உலகின் பாவமில்லா முதல் துறவிகள்

கன்னி மரியாள் கணவனை அறியாளோ?
ஆவியின் கனி இயேசுவுக்குப்பின்
சூசை மரி கூடி வாழ்ந்தார்கள்
சோதரர் நால்வர் சோதரி ஒருவர்
வேதம் சொல்கிறது
சோதரி சோதரர் எல்லாம்
உடன் இரத்தப் பிறப்பா என்ன?
கன்னி கெடா கற்பு மரி
தூதரால் உணர்த்தப்பட்ட நீதி சூசை
ஆவியால் நிரப்பப் பட்டதால்
உலகின் பாவமில்லா
முதல் துறவிகள் அன்றோ?
நித்திய குரு இயேசு வழி
வழுவா வரம் கொண்ட மணத்துறவு
இறை இயேசுவின் திருக்குடும்பத்திற்கு
ஒப்புமை உண்டோ உலகில்?
சொல் மனமே சொல்!
ச. செல்வராஜ், விழுப்புரம்

0 comments:

Post a Comment