இது பூக்களின் காலம் . . . பேர் சொல்லும் பிள்ளை


திண்ணையில் வசித்த
அப்பா வீட்டுக்குள் வந்தார்
புகைப்படமாய் 
                            - பா. சேது மாதவன்

பின்பற்றக்கூடிய
ஒன்றும்
பின்பற்றக்கூடா
ஒன்றும்
வரலாற்றில்
ஒன்றாக இருக்கிறது.
வைப்பாட்டிக்கு
அரண்மனை கட்டித் தந்தான்
மைசூர் மகராஜா!
காதல் மனைவிக்கு
நினைவுச்
சின்னம் எழுப்பினான்
ஷாஜஹான்!
ஹரின் திலோத்தியின்
கண்ணீர்தானே
யமுனையானது!
அன்பு நாயகி
முத்தம்மாளுக்கு
சத்திரம் சாவடி
கட்டித் தந்தான்
மன்னன் சரபோஜி!
வாரிசு வாழ்க்கையில்
வந்தவர்கள்
இத்தனை கட்டியவர்கள்
பெற்றோருக்கு
என்ன கட்டினார்கள்?
யிபிள்ளை வரம் கேட்டு
அரச மரம் சுற்றினாள்
அங்கம் புரண்டாள்!
பத்தியமிருந்தாள்
பட்டினி கிடந்தாள்!
முதலில் பிள்ளை வரம்
கேட்டவர்கள் - பின்
ஆண் - பெண்ணென்று
பால் பிரித்தார்கள்
கள்ளிப்பால் கொடுத்தார்கள்!
பேர் சொல்ல
பிள்ளையயன்றார்கள்
பின்
கொள்ளிவைக்க
பிள்ளையயன்றார்கள்!
பதினெட்டு பிள்ளை
பெற்றவர்
பரதேசி ஆனதும் உண்டு!
பட்டணத்தில் வசித்தவர்
பட்டினி கிடந்து
செத்ததும் உண்டு!
இப்படி தவமிருந்து
பெற்றவர்கள்
தனிமைப்படுத்தப்பட்டார்கள்!
அனாதை இல்லத்திலும்
முதியோர் இல்லத்திலும்
இருக்கும்போது
பசி தீர்க்காத பிள்ளை
இறந்தபின் பால் ஊற்றுவதில்
என்ன பயன்?
சிந்திக்கலாமே!

ஜே. தமிழ்ச்செல்வன்

0 comments:

Post a Comment