அர்ப்பணிக்க உன்னத ஓர் இலட்சியக் கனவு உண்டே!

உலகமய இவ்வுலகில்
என்னவாக என் குழந்தை
உருவாக வேண்டுமென
என் கனவு?

எத்தகைய மனிதனாய் மனு´யாய்
ஆளாக்கி உலகில் உலவவிட
வேண்டுமென
என் கனவு?

ஆளும் அமைச்சரா?
ஆசானா? ஆட்சித் தலை(வி)வனா?
இராணுவத் தளபதியா?
ஊர்தி ஓட்டியா?
இசை ஞானியா?
கட்டடக் கலைஞரா?
ஒலிம்பிக் வீரனா? வீராங்கனையா?
காவல் அதிகாரியா?
சட்ட வல்லுநரா?
ஆடை அணி வடிவமைப்பாளரா?
தேசத் தலைவ(னா)வியா?
அறிவியல் புலியா?
சமூகத் தொண்டரா?
அறிவாற்றல் மருத்துவரா?
இவற்றைப் போல்
இன்னும் வேறு இனிதான
உயர்வான கனவு உண்டு
இறைபணிக்கே
என் குழந்தை
அர்ப்பணிக்கும்
கனவு
உண்டே!
முனைவர் அ. அந்தோணி குருசு

0 comments:

Post a Comment