கிறிஸ்து பிறப்பு விழா

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமிற்கு வந்து, யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக் கிறோம் என்றார்கள். (மத் 2:1-2).
இவ்வுலகைத் தனது பிறப்பாலும் உயிர்ப்பாலும் மீட்டுக்கொண்ட இயேசுவாகிய கடவுளுடைய மகனுக்குப் பிறப்பிடம் மாட்டுத்தொழுவம். மனிதர்கள் இடம் கொடுக்க மறுத்துவிட்டார்கள். மாடாவது இடம் கொடுத்ததே இறைமகன் இயேசுவுக்கு! எனவே விண்ணுலக வேந்தன் மண்ணுலகில் பிறந்தார். தாவீது குலத்தின் தவப்புதல்வன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவாகிய கிறிஸ்துமஸ் விழா எல்லோருக்கும் மகிழ்வூட்டும் பெருநாளாகும். இக் கொண்டாட்டத்தில் பிரிக்க முடியாத அடையாளமாக இருக்கும் நட்சத் திரங்களைத் (ஸ்டார்களை) தொங்க விடுவது விழா கொண்டாட்டத்தின் துவக்கமாக அமைந்துள்ளது. சில இடங்களில் இக்காலத்தில் பிற மத்தினரும் ஸ்டார்களைத் தங்கள் வீடுகளின் முன்பு தொங்கவிடும் பழக்கத்தைக் கொண் டுள்ளார்கள். எனவே கிறிஸ்துமஸுக்கும் நட்சத்திரங்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு.
இன்றோ உலகில் எல்லா மூலை முடுக்குகளிலும் பல நட்சத்திரங்கள் தோன்றியுள்ளார்கள். முக்கியமாக சினிமா நட்சத்திரங்கள், அரசியல் நட்சத்திரங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், கலை நட்சத்திரங்கள் எனப் பல நட்சத்திரங்கள் மின்னுகின்றன. இவர்களின் மாயக் கவர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டு, தொண்டர்களாகவும் ரசிகர்களாகவும் மாறி அவர்கள் பின்னால் சென்று வாழ்க்கையை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நட்சத்திரங்களாக ஜொலித்திட பகட்டான ஆடம்பர வாழ்க்கையில் தங்களையே ஈடுபடுத்தி நிற்கின்றனர். இவர்கள் மத்தியில்தான் கிறிஸ்துமஸ் நட்சத்திரமும் ஜொலிக்கிறது. ஆனால் இவ்விரண்டிற்கும் சில வித்தியாசங்கள் உண்டு.
இவ்வுலக நட்சத்திரங்கள் தங்களையே மையப்படுத்தி மக்களைத் தம்பால் ஈர்ப்பதிலேயே கருத்தாக உள்ளனர். எல்லோரையும்விட உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்; தாங்கள் செய்யும் பணிகள் அனைத்தும் பிறர் கண்டு பாராட்ட வேண்டும் என்பதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் வெறும் விளம்பரச் செயல்களே ஆகும்.
ஆனால் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஞானிகள் குழந்தை இயேசுவிடம் வந்துசேர வழிகாட்டியாக அமைந் திருந்தது. மேலும் மக்களைத் தன்னை நோக்கி ஈர்க்காமல், கடவுளை நோக்கியும், பிறரும் ஆண்டவரிடம சென்றடையவும் வழிகாட்டியாக அமைந்தது என்பதை உணர வேண்டும். எனவே இவ்வுலக வாழ்க்கையில் கவர்ச்சிகளைக் கண்டு மயங்காமலும், தங்களுக்கு நலம் தரும் மக்களுக்கு மட்டும் நன்மைகளைச் செய்யும் மனநிலையை மாற்றி வாழ வேண்டும். அப்பொழுதுதான் நம் நிறுவனங்களிலும், வீதிகளிலும், வீடுகளிலும் தொங்க விடப்படும் நட்சத்திரங்களுக்கு ஓர் அர்த்தம் உண்டு.
சிறப்பாக வார்த்தைப்பாட்டை எடுத்துக்கொண்டு வளமையாக வாழ அருட்பணியாளர்கள், துறவிகள் செய்ய வேண்டிய பணிகள் எல்லாம் வீதியில் விடியலுக்காய்க் காத்திருப்பவர் களுக்காகச் செய்து ஒளிவீசும் நட்சத்திரங்களாக மாற வேண்டும். மேலும் கிறிஸ்துவை அடையாளம் காட்டி அவரை அடைய வழிகாட்டுவதுதான் முக்கியமானது என எண்ணி செயல்பட வேண்டும். வார்த்தைகளால் மட்டும் அல்ல, நமது ஒவ்வொருவரின் எடுத்துக் காட்டான வாழ்க்கையில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களாக மாறுவோமாக!
தீண்டாமை அகற்றிடவே
தீய சக்திகளை அழித்திடவே
அன்பை விதைத்துமே
அறத்தை வளர்த்துமே
உறவை வலுப்படுத்தியுமே
உதவும் கரங்களாகிட
இருண்ட உலகினிலே
இனிதாக உழைத்திடவே
மாந்தரை மாற்றிடவே
மகேசன் பிறந்தாரே!
கிறிஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


சகோ. தெரசிட்டா FSM

0 comments:

Post a Comment