தமத்திருத்துவம்

மனிதன் உடல் உள்ளம் ஆன்மா
இணைந்த இறைப்படைப்பு
உடல் தந்தை
உள்ளம் மகன்
ஆன்மா தூய ஆவி
உடலில் படைப்பின் ஜீவன்
உள்ளத்தில் வாழ்வின் நல்வாக்கு
ஆன்மாவில் உண்மையின் தேற்றரவாளர்
மனிதன் இறைவனின் சாயல்
முப்பரிமாண கடவுள் தந்தை
செயலில் மூவர் எனினும்
வடிவில் ‘ஒருவரே’
மனிதப் படைப்பு உணர்த்துவது இதுவே!
அவரே திரிஏக தேவன்!
தந்தையின் தூய ஆவிப் பிறப்பு
மகனாம் இயேசு மரியிடம்
இரத்தம் கலந்திட்ட மிருகம்
ஒழியும் வேளை
மாயை விலகும்
உண்மை விளங்கும்
அப்போது!

-ச. செல்வராஜ், விழுப்புரம்

0 comments:

Post a Comment