“வார்த்தை” மனுஉருவானவர்


கிறிஸ்துவின் பிறப்பு எங்ஙனம் நிகழும்?
கன்னி தூயஆவியால் கருத்தரிப்பது எப்படி?
தன் மூளை பலத்தால் எதையும்
பகுத்தாயும் மனிதன்
தூய ஆவியை நம்புவானா?
அவனிடம் உள்ள இரு வேறு
ஆவிகளைத்தான் இனம் காணுவானா?
மரபணு மூலம் மாற்றம் விளையும்
அதீத சிந்தனை
சிக்மண்ட் ஃபிராயடைத்தான் போற்றும்!
படைப்பு பரிணாமம் வெவ்வேறு
கூறுகள் என்றால்
மனிதம் அம்மூலக்கூறுகளின்
ஒருமித்த சங்கமம்
ஜென்மப் பாவம் இல்லா மாசற்ற மரியாள்
கண்ணுக்குப் புலப்படாத தூய ஆவியால்
கர்த்தரைப் பெற்றெடுத்தார் என்பது
சாதாரண மனித மூளைக்கு
எட்டாததுதான்
எதை எதையோ அறிவால் தேடும்
அறிவு ஜீவிகளே!
கடவுளின் ஞானத்தைத் தேடுங்கள்!
அவர்தம் ‘இறைவார்த்தை’யைப்
பற்றிப் பாருங்கள்!
அப்போது புரியும்
மனுஉருவானது நிஜம் என்று!
தூயவர் என்று!

ச. செல்வராஜ், விழுப்புரம்

0 comments:

Post a Comment