இது பூக்களின் காலம் . . . இயல்பே நிரந்தரம்

தம்பதி ஒன்று
தவம் கிடக்கிறது குழந்தைக்கு
பனிக்குடம் உடைய
பத்தியம் இருக்கிறது
ஒரு குடும்பம்


கண்டதைத் தின்று
வாந்தி எடுப்பதாகிப் போனது
இன்றைய கல்வி!
பொதி சுமக்கிறது
சீருடை அணிந்த
ஒரு கும்பல்


மம்மி என்று சொல்லும்
தாய் மொழி மறந்த குழந்தைக்கு
ஐந்து முத்தம் கொடுக்கிறாள்
அம்மா!


சீட்டெடுக்கும்
கிளியைப் பார்த்து
சிரிக்கிறது குழந்தை
அது சிறகு இழந்திருப்பது
அறியாமல்
சொன்னதைச் சொல்லும்
கிளிப்பிள்ளை என்கிறார்கள்
அது தாய்மொழி
மறந்த தென்கிறேன்
நான்


குழந்தையும் தெய்வமும்
ஒன்றென்கிறார்கள்


தவம் கிடந்து பெற்றாலும்
சில பொழுதில்
சனியனே என்று -  குழந்தை
திட்டத்தான் வேண்டியிருக்கிறது
என்கிறாள் தாய்


பொய் சொல்லாது
குழந்தையயன்கிறான்
ஞானி


குழந்தையாய் இரு
என்கிறான்
துறவி


குழந்தை குழந்தையாய்
இருப்பது
அதன் உரிமை
குற்றம் சொல்லாமல்
இருப்பது
நம் கடமை.

0 comments:

Post a Comment