மாணவர்கள் டிப்ஸ்

தேர்வில் நல்ல மதிப்பெண் பெற நான்கு முக்கிய படிகள் உள்ளன.

  1. வகுப்பில் பாடத்தைக் கூர்ந்து கவனிப்பது.  
  2. அன்றன்றையப் பாடத்தை அன்றே சூட்டோடு சூடாகப் படித்து முடித்து விடுவது.  
  3. முறையான திருப்புதல் (Revision) , 
  4. மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்த்தல்.

அன்னை பெற்ற தெய்வம்

விண்ணுலகு மண்ணுலகு -  பல
                விந்தையான பொருட்களையும்
எண்ணில்லா உயிர்களையும் -  நல்ல
                ஏற்றமிகு மனிதனையும்
கண்சிமிட்டு நொடியினிலே -  நன்கு
                கணக்காகப் படைத்தவர்
மண்ணில் வந்(து) பிறப்பதற்கு
                மார்க்கமும் உனக்கில்லையே?
மாடமில்லை கூடமில்லை -  இழிந்த
                மாடடையும் தொழுவத்திலே
மூடிடவும் கந்தையின்(றி) - வாட்டும்
                குளிர்தனிலே அழு தேங்கி
வாடிடும் நிலை யேனோ?  -  தேவா
                மக்களின் பாபங்கள்
தேடிவந்து அழித்திடவே -  பிறந்து
                நேசமும் காட்டினாயோ?
கன்னித்தாய் கரத்தினிலே -  தூங்கும்
                கர்த்தனே!   கண்ணுறங்கு!!
பண்பாடி இசைத்தனரே -  தூதர்
                வால்மீனும் ஒளியூட்ட
மன்னர்கள் மூன்று பேர் -  பரிசு
                வழங்கியே சிறப்பித்தாரே!
பொன்னால் மன்னவனே -  புகழ்ந்து
                தூபத்தால் இறைவனோடு
மின்னிடும் மீரையால் -  மனிதனே
                என்றுமே விளக்கினரே!!
விண்ணிலே மாட்சியும் -  இந்த
                மண்ணிலே சமாதானமும்
நன்றாகச் செழித்திடவே -  இங்கு
                நரனாகப் பிறந்தாயோ!!
என்னாளும் நினைத்திடும்-  பிறப்பு
                எங்களுக்கு நற்பாடம்!!!
கவிஞர் பெஸ்கிதாசன்

வாழ்வில் காக்க வேண்டிய அவயவங்கள் - 6

1. எல்லாக் காவலோடும் இதயத்தைக் காத்துக் கொள்ளவேண்டும்.
2. தாறுமாறுகளிலிருந்து வாயைக் காத்துக் கொள்ள வேண்டும்.
3. மாறுபாடுகளிலிருந்து உதடுகளைக் காத்துக் கொள்ள வேண்டும்.
4. கண்ணிமைகளைச் செவ்வையாய் பார்க்க வேண்டும்.
5. கண்களை நேராய் நோக்க வேண்டும்.
6. நீதியான வழிகளில் கால்கள் நடக்க வேண்டும்.

சமுதாயம் முன்னேற உதவுவது “புரட்சி”

அனைவருக்கும் அன்பு காட்டும் ஆண்டவனின்
அன்புப் பிள்கைளாய்ப் பிறந்தும்
சாதி இன மொழி வேற்றுமையால் வாடும்
சகோதர, சகோதரிகள் நல்வாழ்வு காண
உதவுவதே புரட்சி என்போம்
மூலையில் முடங்கிக் கிடக்கின்ற எண்ணற்ற
மக்கள் இனத்தைத் தட்டி எழுப்பி
எழுச்சி பெற்று ஏற்றங்கள் பல பெற்று
நாளும் மகிழ்வுடன் வாழச் செய்ய
உதவுவதே புரட்சி என்போம்
அல்லும் பகலும் அயராது உழைத்தாலும்
வாழ்வின் அடிப்படைத் தேவைகள் இன்றி
தாழ்வுறும் சமுதாயம் ஏற்றம் பெற
ஆர்வமும் ஆக்கமும் கொண்டு உழைத்து
உதவுவதே புரட்சி என்போம்
நம் நாட்டு மக்கள் வளர்ச்சி இன்றியே
நிலவும் வளர்ச்சியையும் சின்னா பின்னமாக்கி
ஏங்கும் மனிதர்கள் முன்னேற்றம் அடைய
இடைவிடாது செயல்படும் தியாகிகளாக
உதவுவதே புரட்சி என்போம்
ஆதரிப்போம் என்ற அரசியல் தலைவர்களே
ஆன்மீக நலனில் ஈடுபடும் ஆன்மீகவாதிகளே
அறிவியலில் முன்னேறும் செயல் வீரர்களாம் இளைஞர்களே
அறிவில் சிறந்து கைகோக்க விரும்பும் பெரியோர்களே
புரட்சி செய்வீர் நாடு நலம் பெறச் செய்வீர்.
Sr. Theresita

இறையழைத்தல் ஊக்குநர்கள் கூட்டத்தில் பேசிய கருத்தாளர்களின் தொகுப்பு






திருச்சபையில் குருக்கள், சகோதரர்கள் மற்றும் சகோதரிகளிடம் எதைப் பார்த்தீர்கள்எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்எதைப் பார்க்க விரும்புகிறீர்கள்?
A. எதைப் பார்த்தீர்கள்?
1.            தேவ அழைத்தல் என்றால் என்ன?
உயிரைப் பெற்று அதை அளிக்க அழைக்கப்படுதல்என்பார் திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர்.  நம் நாட்டில் கல்விப்பணி. நற்செய்திப்பணி, சமூகப் பணி, மருத்துவப் பணிகளை அர்ப்பணத்துடன் செய்து வருபவர்கள் அர்ப்பணம் என்ற சொல்லுக்கு இலக்கணமாய் திகழ்பவர்கள்.
2.            செப வாழ்வில், நல்ல மதிப்பீடுகளில் தாங்கள் மட்டும் வராது மற்ற மக்களையும் வர வைத்தவர்கள்.
3.  உதவி செய்வதில் ஏழை எளிய மக்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.  ‘Option for the Poor’ ஏழைகளுக்காய் வாதாடினர்.
4.            சாதி கடந்து மதம் கடந்து மனிதர்கள் ஒற்றுமையுடன் அமைதியுடன் வாழ அனைத்து சமுதாயப் பேரவை, பல்சமயக் கூட்டமைப்பு, பல்சமய உரையாடல் மன்றங்கள் மூலம் மக்கள் மனித நேயத்துடன் வாழப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
5.            What is the most beautiful thing in this world? 
                The most beautiful thing is to see a person smiling.  And even more beautiful is knowing that you are the reason behind it.
                எங்கள் மகிழ்ச்சிக்கும், எங்கள் உயர்விற்கும், நல்வாழ்விற்கும் காரண மாக இருப்பவர்கள் துறவிகள்.  நீங்கள் ஒளிவிக்கல்லஎங்கள் இல்லத்தின் ஒளியேற்றும் விக்கு.
B. எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
                இன்று கல்விப்பணியிலே, சமூகப் பணியிலே, நற்செய்திப் பணியிலே, மருத்துவப் பணியிலே துறவிகள் அநேகரிடம் அர்ப்பண உணர்வையும், அன்பும் சேவையும் தாண்டி விடுதலை உணர்வையும் பார்க்கின்றேன்.  அதே சமயம் ஒரு சில இடங்களில் துறவியர்களுக்குள் சாதி மற்றும் அதிகாரம் பெறுதல், உடமையாக்குதல் போன்றவைகளால் பிவைப் பார்க்கின்றோம். சட்டம் மனிதனுக்காகமனிதன் சட்டத்திற்காக அன்றுஎன்று கூறுவதும் பிறர் குற்றங்களை மன்னிப்போம் என்பதும் ஒரு சிலரிடம் உதட்டவில்தான்.  உள்த் தவில், செயல் அவில் காணமுடிய வில்லை.
                அருட்தந்தை ஜோ மன்னத் அவர்கள் உயிர் காக்கும் நிலையம்என்று ஒரு கதை சொல்வார்கள்.  கடற்கரையில் வாழும் இளைஞர்கள் ஒன்றுகூடி அவர்களுக்குள் அமைப்பை உருவாக்கி கடற்கரையில் உயிர் காக்கும் நிலையம் ஒன்றைக் கட்டி அதில் முதல் உதவிப் பொருட்களை வைத்தனர்.  நடுக்கடலில் இயற்கைச் சீற்றத்தால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மனிதர்களை அந்தக் குடிசைக்குக் கொண்டு வந்து முதலுதவி செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்றுவதை இலட்சியமாகக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டனர்.  இவர்களால் காப்பாற்றப் பட்ட சில பணக்காரர்கள் உயிர்காக்கும் நிலையக் குடிசையை மாற்றி மாளிகையாக்கினர்.  அங்கே வாய்க்குச் சுவையான உணவு அருந்துவதற்குப் பானங்கள் என்று அங்கே வாழ்க்கைத் தரம் வித்தியாசமானது.  அதிலிருந்து சில இளைஞர்கள் பிரிந்து  மீண்டுமாய் உயிர் காக்கும் நிலையக் குடிசை அமர்த்தினர்.  இவர்களால் பயனடைந் தவர்கள் மீண்டும் குடிசையை மாற்றி மாளிகை கட்டிக் கொடுத்தனர்.  இப்படியாக உயிர் காக்கும் நிலையங்கள் கடற் கரையில் பெருகின.  ஆனால் கடலில் தத்தளிக்கும் உயிர்கள் ஒன்றும் காப்பாற்றப்படவில்லை.
                                “விளைந்த பலனை அறுப்பாரில்லை
                                விளைவின் நற்பலன் வாடிடுதே
                                அறுவடை மிகுதி ஆனால் வேலையாள் இல்லை
                                அந்தோ மனிதர் அழிகின்றாரே
C. எதைப் பார்க்க விரும்புகிறீர்கள்?
1.            இன்றைய நம் துறவற சபை நம் முன்னோர்களின் தியாகத்தால் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  இன்று உங்கள் தியாகம் முன்னெடுக்கப்படவில்லையயன்றால் எதிர்காலத்தில் வரும் தலைமுறை வாழாது.
2.            நாமே நற்செய்தி.  நாம்தான் பிறருக்காக உடைக்கப்படும் அப்பம்.  நீங்கள் நல்ல மதிப்பீடுகளில் வாழ்ந்து அதைப் பிறரோடு பகிரவேண்டும்.
3.            மதங்களுக்குள்ளே அர்த்தமுள் உரையாடல் தேவை.  ஏனெனில் உரையாடல் தான் சமூக மாற்றத்திற்கான கருவி.  மதங் களுக்குள்¼ அமைதியை உருவாக்கிட, இறுக்கங்களை நீக்கிட, நல்ல புரிதலை ஏற்படுத்த பல்சமய உரையாடல் அவசியமாகிறது.  இத்தகைய பயிற்சிகளைப் பொதுநிலையினருக்கு வழங்குதல் நலம்.
4.            நாம் பார்வையாராக இருக்கக் கூடாது.  மக்களின், சமூகத்தின் பிரச்சனைகளில் பங்கேற்பாராக இருக்க வேண்டும். 
                அழகிய கடற்கரையில் சிறுவன் ஓடி ஓடி அங்கு அலைகளினால் அடிக்கப்பட்டு கரையில் ஒதுங்கிக் கிடந்த நட்சத்திர மீன்களைத் தன் பிஞ்சுக்கரத்தால் மண்ணோடு சேர்த்து எடுத்து அதைக் கடல் நீரில் விட்டுக் கொண்டிருந்தான்.  வழியே வந்த பெரியவர் சிறுவனிடம், “இக்கடற்கரையின் நீம் தெரியுமா? எத்தனை நட்சத்திர மீன்கள் இவ்வாறு கரையில் இருக்கும்எல்லாவற்றையும் உன்னால் காப்பாற்ற முடியுமா?”  என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.  அவன் இறுதியாக ஒரே ஒரு பதில் சொன்னான்.  என்னால் எத்தனை நட்சத்திர மீன்களைக் காப்பாற்ற முடியுமோ அவ்வவு மீன்களை நான் காப்பாற்றுவேன்என்றான்.
What is religion?  காந்தியடிகளின் பேரன் சொல்வார்
“The essence of every religion is that God and we participate together in building up of humanity”                                                                                                                               -  Raj Mohan Gandhi
 தொகுப்பு - திரு. ஞான ஜெயமணிவிக்கிரமசிங்கபுரம்

ஆன்மீகம்

எனக்கு மிகவும் பிரியமான குருவானவர் சில தினங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் “ஆர்ஸ்” கிராமம் போய் விட்டு வந்தார். குருவானவர் களுக்கு கடந்த செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரை நடந்த தியானத்தில் பங்கு பெற்று விட்டு அவரின் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
புனித ஜான் மரிய வியான்னி (1786-1859) பங்குத் தந்தையாகஆர்ஸ் கிராமத்தைப் பொறுப்பேற்றபொழுது உலகியல் சம்பந்தமானது எதுவும் இல்லை. குறைந்த உணவு, சிறிய பெட்டியில் உடைகள். “அறிவற்றவர்” என்று சக குருவானவர்களாலேயே மதிப்பிடப்பட்டவர், வேண்டா நிலையிளல் குருப்பட்டம் கொடுக்கப் பட்ட அவரைத் துச்சமென நினைத்து எவ்வித இறை உணர்வும் இல்லா ஆர்ஸ் கிராமத்திற்கு அனுப்பு கிறார்கள்
அவர் தம் இறைப் பணிக்கு நம்பி இருந்தது அவரின் இறை நம்பிக்கை மட்டுமே. “ஆண்டவர் இயேசு கைவிடாத இறைவன்” என விசுவசித்தார். அவரிடம் இறைப் பற்றுடன் இணைந்த ஜெப தாகம் இருந்தது. மக்களின் ஆன்ம நலனில் அக்கறை இருந்தது. அன்னை மரியாள் மீது மிகுந்த பாச உணர்வும் இருந்தது. 24 மணி நேரமும் மக்களின் நலன்களுக்காய் அர்ப்பணமாக்கும் தியாக உணர்வு இருந்தது. “நாம் செய்வதைச் செய்வோம் எஞ்சியதை இறைவன் செய்வார்” என்ற விசுவாச உறுதி அவரிடம் இருந்தது.
இத்தகைய உணர்வுகள்தான் 41 ஆண்டுகள் அதே ஊரில் தொடர்ந்து பணியாற்றவும் எண்ணற்ற மக்களின் ஆன்மீகத் தந்தையாக மாறவும் புனிதராய் வாழவும் செய்திருப்பதை உணர்ந்தேன் என்றார். வேதாகமத்தில் “விசுவாசத் தினாலேயே ஆபிரகாம் தாம் பரிசோதிக்கப்பட்ட பொழுது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தார். ஏனெனில் கடவுள் இறந்தோரையும் எழுப்ப வல்லவர் என்பதை மனதில் கொண்டிருந்தார்” என நாம் வாசிக்கிறோம் (எபி 11:17‡19)
ஆண்டவர் இயேசு இறைவன் நீடிய கருணையும், இரக்கமும், திக்கற்றவர்களுக்கு ஆறுதலும், எளிய வர்கள் மீது பரிவும் கொண்டவர் என்பதை உவமானத்தில் விளக்கு கிறார். மத் 20:1‡16வரை வாசிக்கும் பொழுது திராட்சைத் தோட்ட உரிமையாளர் தன் தோட்டத்திற்கு கூலி ஆட்களைத் தேர்ந்து அனுப்பும் சம்பவத்தைக் காண்கிறோம்.
அதிகாலையில் அமர்த்தப்பட்ட வர்களுக்கும், காலை 9.00 மணிக்குப் பணிக்குச் சென்றவர்களுக்கும், அதுபோலவே நண்பகல் 12 மணிக்கும் மாலை 3 மணிக்கும் ஆட்களைத் தேர்வு செய்து அனுப்புகிறார். கடைசியில் மாலை 5 மணிக்கும் வேலை கிடைக்காமல் வீணே இருந்த வர்களையும் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப்பி எல்லோ ருக்கும் கூலி கொடுக்கிறார்.
மாலை 5 மணி வரைக்கும் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் யார்? வயதானவர்கள், உடல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பலமிழந்து நின்றவர்கள், ஊனர்கள், குருடர்கள். இவர்களை யாரும் வேலைக்குக் கூப்பிடவில்லை. ஆனால் வேலை கிடைத்தால் கொஞ்சம் வயிற்றுக்காவது உணவு கிடைக்குமே என ஏங்கியவர்கள்.
மற்றவர்களால் உபயோகமற்ற வர்கள் எனப் புறந்தள்ளப்பட்ட வர்களையும் இறைவன் அன்போடு நேசிக்கிறார். அவர்களின் நல் வாழ்வை விரும்புகிறவர். அவர்களின் உயர்வில் மகிழ்வு கொள்கிறவர் ஆண்டவர் என்பதை இயேசு நமக்கு எடுத்து ரைக்கிறார். தி.பா. 145ல் விழுந்து நொந்து போன யாவரையும் ஆண்டவர் தாங்குகிறார். தாழ்த்தப் பட்ட அனைவரையும் தூக்கி விடுகிறார் எனக் காண்கிறோம்.
புனித பவுல் தன் இறைப்பணி முழுவதிலும் அவர் ஜெபிப்பவராக, ஜெபத்தில் வலிமை பெறுபவராக, ஜெபத்தால் மட்டுமே இயக்கப்பட்ட வராக இருக்கிறார். திருத்தூதர் பணியில் 16:11-15 வரை வாசிக்கும் பொழுது புனித பவுலும் சீலாவும் பிலிப்பு நகரின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள யூதர்களின் ஜெபிக்கும் இடம் தேடிச் செல்கிறார்கள். அவர்கள் ஜெப வாஞ்சையுடன், ஜெபத்தில் மட்டுமே இறை வல்லமையைத் தேடுபவர்களாக, இறைவனின் ஆவியினால் மட்டுமே வழிநடத்தப் படுபவர்களாக இருப்ப தினால்தான் இறைப்பணியில் அவர்களின் வல்ல செயல்களைக் காணமுடிகிறது.
குறி சொல்லும் ஆவியைக் கொண்ட பெண்மணி இவர்களைப் பார்த்து “இவர்கள் உன்னத கடவுளின் ஊழியர்கள். மீட்பின் வழியை உங்களுக்குப் போதிக்கிறார்கள்” எனக் கத்துகிறாள். இறைவன் கொடுத்த வல்லமையால் எப்பிசாசையும் துரத்து கிறார்கள். பொறாமைப்பட்டவர் களால் நையப்புடைக்கப்பட்டு, விலங்குடன் சிறையில் அடைக்கப் பட்டாலும் உள்ளம் மட்டும் இறைப் புகழ் பாடும் மகிழ்ச்சியடைகிறது.
சிறையினின்று கைவிலங்குகள் நொறுக்கப்பட்டதைக் கண்டு ஆச்சரிய மடைந்த சிறைக்காவலனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் போதித்து ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். “ஆண்டவர் இயேசுவின் மேல் விசுவாசம் கொள். நீயும் உன் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்ற விசுவாச உறுதிப்பாட்டை அளிக்கிறார்கள்.
ஒவ்வொரு குருவும், இறைப்பணி யாளரும் ஜெபத்தில் இறைவல்லமை பெற்று இறைப்பணி செய்வோம். ஆமென்.
Fr. ச. ஜெகநாதன்,அருப்புக்கோட்டை

இது பூக்களின் காலம் . . . மெளனத்தை உடையுங்கள்

உலகினில் அநியாயம் நடக்கும்
ஒவ்வொரு சமயமும்
அடக்க முடியாத
ஆத்திரத்தினால்
உங்களால் குமுறிக்
கொந்தளிக்க முடிந்தால்
நாம் தோழர்களே - சேகுவேரா

நட்சத்திரங்களைப் போல்
அத்தனை மனிதனும்

சூரியனாய்ப் பிறப்பதில்லை.
சிலரின் பிறப்பின்போது
அதிகாரமும் அநியாயமும்
தலைவிரித்து ஆடுகிறது.
சிலரின் பிறப்பின்போது
அதிர்ச்சியும் அதிசயமும்
நிகழ்கிறது.
அபூர்வமாய்த்தான் பிறக்கிறார்கள்
ஆக்கபூர்வமாய் சிந்திப்பவர்கள்
தன் கண்ணுக்கு முன்னாடி
நடக்கும் பட்டாம் பூச்சியின்
மரணத்தைக்கூட ஏற்க முடியாதவர்கள்
அப்படி பிறந்தவர்கள்தான்
இவர்களும் 
ஆரவாரமில்லாமல் பிறந்து
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து
நம் மனக்கடலில் ஆர்ப்பரிப்பை
ஏற்படுத்தியவர்
எல்லா இடங்களிலும் தன்னை
ஒரு மனிதனாகவே முன்னிறுத்திக்
கொண்டவர் சேகுவேரா

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு
கொடுத்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்டு
விசம் கொடுத்து கொல்ல வேண்டுமென்றதும்
தன் மரணத்தைச் சீடர்களுக்கு
ஆய்வாக மாற்றித் தந்தானே
சாக்ரடீஸ்
இப்படி செய்ய எத்தனை பேருக்கு
வாய்க்கும்?
சிலுவையில் அறைந்து
சித்திரவதைப் படுக்கையிலும்
பாவம் இவர்கள் அறியாமல் செய்கிறார்கள்
இவர்களை மன்னியும் என்று சொல்ல
எத்தனை பேரால் முடிந்தது
மீட்பரைத் தவிர.
ஆதிக்க சக்திகளுக்கும்
அடக்குமுறைக் கண்களுக்கு மட்டுமே
இவர்கள் நெருப்புத் துண்டாய்
இருந்திருக்கிறார்கள்.
சகமனிதரை மனிதராய்
மதித்திருக்கிறார்கள்
ஆகவே
தோழர்களாய் இன்னும்
இருக்கிறார்கள்
இவ்வழி நடந்தால்
நாமும் தோழர்களே
(இன்னும் பூக்கும்) ஜே. தமிழ்ச்செல்வன்

ஒளி பிறந்தது

கிறிஸ்துமஸ் காலம் என்பது ஒவ்வொரு கிறிஸ்துவன் வாழ்வில், நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கும் காலம்.  ஒவ்வொரு வருடமும் புதிது பதிதாய் எதையாவது செய்து இயேசுபிரானின் வருகையை உறவுகளுடன், நண்பர்களுடன் கொண்டாடும் காலம்.  இந்த இனிய அனுபவம் ஒவ்வொரு வாழ்த்தையும் முகவரியிடும்போது “ஆஹா! நம் உறவு, நம் நட்பு, அந்த வசந்த காலங்கள்!” நினைத்தாலே மனதில் ஊற்றெடுக்கும் உன்னத உணர்வுகள்.  அவர்களை நாம் இன்னும் மறக்க வில்லை என்ற மன நிம்மதியினால் நமக்கும், நாம் இன்னும் நினைவில் நிற்கிறோம் என்கிற சந்தோ­த்தைப் பெறுபவர்களுக்கும் தரும் இனிய காலம்.
  வருடத்தின் கடைசி நாட்களைக் களிப்புடனும், புது வருடத்தில் புதிய நாட்களைப் பூரிப்புடனும் தொடங்கும் காலம்.  வீட்டைத் தூய்மைப்படுத்தும் போது அதனுடன் உள்ளமும் தூய்மை பெறும்.  இயேசு பாலன் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் பிறக்க வேண்டுமே என்கிற ஆதங்கம். கேரல்ஸ் கீதம் என்னும் முன்னறிவிப்புப் பாடல்கள் உடலையும் உயிரையும் சிலிர்க்கச் செய்யும்.  வீட்டை அலங்கரிக்கும்போது உலக அதிபதி நம் இல்லத்தில் பிறக்கப் போகிற பிரமிப்பு.  நட்சத்திரங்களை வீட்டு வாயிலில் கட்டும் போது “இதோ இந்த இல்லத்தில் மீட்பர் பிறந்துள்ளார்” என்கிற அங்கீகாரம்.  கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும்போது “மரமே இவ்வளவு அழகென்றால் மனித மனம் எவ்வளவு அழகாக இருக்க வேண்டும்” என்கிற உணர்வு.  சின்னக் குடிலை அலங்கரிக்கும் போது “அவருக்கு நிழல் தருகிறோம்” என்கிற எண்ணமும், அதில் பாலன் இயேசுவைக் கிடத்தியதும், அவரின் எளிமைக் கோலம் கண்டு நம் மனதில் ஏற்படும் சிலிர்ப்பும் தாழ்மையும் சொல்லில் அடங்காத உணர்வுகளாகும்.
புத்தாடை அணிந்து, ஆலயம் சென்று வந்து, அறிந்தோர் தெரிந்தோருடன் அன்பைப் பகிர்ந்து, அறியாதவர்களையும் வாழ்த்தி . . .  அப்பப்பா!  இவ்வருடத்தின் சோதனைகள், சோர்வுகள், வியாதிகள், தோல்விகள், பிரிவுகள், பாவப் போராட்டங்கள் எல்லாம் கொஞ்சம் மறைந்துப் போக, புது வருடத்தை முறையாய் வரவேற்பதில், சகல ஆசீரும், சமாதானமும் குறைவின்றிக் கிடைத்திட ஜெபத்தோடு காத்திருக்கும் சுகமே சுகம்.
எல்லாம் வருடா வருடம் செய்து வந்தாலும் விக்கி மனதில் ஒருவித வெறுமை இருந்து வந்தது.  குற்ற உணர்வு ஒன்று அடிமனதில் குத்திக் கொண்டே இருந்தது.  வருடம் முழுவதும் மறந்தாலும் இந்த கிறிஸ்துமஸ் காலம் அவனில், அவனுடைய தவறைச் சுட்டிக்காட்டவே செய்தது.  எவ்வளவு பெரிய தவறை, நம்பிக்கைத் துரோகத்தைச் செய்து விட்டு நம்மால் எப்படி இவ்வளவு நிம்மதியாக இருக்க முடிகிறது!  தவறு செய்வது மானிட இயல்புதான்.  அந்தத் தவறுக்கும் மன்னிப்பு பெறுவதும், பிராயசித்தம் செய்வதும்கூட மானிட இயல்புதானே.  தவறு செய்யும் தைரியம் இருக்கும்போது அதற்கு மன்னிப்பு கேட்கும் தைரியமும் இருக்க வேண்டுமே,
யோசித்து யோசித்து தெளிவடைந்த விக்கி கடைக்குச் சென்று ஒரு அழகான கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டையை வாங்கி வந்தான்.  வாழ்த்துக்களோடு கூட ஒரு கடிதமும் எழுதினான்.  “பிரியமுள்ள தோழிக்கு, நண்பன் விக்கியின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.  உறவும் பிரிவும் வாழ்வில் சகஜம்.  உறவையும் தந்து, பிரிவையும் தந்த என்னால் உன்னிடம் மன்னிப்பு கேட்கவோ, பிராயசித்தம் செய்யவோ மனம் இல்லாமல் போய்விட்டது.  அது என் கோழைத்தனம்.  என்னால் நீ பட்ட மன உளைச்சலின் அளவு சொல்லில் அடங்காதது.  சொல்லில் அடங்காதது என்று  எனக்குத் தெரியும்.  இத்தனை வருட பாவத்திற்குப் பரிகாரமாய் இந்த வாழ்த்து அமையும் என நம்புகிறேன்.”
“என்னை மன்னிப்பாயாக.  இறை இயேசுவின் அருளும் ஆசீரும் உன்னை வழிநடத்தவும், உன் மனதிற்கு ஆறுதலும் அளிப்பதாக.  இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”.  ஏதோ ஒரு தைரியத்தில் எழுதி பிரியாவின் முகவரிக்கு அனுப்பினான்  விக்கி.  மனதில் இருந்த ஒரு பெரிய சுமை இறங்கியதைப் போலிருந்தது.  மன்னிப்பு கேட்டுவிட்ட மகிழ்ச்சியில் மன்னிப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையிலே கிறிஸ்துமஸின் உண்மை யான மகிழ்ச்சி மனதில் தோன்ற, “ஒளி பிறந்த”  தெளிவு மனதில் ஏற்பட்டது.
சாந்தி ராபர்ட்ஸ்

“வார்த்தை” மனுஉருவானவர்


கிறிஸ்துவின் பிறப்பு எங்ஙனம் நிகழும்?
கன்னி தூயஆவியால் கருத்தரிப்பது எப்படி?
தன் மூளை பலத்தால் எதையும்
பகுத்தாயும் மனிதன்
தூய ஆவியை நம்புவானா?
அவனிடம் உள்ள இரு வேறு
ஆவிகளைத்தான் இனம் காணுவானா?
மரபணு மூலம் மாற்றம் விளையும்
அதீத சிந்தனை
சிக்மண்ட் ஃபிராயடைத்தான் போற்றும்!
படைப்பு பரிணாமம் வெவ்வேறு
கூறுகள் என்றால்
மனிதம் அம்மூலக்கூறுகளின்
ஒருமித்த சங்கமம்
ஜென்மப் பாவம் இல்லா மாசற்ற மரியாள்
கண்ணுக்குப் புலப்படாத தூய ஆவியால்
கர்த்தரைப் பெற்றெடுத்தார் என்பது
சாதாரண மனித மூளைக்கு
எட்டாததுதான்
எதை எதையோ அறிவால் தேடும்
அறிவு ஜீவிகளே!
கடவுளின் ஞானத்தைத் தேடுங்கள்!
அவர்தம் ‘இறைவார்த்தை’யைப்
பற்றிப் பாருங்கள்!
அப்போது புரியும்
மனுஉருவானது நிஜம் என்று!
தூயவர் என்று!

ச. செல்வராஜ், விழுப்புரம்

Christmas Message from the Chairman

Dear Fathers / Brothers / Sisters,
Peace of the Babe of Bethlehem!
Loving greetings from Bishop Jude Paulraj. Jesus is born to bring us closer to God’s unconditional love. He came to give us all joy. peace and contentment which the world cannot give. We. priests and religious are called to be transmitters of those kingdom values.
We need to be kingdom people who have God on their side and not the world and worldly attitudes. Let us examine ourselves if we are such people of the Beatitudes! The Beabe of Bethlehem was himself a weak, vulnerable, totally dependent and ever losing person. That is why he attracts and will ever attract many to His kingdom.
Shall we then totally accept the challenges thrown by our Master Jesus who called us to be His disciples? Then we can be channels of peace and joy and also live our priestly and religious values to extend His kingdom.
Wish you Merry Christmas and joyous New Year!!
Yours in Jesus,
+Bishop Jude Paulraj A.
Bishop of Palayamkottai

கிறிஸ்துமஸ் - கிறிஸ்தவத்தில் பெரும் விழா.


தமது பிறந்த நாள் கூட அறிந்திராத மக்கள், ஒருவேளை அது தெரிந்திருந் தாலும் அந்நாளை விழாவாக இதுவரை கொண்டாடியிருக்காத மக்கள் அல்லது இன்றைய கலாச்சாரத்திலும் பிறப்பு விழாவைக் கொண்டாடி வருகிற நடுத்தர, பணக்கார மக்கள் என்று எல்லோருமே இணைந்து கொண்டாடி வருகிற கிறிஸ்தவ பாரம்பரிய விழாவே இயேசுவின் பிறந்த நாள்.  தாம் பிறந்ததில் கூட மகிழ்ச்சியடையாத மக்கள் இயேசுவின் விழாவில் மகிழ்கிறார்களே! தனது பிறந்த நாளைக்கு என்று புதிய ஆடை கட்டிக்கொள்ளாதவர்கள் இயேசுவின் பிறப்பு விழாவிற் கென்று கடன்பட்டாவது புத்தாடை வாங்கிக் கொள்கிறார்களே!  இது ஒரு மதத்தின் பாரம்பரிய விழா என்பதாலா? அல்லது வாழ்த்துக்களும் பரிசுகளும் பகிரப்படுகின்றன என்பதாலா?  இக்காரணங்கள் எல்லாம் இயேசுவின் பிறப்பு விழாக் கொண்டாட்டத்தின் பின்புலமாக இருப்பினும், முன்னிறுத்தப்படும் காரணம் கடவுள் மேல் உள்ள நம்பிக்கையே.  கடவுள் அருள் பெற்றுள்ள நாம் தொடர்ந்து ஆசீரைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலே.  “கடவுள் மனிதனானார்” என்ற விசுவாசத்தைக் கொண்டாடும் மக்கள் அவரால் வரவிருக்கும் நன்மைத்தனத்தை எதிர்வரும் காலத்திலும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையோடு கொண்டாடப்படும் விழா.
“பிறப்பு” என்பதற்கு மட்டுமே உள்ள விழா அல்ல இது.  ஆனால் இயேசுவின் “வாழ்விற்கே” தரப்படும் சிறப்பு விழா.  இயேசு, பலருள் ஒருவராய் வாழ்ந்து சென்றிருந்தால் இவ்விழா வந்திருக்காது.  ஆனால் அவர் பிறரை வாழ வைத்தார் என்பதால் இவ்விழா.   பிறந்தவர் நீண்ட காலம் வாழ்ந்து 50, 60, 80 என்று ஜூபிலிகளைக் கொண்டாட நினைத்திருந்தால் இவ்விழா இருந்திருக்காது.  பிறந்தவர் பிறருக்காய் இறந்ததால் 2000 ஆண்டு ஜூபிலி கொண்டாட்டம் வந்துள்ளது.  “நான் வாழ்கிறேன்” என்பதல்ல.  “நான் பிறரை வாழவைக்கிறேன்” என்பதுவே பிறப்பின் மேன்மை.  எளியோர், கட்டப்பட்டோர், விழி இழந்தோர், உரிமை இழந்தோர், மன்னிப்பு‡அன்பு என்ற அருள் இழந்தோர் (லூக் 41:8)மீண்டும் அனைத்தையும் பெற்று மகிழவே பிறந்தார்.  “இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்” (லூக் 19:10).
நமது பிறப்பு பொருளுள்ள தாக வேண்டும்.  நான் நன்றாக இருக்கிறேன் என்பது என் பிறப்பின் முழுமையாகாது.  என்னால் பிறர் நன்றாக உள்ளனர் என்பதே எனது பிறப்பின் பொருள்.  இத்தனை ஆண்டுகளாக ஆண்டவர் என்னைக் காப்பாற்றி மீண்டும் புதிய ஆண்டைக் காண இப்பிறப்பு விழாவைக் காணச் செய்தார் என்று பல்வேறு ஜூபிலி விழாக்களைக் கொண்டாடுவது நமது பிறப்பின் முழுமையாகாது.  ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மனிதர்களை வாழவைக்கிறேன் என்பதே பிறப்பின் மேன்மை. 
உனக்காய் எனக்காய் வாழ்ந்தவரைப் பின்பற்றி இல்லாதோர் நலம் பெற, இழந்தோர் மீண்டும் பெற நம்மை அர்ப்பணித்தால் மட்டுமே கிறிஸ்துமஸ் பெருவிழா வாழ்வின் விழாவாகும்.
பிறந்தது வாழ்வதற்கு அல்ல, வாழவைப்பதற்கே!
பணி. சகாய ஜான், செயலர்