புனித சுவக்கீன், புனித அன்னம்மாள்


சுவக்கீன் என்றால் “ஆண்டவரது தயாரிப்பு” என்பது பொருள்.  அன்னா என்றால் “இறைவனது அருள்” என்று பொருள்.  அன்னம்மாள் பெத்லகேமில் பிறந்தார்.  நாசரேத்தில் வாழ்ந்த சுவக்கீன் என்பவரை மணந்தார்.  இருவரும் தாவீது அரசருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  இவர்களுக்கு நெடுங்காலமாக குழந்தை இல்லை.  பிறகு மரியாள் பிறந்தார்.  மரியாளுக்கு மூன்று வயது ஆனதும் தேவாலயத்திற்குச் செல்லும்படி அவரைக் கடவுள் அழைத்தார்.  சுவக்கீனும் அன்னம்மாளும் தியாக குணம் படைத்தவர்கள்.  நெடுங்காலமாய் தவம் இருந்து கடவுளை மன்றாடிப் பெற்றெடுத்த அழகிய குழந்தையைக் கடவுளுக்கு இவர்கள் அர்ப்பணம் செய்தார்கள்.
திருச்சபையில் பெருங்காலத்திற்கு முன்பிருந்தே புனித அன்னம்மளை விசுவாசிகள் வணங்கி வந்திருக்கிறார்கள். இவரின் பெயரில் கோவில்கள் கட்டப் பட்டன.  கிழக்கத்திய திருச்சபையின் பிதாப்பிதாக்கள் இவரது பரிசுத்த தனத்தைப் பற்றியும் இவர் பெற்ற வரங்களைப் பற்றியும் அழகாகக் கூறியிருக்கிறார்கள்.  நான்காம் நூற்றாண்டில் புனித சுவக்கீன் பெயரில் எருசலேமில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது.

சிந்தனை : இவர்களைப் போல கடவுளுக்காக, நாம் நேசிக்கும் இடம், பொருள், ஆட்களைத் தியாகம் செய்வதற்கான தைரியத்தைக் கேட்டு மன்றாடுவோம்.
செபம் : ஆண்டவரே, தியாக மனப்பான்மையை எங்கள் அனைவருக்கும் தாரும். 

-எட்வர்டு

0 comments:

Post a Comment