உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்


இறை இயேசுவில் அன்புள்ள சகோதர சகோதரிகளே!

கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்!

புனித வாரமும்உயிர்ப்புப் பெருவிழாவும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில்இத்தவக்காலத்தில் நாம் மேற்கொண்ட நேர்மையான நோன்புதாராள தர்மம்உருக்கமான செபம் நம் உள்ளத்தையும்ஆன்மாவையும் புதுப்பித்துள்ளன. இறையாட்சிக்கு நம்மை நெருக்கமாகச் செய்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

நம் வாழ்வில் ஏற்பட்ட தோல்விகள்மன அழுத்தம்உறவுச் சிக்கல்கள்விரக்தியான சூழல் போன்றவற்றை நாம் போதுமான அளவு ஏற்க கற்றுக் கொண்டதால் பணியாளர்களாகவும்சீடர்களாகவும் வாழ முடிகிறது. இப்படிப்பட்ட சவால் நிறைந்த வாழ்விற்கு கிறிஸ்துவே முன்னோடியாக இருக்கின்றார். கிறிஸ்து தன் பாடுகளினாலும் பலியாலும் நம்மை மீண்டும் கடவுளின் அன்புப் பிள்ளைகளாக மீட்டெடுத்துள்ளார்.

உயிர்ப்புப் பெருவிழா நம்மைப் பற்றிய நலம் தரும் எண்ணங்களையும் நமக்குத் தருகின்றது. வேதனையும் வலிகளும் முழுமையாக நம்மை விட்டு விலகாது ஏன் இப்போது உள்ள துன்பம் உயிர்ப்புப் பெருவிழாவிற்குப் பின்பும் நம்மைத் தொடர்ந்து வரும். ஆகவே இத்தகைய யதார்த்தங்கள் மாறுவதில்லை ஆனால் அவை நம்மை மாற்றிவிடுகின்றன! நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் போகலாம்.ஆனால் பிரச்சினைகளைச் சந்திக்கின்ற வளங்களையும்ஆற்றலையும் உயிர்த்த ஆண்டவர் தருகின்றார்.

ஆன்மீக ஒளி கொண்டு உலக நிகழ்வுகளை ஆய்வு செய்து இளைஞர்இளம் பெண்களுக்கு வழிகாட்டஅழைத்தலில் ஊக்கப்படுத்த அன்னை மரியாள் நமக்குத் துணைபுரிவாராக!

அனைவருக்கும் மகிழ்வான உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்!

கிறிஸ்துவின் ஊழியன்

ஜுடு பால்ராஜ்

பாளையங்கோட்டை ஆயர்

0 comments:

Post a Comment