தேவன் உயிர்த்தெழுந்தார்



சேசு  தேவன்  உயிர்த்தெழுந்தார் -  நாமும்
     சேசைப்  போல்   உயிர்த்தெழுவோம்
மாசு   இன்றி   உயிர்த்தார்  -  மகிமை
     பாபத்   தோடு   உயிர்பெற்றார்
நீசர்    வாழும்    உலகுதான்  -  இதனை
     எண்ணி    தூயர்   ஆகுவோம்
நாசர்   வாழும்   உலகிற்கு  -  செல்லாது
     நம்மை  நாமே   திருத்துவோம்!
சேசைப்   போன்று   வாழுவோம்  -  இந்த
     செகத்தை  வென்று  நற்கதியில்
ஆசை   யோடு   நுழைந்திடுவோம்  -  வாழும்
     ஆசில்லா   வாழ்விற்குப்    பரிசுதான்
நேசத்    தோடு   சேசுவை   -  பின்பற்றி
     நேர்த்தியாய்   என்றும்    வாழுவோம்
நீசத்   தனங்கள்   விட்டொழித்து  -  என்றும்
     நிறைந்த   புனிதர்   ஆகுவோம்
தூயத்   தோடு உயிர்த்தெழுந்தால் - நமக்கு
     உன்னத   மோட்சம்   கிடைத்துவிடும்
தீய   பாபத்துடன்   உயிர்த்தால்  -  என்றும்
     தீயில்   வெந்து   கருகனும்
மாய   மான  உலகினது  -  இன்பத்தில்
     வாழ்ந்து   மடிந்து   உயிர்பெற்றால்
ஞாய  மான  வழிதவறி  -  வாழின்
     நரகில்  தீயில்   வேகணும்!
பாப  வாழ்க்கை  ஒதுக்கணும்  -  என்றும்
     பரிசுத்த வாழ்வில்  வாழணும்
தீமை  களைந்து  புண்ணியம் - பெற்று
     திறம்பட  வாழ்ந்து  மோட்சத்தில்
சாபம்   நீங்கி   நுழைந்திடுவோம் - தூயர்
     அணியில் இடம்பிடித்து  மகிழ்வோம்
தீபச் சுடராய் ஒளிவிடுவோம்  -  என்றும்
     நிரந்தர  இடத்தைப்  பெற்றிடுவோம்! 
கவிஞர் பெஸ்கிதாசன்

0 comments:

Post a Comment