அல்லேலூயா !!!

சிலுவை கொடியவர்களுக்கான
அவமானச் சின்னம்
தூயவரான ஆண்டவர்
இழிச்சிலுவையை ஏற்றதேன்?
சிலுவையின் நேர்ச்சட்டம்
தந்தை வழிநடப்பது
குறுக்குச் சட்டம்
உலக வழி நடப்பது
இரண்டும் உரசுகின்ற போது
போராட்டங்கள் பாடுகள்
அவமானங்கள்
நேர்க்கோட்டை குறுக்குக் கோடுகள்
கோணலாக்குகின்றன
அதனால் வாழ்வு கசக்கிறது
வசந்தம் போய் சாவு வருகிறது
பாவங்கள் சாபங்கள் நோய்கள்
பசாசின் கட்டுக்கள் நீங்கிட
சிலுவை நாயகன் ‘இயேசுவே வழி’!
அவமானச் சின்னம்
அற்புதச் சின்னமாய் மாறியது
மகிமை நாதரால்!
உயிர்த்த ‘அவரில்’நம்பிக்கைக் கொண்டு
குறுக்குச் சட்டங்களைத் தகர்ப்போம்!
விடுதலை அடைந்து ‘நித்திய வாழ்வு’
பெறுவோம்!
நிறைமகிழ்ச்சியை சொந்தமாக்குவோம் !!
அல்லேலூயா !!!
ச. செல்வராஜ், விழுப்புரம் 

0 comments:

Post a Comment