டாக்டர் கலாம் விவசாயிகளிடம் பெற்றுக்கொண்ட உறுதிமொழிகள்

  1. குழந்தைகள் நமது விலைமதிப்பில்லா சொத்து.
  2. நாம் பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளையும் சமமாகப் பாவித்து, அவர்களின் உரிமைக்காகவும், கல்வி வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற் காகவும் பாடுபடுவோம்.
  3. சுகாதாரம் மற்றும் வளமான நல்வாழ்வுக்காக நாம் எல்லோரும் சிறு குடும்பத் திட்டத்தை கடைபிடிப்போம்.
  4. கடின உழைப்பால் வருமானம் கிடைக்கிறது.  அதை நாம் மதுபானம் மற்றும் சூதாட்டத்தில் வீணாக்க மாட்டோம்.
  5. நம்முடைய குழந்தைகளுக்கு கல்வியறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவோம்.  ஏனெனில், கற்பதால் அறிவு வளரும்.  அறிவாற்றலால் குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றம் அடைவர்.
  6. நாம் எல்லோரும் மண்வளத்தையும் காடுவளத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.
  7. நாம் எல்லோரும் குறைந்தபட்சம் ஐந்து மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம்.
  8. நாம் நம்முடைய குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருப்போம்.

விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே இந்த உறுதிமொழிகள் பொருந்துமில்லையா?

0 comments:

Post a Comment