மனிதம் சிறந்தால் மட்டுமே பிறப்பார்

மக்களின்
மேட்டுக்குடித் தனத்தால்
மாட்டுக் கொட்டிலில்
மனிதம் பிறந்தது
மக்களிடமிருந்து
இடம் பெயர்ந்தது . . .
படாபடமும் பகட்டும்
பரமனுக்கும்
பாமரனுக்கும்
பாரமானதும்
தூரமானதும் என்று
வரலாறு படைத்தது . . .
ஆடம்பர ஆரவாரத்தை
அணிந்து கொண்ட
நாகரீக உலகம்
மாட்டுக் கொட்டிலை
மாடி வீட்டுப் பகட்டில்
ஜோடித்து வைத்து
வரலாறு மறக்கிறது . . .
கோவில்களில் . . .
குடும்பங்களில் . . .
இல்லங்களில் . . .
உள்ளங்களில் . . .
ஆடம்பரம் ஒழித்து
எளிமையை நிறைத்தால்
இயேசு பிறப்பார்
வலிமை குன்றியோர் வாழ
வழியைச் செய்து
மனிதம் சிறந்தால் மட்டுமே
மனுமகன் பிறப்பார்

திரு. எஸ். எரோணிமுஸ்,

0 comments:

Post a Comment