல் ஆக்கியதும்
அரசியல்தான்!

பேருந்தில் பயணம் செய்த
கக்கன் எங்கே?
ஸ்பெக்ட்ரத்தில் பங்கு போட்ட
பெருச்சாலிகள் எங்கே?

இன்னுமா விளங்கவில்லை?
‘இனியயாரு விதி செய்வோம்'

உங்கள்
வாக்குச் சீட்டு
வஞ்கச வரலாறை
மாற்றட்டும்!


- தமிழ்நெஞ்சன்

0 comments:

Post a Comment