ஊருக்குத்தான் உபதேசம் நமக்கில்லை


1.நம் மத்தியில் சொல்வதற்கு ஆயிரக்கணக்கில் இருக்கின்றன - அற்புதமான அறிவுரைகள், அட்டகாசமான சொற்பொழிவுகள்.  ஆனால் அதன்படி நடப்பதற்குத்தான் ஆட்கள் இல்லை.

2.அதைக்கூட உன்னால் செய்ய முடியாதா?  நானாக இருந்தால் இந்நேரம் அதனை முடித்திருப்பேன் என்று பெரிய அளவிற்குப் பேசுவோம்.

3.நமது ஊர்ப் பெரியோரைப் போல் இன்று பிள்ளைகளும் பேச ஆரம்பித்து விட்டனர்.  பேச்சு அதிமாகிறது.  வேலை முடியும் நிலை இல்லாமற் போகிறது.

4.இதனால் முடியவேண்டிய செயற் பாடுகள் முடிவு பெறாத நிலையை அடைகின்றன.

5.ஒரு சிலவற்றையே சொல்வோம், சொல்வதன்படியே செய்வோம்.

6.பேச்சைக் குறைப்போம்;  உற்பத் தியைப்  பெருக்குவோம்.

7.பேசுகிறவனை மக்கள் நம்ப மறுப்பார்கள்.  ஆனால் செய்பவனை மக்கள் மதிப்பார்கள்.  ஏனெனில் அவன் செய்யும் செயல் அவனது பேச்சிற்கு ஊர்ஜிதம் தருகிறது.

8.வாழ்க்கை வேறு, பேச்சு வேறு என்றிருந்தால் அது ஒரு மனிதனை இரண்டாகப் பிரித்து முரண்பட்ட மனிதனாகக் காட்டுகிறது.


நன்றி!  மலர்களே மலருங்கள்

0 comments:

Post a Comment